‘இயற்றையை வணங்கி வாழ்ந்த சமத்துவ தமிழ்த் தொன்மை’:இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன்.

Article on Climate change -Published in Azhappa art college in Tamil nadu on 22.12.22.Thank you

‘இன்றைய சுற்று சூழல் அழிவுகளுக்குக் காரணம்,இயற்கையைத் தனது சுயநல மேம்பாட்டுக்காகத் துவம்சம் செய்தழிக்கும் மனித இனத்தின் செயற்பாடுகளே’ என்று பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.அதில் முக்கியமானவர் பிரித்தானியாவைச் சேர்ந்த திரு.டேவிட்; அட்டம்பரோ.(1926-)இயற்கைசார் ஆய்வாளர்.இவர் உலகம் தெரிந்த பிரபலமான சுற்றாடல் சூழ்நிலைஅறிஞராகும்.இவர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக,மனித வாழ்வக்கு இன்றியமையாத இயற்கையின சக்திகள் பற்றி பல தரப்பட்ட ஆய்வுகளைச் செய்திருக்கிறாh

இக்கட்டுரையில் இன்றைய இயற்கை மாசுபடுதலையும், அன்றைய தமிழரின் இயற்கையை மதித்து வாழ்ந்த வாழ்வியலையும் சுருக்கமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறேன்.இதை எழுத என்னைத் தூண்டிய பேராசியர் மா.சிதம்பரம் அவர்களுக்கும்,தமிழரின் சங்க கால இலக்கியப் பொக்கிசங்கள் பற்றிய தகவல்களைத் தந்துதவிய நண்பர்.பத்மநாப ஐயர் அவர்களுக்கும் எனது மிகவும் பணிவான நன்றிகள்.

‘இயற்கையை அழித்தால் மனித இனம் துயர்படும்’என்ற தத்துவக்
கோட்பாட்டை எங்கள் தமிழர் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்குப் பல ஆவணங்கள் உள்ளன.பிரபஞ்சத்தையும்,அதன் செயற்பாடுகளையும் மனித இன மேம்பாடு குறித்த அறிவியற் கருத்துக்களுடன் தமிழ்த் தகமை தொல்காப்பியர் மூவாயிரம் வருடங்களுக்கு முன் இயற்கையும் மனித இனமும் பற்றிய அற்புத கருத்துக்களை எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறார்.

,’நிலம்,தீ. நீர்,ஆவி.வளி’ போன்ற ஐம்பெரும் சக்திகளும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றன எனபதை ‘நிலம் தீ நீர் வளி விசும்பெரு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்'(பொருள்635) என்பதைப் படித்தாற் புரிந்து கொள்ளலாம்.
.
இந்த மாபெரு சக்திகளில்; ஒன்று மாசுபட்டாலும் மிகுதியாகவிருக்கும் அனைத்தும் செயலிழக்கும் என்பது யதார்த்தம். அதுதான் சூழ்நிலை மாசுபடுதலின் அடிப்படைக் கருத்து.
சுற்றாடல் சூழ்நிலையின் பாதிப்பு என்னெவென்று மனித இனத்தையே அழித்தொழிக்கும் என்பதைத் தற்போது நடந்துகொண்டிருக்கும் கோவிட்-19 கொடுமையின் தாக்கம் சொல்கிறது..
மனிதன் இயற்கையின் ஒரு படைப்பே அவன் தன்னைச் சுற்றியிருக்கும்~’சூழலையழித்தால்’ என்ன பேராழிவுகள் வரும் என்பதை இன்று எங்கள் கண்களுக்கு முன்னால் தொடரும், பேரழிவுகளிகளான,பெருவெள்ளம், சூறாவளி.பூமியதிர்ச்சி,நிலச்சரிவு,கொரணா கொடிய வியாதி என்று பல அழிவுகளைப் புரிதலால் தெளிவாக உணரலாம்.

இயற்கைசார்ந்து வாழ்ந்த தமிழர்கள்,இந்தியாவின் நாகரீக வளர்ச்சியில் முன்னணியிலிருந்தவர்கள்.இயற்கையின் மாபெரு சக்திகளையுணர்ந்து இயற்கையுடன் வாழப் பழகியவர்கள்.தங்கள் வணக்க முறை தொடங்கி, வாழ்வியலின் அங்கங்களான கலை. தொழில்,பொருளாதாரம் அத்தனையையும் இயற்கையுடன் பிணைத்தவர்கள்.

தாங்கள் வாழ்ந்த பூமியை ஐந்திணையாகப் பிரித்து அதனுள் மனித அகத்தையும் புறத்தையும் கண்டவர்கள்.குறிஞ்சி (மலைப்பகுதி,பாதுகாப்பு,),முல்லை(காடு,தேடல், மிருகங்களுடான உறவுகள்),மருதம் (ஆற்றுப் படுக்கைகள்,வயல்வெளி,குடியிருப்பு,மொழி, கலை வளர்ச்சி,நாகரீக வளர்ச்சி)நெய்தல்(கடற்கரை சார்ந்த வாழ்வு நிலை,கடல் கடந்த வணிகம்),பாலை (மக்களற்ற வரண்ட பிரதேசம்) எனப் பிரித்து இந்த அகண்ட உலகத்தின் பல பரிமாணங்களைக் காட்டியவர்கள்.

தொழிற் நுட்ப விருத்தியற்ற கால கட்டமான 1850ம் ஆண்டில் உலக வெப்பநிலை பூச்சியமாக இருந்தது. 2020ல் ஒரு பாகை சென்டிகிறேட்டைத் தொடடிருக்கிறது.வெப்பநிலை காரணமாகக் கடல மட்டம் உயர்கிறது.இது தொடர்வதால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் கடற்பகுதி சார்ந்த குடியிருப்புகளைக் கடல் கொண்டு விடும்.உதாரணமாக வேளைச்சேரி மணிப்பாக்கம் போன்ற பகுதிகளின் நிலை மிக ஆபத்தாகவிருக்கும்.அத்துடன் தமிழ் நாட்டில் மழைவீழ்ச்சி 10 மடங்கு அதிகரிக்கும் அந்த மழை இன்றைய நிலையைவிட 60 விகிதம் கூடிய மழைநீரால் வெள்ளப் பெருக்குகள் வரும்.கிட்டத் தட்ட 38 தமிழ் மானிலங்கள் பாதிக்கப் படும்.

.இன்று தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளும் பெரு வரட்சி காரணமாக நீர்;த்தட்டுப்பாட்டால் அவதிப் படுகிறார்கள்.1924ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த காவேரி நிர்pன் அளவு இன்றைய இந்திய மாநில பாகுபாட்டால் மூன்றில் ஒருபங்காக மட்டும் குறைத்துக் கிடைக்கிறது.இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப் படும்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் உள்ள பழைய வரலாற்றைப் பார்த்தால்,தமிழர்கள் விவசாயத்தை எவ்வளவு தூரம் மதித்திருக்கிறார்கள் என்பதற்கு.’உழுதுண்டு வாழ்வாரோ வாழ்வார்,மற்றோர்கள் தொழுதுண்டு பின் செல்பவர்’ என்ற குறள் போதுமானது.அத்துடன்,-‘வரப்புயர நீருயரும்,நிர் உயர நெல் உயரும்’;,
‘தை பிறந்தால் வழி பிறக்கும’ என்ற முதுமொழிகளைச் சொல்லாம்.

இயற்கையைத் தெய்வீகமாகக் கண்ட தமிழர்கள் வைகாசி மாதத்தில்,மழைவேண்டி இந்திர விழா வைத்து மகிழ்ந்தார்கள்.இதைப் பற்றிய தகவல்களைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.
சங்க காலத்தில் எழுதப்பட்ட திருமுருகாற்றுப் படையில்(புறநாநூறு),முருகனுக்கும் அசுரனுக்கும் நடந்த யுத்தத்தை கார்த்திகை மாதத்தில் வரும் சந்திர உதயத்தின் ஆறாம் நாள் கொண்டாடுகிறார்கள்.சூரியன் வீடு திரும்புவதை மார்கழிமாதத்தில் வாடை விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.இந்த விழாவும் அகநாநூறில் கூறப்பட்டிருக்கிறது.

இன்றைய,சுற்றாடல்,சூழ்நிலை அழிவுக்குப் பெரும் முதலாளிகளின் வணிக விரிவாக்க முன்னெடுப்புக்கள் முக்கிய காரணமாகும்.1988-2015 வரையுமுள்ள கால கட்டத்தில உலகின் பிரமாண்டான 100 தொழில்நிறுவனங்களின் செயற்பாடுகள், உலகின் சுற்றாடல் சூழ்நிலைமாசுபடுவதில் 71 விகிதத்தைக் கொண்டிருக்கிறது.

சுற்றாடல்சூழல் மாற்றத்தலுண்டாகும்,அசுத்தக் காற்றைச் வாசிப்பதால் மனிதர்களை; பலவிதமான நோய்களும் ஆட்கொள்ளும். மாசுபட்ட காற்றால்,நரம்பு மண்டல பாதிப்புக்கள்,சுவாசப்பை தாக்கத்தால் பல நுரையிரல் புற்று நோய்கள்,இருதய வருத்தங்கள்,சிறுநீர்ப்பைகள் சார்ந்த நோய்கள்,தோல் பழுதுபடுவதலான நோய்கள்,ஈரல் நோய்கள்,நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,ஆண்,பெண் இருபாலாருக்கும் மலட்டுத்தன்மை,பெண்களுக்குக் கர்ப்பகாலப் பிரச்சினைகள்,குழந்தைகளின் சாதாரண வளர்ச்சியில் பாதிப்பு,வயது,பால் வித்தியாசமின்றிப் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்றவை அதிகரிக்கின்றன்.இந்தத் தகவல்களின்படி எதிர் காலத்தில் மக்கள் பெருக்கத்தில் பல மாற்றங்கள் உண்டாகலாம்.

தமிழ்நாட்டின் மக்கள் பெருக்கம் எற்கனவே பல காரணங்களால் குறைந்து கொண்டு வருகிறது. உதாரணமாக 1951ம் ஆண்டு,இந்தியாவில் சனத்தொகை மதிப்பீட்டின்படி,இந்திய சனத்தொகையில் 7.43 விகிதமாகவிருந்த தமிழர்களின் தொகை 2011ம் ஆண்டில் 5.96 விகிதமாகக் குறைந்திருக்கிறது.

இன்றைய இளம் தமிழ்ச் சமுதாயம் இந்தத் தகவல்களை உள்வாங்கிக்கொண்டு,உலகத்திற்கு பற்பல பட்ட தத்துவங்களைத் தந்த தமிழ் நாட்டை இயற்கை அழிவிலிருந்து பாதுகாப்பது மிக முக்கியமாகும்.இயற்கையின் மாபெரும் சக்திகளையுணர்ந்த ஆதித் தமிழர்கள்,நிலத்தை ஐந்திணைகளாகப் பிரித்து அவற்றையும் தெயவீகமாக்கி வாழ்ந்தார்கள்.மலைசார்ந்த பகுதியைக் குறிஞ்சி என்றும் அந்தப் பிரதேசக் கடவுள் சேயோன் என்றும்,காட்டுப் பகுதியை முல்லை என்றம் அதற்குக் கடவுள் மாயோன் என்றும் மருதம் என்ற வயல்பகுதிக்கு வாயு கடவுளாகும்,கடல் சார்ந்த பிரதேசக் கடவுள், வருணன் என்றும், வரண்ட பிரதேசக் கடவுள் கொற்றவை என்றும் வழிபட்டார்கள்.

மனித உடலில் மிக முக்கியமான செயற்பாடுகளை, மூளைஇஇருதயம்,நுரையீரல்,ஈரல்,சிறுநீரகங்கள் போன்ற ஐம்பெரும் அவயவங்களும் ஒட்டுமொத்தமாகக் கவனிக்கின்றன.அதேமாதிரி எங்கள் இந்தப் ஆதித் தமிழர் நிலத்தை ஐந்திணைகளாகப் பிரித்து அதன் இயற்கையுடன் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள்.

பேராசிரியர் சி மௌனகுரு அவர்கள் (2006.பக்.24),’19ம் நூற்றாண்டின் பரிணாமவாத மானுடவியலாளர், திரு லுயிஸ் ஹென்றி மோர்கன் என்ற ஆய்வாளர், மனித இன வளர்ச்சியை,காட்டுமிராண்டி நிலை,அநாகரிக நிலை,நாகரீக நிலை என்று பிரித்து ஆய்வு செய்திருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.காட்டு மிராண்டிக் காலத்தில்,காடுகளில் உணவு தேடுதல்,வேட்டையாடுதல்,அதற்கான கருவி தயாரித்தல் என்பன நடை பெற்றிருக்கின்றன.

இதைத் தொடர்ந்த பரிணாம வளர்ச்சியில் தமிழர்களின் நிலை,கி;மு 8ம் ஆண்டு தொடக்கம் மிகவும் கட்டுமானமான சமுதாயமாக இருந்திருக்கிறது,அத்துடன் அவர்கள் இயற்கைசார்ந்த வணக்கமுறையைக் கொண்டிருந்தார்கள் என்பதை,பேராசிரியர் க.கைலாசபதி பதிவிடுகிறார்.அவரின் ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ என்ற நூலில் (குமரன் பிரசுரம்,1996) கட்டுரையில்,’மரவழிபாடு பூர்வீக மக்களின் சொத்தாக இருந்தது.சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு இலச்சினையில்,இரு அரசமரக் கிளைகளுக்கிடையில்,ஆடைகளின்றிப் பெண்தெய்வமொன்று காணப்படுகிறது.மக்கள் உருவங்களும் விலங்குருவங்களும் அவ்வன்னைத் தெய்வத்திற்கு அடிபணிந்து அஞ்சலி செய்கின்றன.அரச மரமும் அதனுடன் சேர்ந்த அன்னை வழிபாடும் ஆரியர் காலத்துக்கு முற்பட்டன என்பதற்கு இதனையும் சான்றாகக் கொள்வார் வரலாற்றாசிரியர்'(பக்5) என்று சொல்கிறார்.தமிழரின் வாழ்வியலில் இயற்கை தெய்வீகமானது. ஐம்பெரும் சக்திகளும் வணக்கத்துக்குரியவை,பாதுகாக்கப் படவேண்டியவை. போற்றிப் பாடப்பட்டவை.

‘முதலெனப்படுவது நிலம்பொழுதிரண்டின் இயல்பென மொழி இயல்புணர்ந்தோரே’ என்கிறார் தொல்காப்பியர்.தொல்காப்பியர் இந்த உலகத்தை,இயற்கையின் அற்புதத்தை,மனித வாழ்வியலை எப்படிப் பார்த்தார் என்பதை முதற்பொருள், கருப்பொருள்,உரிப்பொருள் என்று பிரித்துப்பார்த்து விரிவுரைகள் தந்திருக்கிறார்.கருப்பொருள: அந்த நிலத்தில் வாழும் மிருகங்கள், பறவைகள்,மரங்கள்,தாவரங்கள்;.
உரிப் பொருள்:அந்த நிலவமைப்பில் வாழும்,உணர்வுகள்.(இரக்கம்.காதல்,பிரிவு,சோகம்)

முதற் பொருள்:இடம்-நிலம்,காலம்-ஐம்பெரும் சக்திகள் இரண்டும் ஒன்றுபட்டுத்தான் மனிதத்தை மட்டுமல்லாமல் அத்தனை,உயிரினங்களையும் மரங்களையும் செடி கொடிகளையும் படைத்தன என்று சொல்கிறார் தொல்காப்பியர்.

தமிழரின் இயற்கையுடனிணைந்த சமத்துவ சிந்தனையை அவர்களின் முக்கிய தொழிலாக நீட்சியடையத் தொடங்கிய உளவுத் தொழிலையும் அதைத் தெய்வீகமாகக் கண்ட உருவகம்தான் இலிங்க வழிபாடு என்கிறாh பேராசிரியர் கைலாசபதி;.அதாவது,’நீண்டு குவிந்த கல்வடிவு ஆண்குறியின் அடையாளமாகவும்,அக்கல்லைச் சூழ்ந்தவட்டக் கல்வடிவு பெண்ணின் அடையாளமாகவும் முன்னோரால் கருதப்பட்டது’ (பேராசிரியா (கைலாசபி பக்4).

கால கட்டத்தில்,பிற்காலச் சைவ சித்தாந்த சாத்திர நூலில்:
‘சக்தியும் சிவமுமாய தன்மையிவ் வுலகமெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயர்கண குணியுமாக
வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை யெல்லாம்
இத்தையும்அறியார்பீடலிங்கத்தின் இயல்பும் ஓரார்’
என்று சிவஞானசித்தியார் தத்துவ விளக்கத்தோடு உரைப்பது பண்டுதொட்டு வந்த உண்மையே என்பதில் ஐயமில்லை என்கிறார்.

இப்படிப் பல மிகவும் பழைய வரலாற்றுத் தொன்மையுடைய தமிழரை,’கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று சேர அரசரான ஐயனாரிதனார் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிஞ்சி:அக்கால கட்டத்திலேயே இயற்கையைத் தெய்வமாக வணங்கிய தமிழர் குறிஞ்சித் தலைவனான முருகனைத் தங்கள் தெய்வமாகக் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்.

பேராசிரியர் க.கைலாசபதியின் தகவலின்படி,கிமு.எட்டாம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவிலே தமிழ் மக்கள் சிறுசிறு கூட்டங்களாக வாழத் தொடங்கி விட்டனர் என நாம் கொள்ளலாம் என்கிறார்.(பக்7).அக்காலத்தில் இருந்த ‘வெறியாட்டு-முருக வழிபாட்டிலிருந்த புராதான சடங்கு பற்றிச் சொல்கிறார்(பக்11).
ஆதி மனிதன் மிருகங்களுக்குப் பயந்து,மறைந்திருந்து உணவுதேடியிருந்த இடமான மலைப் பகுதியை மாபெரும் சக்தியாகக் கண்டவர்கள்.அங்கிருந்து தங்களைப் பாதுகாத்த பெண்ணை தலைமகளாக வணங்கியவர்கள். ,’சிரியாவில் அகத்தாத் என்னும் தத்துவமும்,சின்னாசியாவில் சிபெலேயும் எகிப்தில் இஸிஸ் என்ற பெண்வழிபாடுகள் தோன்றிய காலத்தில் ‘சக்தி; வழிபாடு தமிழகத்தில் தோன்றியிருக்க வேண்டும்’என்கிறாh பேராசிரியர் கைலாசபதி.;.

தமிழ் நாட்டில்,பல மலைகளிருக்கின்றன குறிஞ்சித் தலைனான முருகன்’ தமிழக் கடவுள்’எனப் போற்றப்படுகிறான். ஆறுபடை வீடுகள் வைத்து அவனை வழிபடுகிறார்கள் தமிழர்கள்.தமிழர்கள் தங்கள் ‘தமிழ்க்’ கடவுளாக வழிபடும் முருகனின் வழிபாட்டில் இயற்கை முற்று முழுதாக இணைந்திருப்பது தெரியும்.முருகன் என்பது குறிஞ்சி நில சக்தி. கந்தன் என்றும் அவனுக்குப் பெயர் உண்டு. மலைச்சாரலில் வளரும் பெருமரம். அதைச் சுற்றிப் படர்வது வள்ளி.அது அவனின் காதலி வள்ளி;.அவனின் வாகனம் மயில்.

தமிழரின் இலக்கியப் பெட்டகங்களான தொல் இலக்கியப் படைப்புக்கள் மூலம், தமிழரின் இயற்கையை இலக்கியத்தின் ஆரம்பகாலமான கி.மு 3ம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியா முழுதும் பரவியிருந்த தமிழரின்; வாழ்க்கையில் வடக்கில் பரவிய நாடோடி ஆரியரால் கி;மு.1500ம் ஆண்டளவில் ஹரப்பா,சிந்துவெளி இடங்களில் அழிக்கப பட்டதாகப் பேராசிரியர் க.கைலாசபதி (1966) குறிப்பிடுகிறார்.

ஏனென்றால் அக்காலத்தில் ஆரியர் அழித்த ஹரப்பா என்னும் நகரமே வேதத்தில், ஹரியூப்பா (சு.ஏ.627) என்று வடமொழி வடிவில் இடம் பெற்றிருப்பதாக கோசாம்பி என்னும் அறிஞர் கருதுவர்'(பக் 6). அவர்களால் தென்னாட்டின் கடவுள்கள்,வேறுபெயர்களில்- பணம் படைக்கும் கடவுளர்களாக உருவாக்கம் செய்யப் பட்டனர்.உதாரணம் முருகக் கடவுள் ஸ்கந்தாவாக மறுபெயர் பெற்றதைச் சொல்லலாம்.இன்றைய பூவுலம் பணவெறி பிடித்த,உலகத்தின் ஒரு விகிதமானவர்களல் அழிக்கப் படுவதுபோல் அன்றும் இன்றும் தங்கள் தன்னலத்திற்காக,ஆரியர்கள்,அகில உலகமே மதித்த தமிழரைச் சாதி ரீதியாகப் பிரித்து, சரித்திரங்களையும் திரிவுடுத்துகிறார்கள்.(உதாரணமாக,தமிழர்கள் கலாச்சாரங்களை ஒப்புக் கொள்ளாமல் தங்கள் அடையாளங்களை முன்னெடுப்பது)

முல்லை-இயற்கையான காற்று மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாகும்.அதற்கு மரங்கள்தேவை.ஆனால், உலகின் வனங்கள் கடந்த 1960ம் ஆண்டிலிருந்து இன்றுவரை 60 விகிதத்தில் அழிக்கப்பட்டு விட்டது.’காடழிந்தால’ மழையும் கெடும்’ என்றார் அவ்வையார்.
தமிழர்களின் ‘அநாகரிக’ காலத்தில் அதாவது,குறிஞ்சிப் பகுதியிலிருந்து முல்லைப் பகுதியாக காட்டுப்பகுதிக்குத் தொடர்ந்தபோது,விவசாயம், மிருகங்களைத் தங்கள் தொழிலுக்காகப் பயன்படுத்துவது போன்ற விடயங்கள் நடந்திருக்கின்றன.அதைத் தொடர்ந்து சில மிருகங்களையும் மற்ற உயிரினங்களையும் தங்களின் இயற்கைசார்ந்த வணக்க முறையில் இணைத்துக் கொண்டார்கள் என்பதற்கு இயற்கையை வழிபாட்டு முறையில் இன்றும் பல தடயங்களுள்ளன.

மருதம்-தமிழ் சமுதாயத்தின் சமத்துவத்தை’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற அற்புதமான கோட்பாட்டுடன் முன்னெடுத்திருக்கிறார்கள்.விவசாய சமுதாயத்திற்கு இந்தச் சமத்துவக் கட்டுமானம் அத்தியாவசியமானது.ஆதிகாலம் தொடங்கியே விவசாயத்தில் ஆண்கள் மட்டுமல்லாத பெண்கள் முக்கிய பங்கெடுத்திரு;கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக.

‘பொருபடை தருஉங்கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் இன்றதன் பயனே’ என்ற புறநானூற்றடிகளை முன்வைக்கிறார்.க.கைலாசபதி.

இன்றைய இந்தியாவில் விவசாயம். பயிர் செய்கைகளில் பெண்களின் பங்கு 75 விகிதம் என்பதையும் மனதில் எடுத்துக் கொள்ளலாம்.
சங்க காலத் தமிழரின் பொருளாதார வாழ்க்கை விவசாயத்துடன் வளர்ச்சி பெற்றது.;. பெரும்பாலானவர்கள்; சமுதாயத்திற்கான பல்வேறு தொழில்களான வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார்கள்.சாதியற்ற தொல் தமிழர் வாழ்வில் நில உடமையாளர்களாகச் சிலர் இருந்திருக்கிறார்கள். காலக்கிரமத்தில், சமுதாயங்கள் பிளவு பட்டு ஒருத்தரின் நிலத்தை மற்றவர் எடுத்துக் கொள்வதற்கான போர்கள் தொடர்ந்திருக்கின்றன.இவற்றை அகநாநூறு பதிவுகளிற் காணலாம்.

பொதுவாக அவர்களின் வாழ்க்கைஇயற்கையுடன் இணைந்தது. அவர்களின்
சமூக ஒன்றுகூடல் விழாக்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் காலமாற்றத்துடன் இணைந்திருந்தது.தங்களின் விவசாய வளத்திற்கு உதவிய சூரியனை வணங்க தைபொங்கலை அறுவடையின்பின் கொண்டாடினார்கள்.விவசாயத்திற்கு உதவிய மாடுகளுக்குப் பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப் பண்டிகை கொண்டாடினார்கள்.கொடிய வெயிற்காலத்தில் நோய்நொடிகள் வராமலிருக்கவும் சூரியன் திசைதிரும்புவதையும் முன்னிட்டு சித்திரை மாதம் 14 அல்லது 15ம் திகதி பெருவேனில்நாள் கொண்டாடினார்கள்.இதுதான் ஆதிகாலத்தில் தமிழர்களின் புதுவருடமாகவிருந்தது.

தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திய தலைவர்களை வணங்கினார்கள். தங்கள் வாழ்க்கையை வளம்படுத்திய முன்னோர்களை வணங்கினார்கள்.அவை குல தெய்வழிபாடாக நீட்சி பெற்றிருக்கிறது.தொல் தமிழரின் வாழ்க்கை இயற்கையுடன் இணைந்திருந்தது என்பதற்கு இன்னுமொரு சான்றாக இன்றும் நடைமுறையிலிருக்கும் மூலிகை,சித்த வைத்தியம்,ஆயள்வேதம் போன்றவற்றைச் சொல்லலாம். ஆதித் தமிழர்கள்,மக்களுக்குத் தேவையான பல மூலிகைகள்,தாவரங்கள்,அத்துடன் மிருகங்களின் வாழ்வாதாரமான மலைகள்,விவசாயத்திற்கு இன்றியமையாத நீர் நிலைகள்,நிழல் தரும் பெரு மரங்களையும் வணங்கினார்கள்.

நெய்தல்-‘டாகட்ர் சி. பாலசுப்பிரமணியம் அவர்கள், ஐந்திணைகளில் ஒன்றான நெய்தல் பகுதியான கடலை மதித்து,அதன் உதவியுடன் பல நாடுகளுக்கு வணிகம் செய்த விபரத்தைக் கீழ் கண்டவாறு சொல்கிறார்’ கிமு.10; நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த சாலமன் என்னும் கிரேக்க அரசனுக்குத் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்கள் வாயிலாக மயில்தோகை,யானைத் தந்தம்,மணப் பொருள்கள் முதலிய சென்றன.சேரநாட்டு மிளகினைப் பொலீசிரியர்கள் வாங்கினர்.’யவனப் பிரியா’ என்றே மிளகு வழங்கப் பெற்றது.கி;மு.ஐந்தாம் நூற்றாண்ற்கு முன்பே பாபிலோன் நகரத்திறகுக் கடல் வழியாக அரிசி,மயில்.சந்தனம், முதலிய பொருட்களின் பெயர் திராவிடப் பெயர்களாகவே அமைந்திருப்பதைக் காணும்பொழுது பண்டைத் தமிழரின் கடல் வாணிகச் சிறப்பு பெற்றெனப் புலப்படும் என்கிறார்.(மேற்குறிப்பிடப்பட்ட டாக்டர் சி. பாலசுப்பிரமணியத்தின் பதிவில்.சாலமன் என்ற அரசன்,கி.மு 970-931.வரை இஸ்ஸரேல் நாட்டை ஆண்ட ‘யூத’ அரசன் என்றிருக்கவேண்டும்.’யவனர்கள் என்பவர்கள் கிரேக்க,உரோம,மேற்காசிய மக்களைக் குறிக்கும் சொல்லாகும்).தமிழரின் கடற் பிரயாணம் பற்றிச் சொல்லும்போது,தொல்காப்பியரும்,’ முந்நீர் வழக்கம் மகடுவோ டில்லை’ என்று கடற்பயணத்திறகுப் பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என்று விதி கூறியிருப்பது கொண்டு தமிழர் தம் கடற் செலவினைக் குறித்து அறியலாம்.

‘தென்னாடுடைய சிவனே போறி என்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி’என்று தமிழர்கள் சிவனை வழிபடுகிறார்கள்.இன்று இந்தியாவின் மாபெரு மலையும்,சிவனின் உறைவிடமுமாகக் கருதப்படும் இமாலயமே,சூழ்நிலை மாசுபடுதலால் பல மாற்றங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியிருக்கிறது.திரு.டாஷ் எட்.டெல் (2011) அவர்களின் அறிக்கையின்படி,இமாலயம் சார்ந்த பிரதேசத்தின் வெப்ப நிலை கடந்த 102வருட சரித்திரத்தில்(1901-2003) 0.9 செல்சியஸ்; பாகைகள்கூடியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
திரு புட்டியானி(டீhரவலையni நவ யட.2007) அவர்களின் கூற்றுப்படி,இம்மாற்றங்கள் பெருவாரியான வெள்ளப் பெருக்குகளை,இமாலயம் சார்ந்த பிரதேசங்களில் உண்டாக்கும்.மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வார்கள்.இதனால் சில பிரதேசங்கள் தங்கள் தனித்துவத்தை இழப்பது தவிர்க்கமுடியாது.இம்மாற்றங்கள், தவிர்க்கப் படுவதற்கு மனிதர்களின் இன்றைய வாழ்வியல் கருத்துக்களில் அதி முக்கிய மாற்றங்கள் உண்டாவது மிக மிக முக்கியமாகும் என்கிறார்.இன்றைய காலகட்டத்திலேயே,வடக்கில் நடக்கும் இயற்கை மாற்றத்தாலும் வேறு பல காரணங்களாலும் தெற்கு நோக்கி வருபவர்களின் தொகை கூடுவதை அவதானிக்கவும்.

தொல் பெருமை படைத்த தமிழரின் புராதன வாழ்க்கையைச் சொல்லும்,தமிழரின் அற்புத சொத்தான தொல்காப்பியம்,சங்க இலக்கியங்களுக்கு முந்தியது என்பதை செம்மொழி குழவினர் அறிவித்திருக்கிறார்கள் என்று தமிழச்சி தங்கபாண்டியன் 2018ம் ஆண்டு நடந்த கூட்டமொன்றில் சொன்னார்.செம்மொழிக் குழவின் ஆய்வின்படி,தொல்காப்பிய காலம் கி.மு.713ம் ஆண்டு ஆகும்.அதாவது, பேராசிரியர் க.கைலாசபதி சொல்வதுபோல் கி.மு.8ம் நூற்றாண்டில் தமிழரின் வாழக்கை இயற்கையின் பன்முக சக்திகளைப் புரிந்து கொண்ட அறிவியல் சார்ந்ததாக இருந்ததென்றால் அச்சமுகத்தின் அறிவு,இலக்கியம் சார்ந்த வளர்ச்சியின் பிரதிபலிப்புதான் தொல்காப்பியம் என நாம் புரிந்து கொள்ளலாம்.

இன்று இந்தியாவில் சூழ்நிலை மாற்றத்தால் உண்டாகப்போகும் பல மாற்றங்களைத் தடுக்க பல விடயங்கள் முன்னெடுக்கப் படுகின்றன் உதாரணமாக,உலக மாசுபடுதலில் 75 விகித பாதிப்பு,மக்களாலும் இயந்திரங்களாலும் பாவிக்கப்படும் மினசார உற்பத்தியால உண்டாகிறது.மின்சார உதவியற்ற சூரிய ஒளி சோலார் ரெயில் இராஜஸ்தானிலுள்ள ஜோத்பூரில் தயாரிக்கப் பட்டு சோதனை ஓட்டத்திற்குத் தயாராக இருக்கிறது.இந்திய ரயில்வேயின் மாற்று சக்தி மூலத்திற்கான பணியின் முதற் கட்டமாக துவங்கப் பட்டுள்ளது.
இந்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின் பங்களிப்பாக இந்திய ரெயில்வே மறு சுழற்சி இயந்திரம் ஒன்றை மும்பாய் ரெயில் நிலையங்களில் நிறுவியுள்ளது.நாம் குடித்துவிட்டு எறியும் தண்ணீர் போத்தல்களை மறுசுழற்சி செய்ய இயலும்.

அடுத்ததாக மனிதருக்கு மிகவும் தேவையான நீர் பற்றிய விடயத்தைப் பார்க்கலாம்.மலையில் பிறந்த வனத்தில் தவழ்ந்து வயல்களை வளம் படுத்திய நீரை, உயிர்தரும் பெண் தெய்வமாக வழிபட்டு காவேரி என்றும் பொன்னி என்றம் பெயரிட்டு மகிழ்ந்தவர்கள் தமிழர்கள்.’நீரின்றி அமையாது இவ்வுலகு’ என்போர் பெரியோர் வாக்கு.ஆனால்.தமிழ்நாடு பிரமாணடட்மான தண்ணீர்தட்டுப்பாட்டை எதிர் நோக்குகிறது.

இந்தியாவில் எதிர்காலத்தில்; 40 விகிதமான மக்கள் குடிநீரின்றித் துயர்படுவார்கள் சொல்லப்படுகிறது.இதன் எதிரொலி தென்னாட்டையும் பாதிக்கும்.இதனால் தமிழ் அரசும் ஒட்டு மொத்த தமிழர்களும் முக்கிய கவனங்ளைச் செலுத்தவேண்டும்.தமிழ் மக்கள் இயற்கையை வாழ்வில்,வணக்கமுறை என்பவற்றுடன் இணைந்து வாழ்பவர்கள்.தமிழ்நாட்டைத் தூய்மையாக விருத்தி செய்து தமிழர்களின் வளம்பெற எதிர்கால சந்ததி முன்வரவேண்டும்.(முற்றும்)

Posted in Tamil Articles | Leave a comment

‘தனிநாயகம் அடிகளார்’

தமிழத் தொன்மையைத் தேடிய தமிழத் தூதர்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 19.11.22

இங்கு என்னைப் பேச அழைத்த சகோதரி பைந்தமிழ்ச்சாரல்,பவானி அவர்களுக்கும், நெறிப் படுத்திக் கொண்டிருக்கும்திரு ராஜ் குலராஜா அவர்களுக்கும் இங்கு வந்திருக்கும் அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் எனது தாழ்மையான வணக்கம்.

முன்னுரை:

மனிதர்கள், வாழ்க்கை நியதி காரணமாகப் படிக்கத் தொடங்கும் காலத்திலிருந்து வௌ;வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள்.அவர்களின் வாழ்க்கை, அவர்களின் அறிவாலும் அனுபவத்தாலும் இணைந்து செயல்படுகிறது. இந்தப் பிரயாணத்தில், ‘நான் யார்,எனது அடையாளமான மொழியின் தொன்மையென்ன’? என்ற கேள்வியைக் கேட்டுத் தன்னையும், தனது மரபின் தொன்மையையும் பெருமையையும் அறிந்து கொள்ள நினைப்பவர்களாற்தான் இன்று உலகம் பல்வித அறிவைப் பெற்றுத் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது.மேற்குறிப்பிட்ட தகமைகள் இப்படித் தேடலின் மூலம்தான் எங்களுக்குப் பாரிய சரித்திர உண்மைகளை எழுதிவைத்திருக்கிறார்கள். அதில் மிகவும் மேன்மையாகக் குறிப்பிடத் தக்க தமிழ் அறிஞர்களில்; தவத் திரு தனிநாயகம் அடிகளாரும் ஒருத்தர்.

முதலாவது உலகத் தமிழ் மகாநாட்டை 1966ம் ஆண்டு கோலாலம்பூரில் ஆரம்பித்த,இன்றுவரை பதினொரு தமிழாராய்ச்சி மகாநாடுகள் நடக்கக் காரண கர்த்தாவாகவிருந்த, தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளாரை இன்று,தமிழை உலகறியப் பண்ணிய தமிழ் அண்ணலாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.

பல மொழிகள் கற்று பல நாடுகளுக்குச் சென்று தமிழ்ப் பெருமையைப் பரப்பிய’தமிழ்த் தூதுவன்’; என்றழைக்கப் பட்ட தமிழ் மேதகு தனிநாயகம் அடிகளார் தேடிய, எழுதிய.தமிழத் தொன்மை பற்றி ஆய்வதுதான் இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ் மொழிக்கு இலங்கைத் தமிழ் அறிஞர்கள் பல அடிப்படை மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.முதலாவதாக, ஆறுமுக நாவலர் (1822-1730) அவர்கள் தமிழை அச்சேற்றினார்;.முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்(1892-1947);,ஒரு சமயத் துறவியானதும், மதத்தைப் பரப்பும் வேலையைத் தொடராமல்,சாதி மத பேதமற்ற கல்வி மூலம் தமிழை மேன்படுத்தத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். தமிழ்த் தொன்மங்களான இசை இயல் நாடகம என்று முப்பெரும் கலைகளையும் பற்றி ஆய்வு செய்து தமிழுலகிற்கு அர்ப்பணித்தார்.

முத்தமிழ் வித்தகர் விபுலானாந்த அடிகளார்.மேற்கத்திய நாடக சக்கரவர்த்தியாக இன்று உலக மயமாகப் போற்றப் படும் ஆங்கிலேய நாடக அண்ணல் சேக்;ஸ்பியரின்(1564-1616),12 நாடகங்களை ஆய்வு செய்து ‘மதங்க சூழாமணி’ என்ற நூலை எழுதியதால் தொன்மையான தமிழ் நாடகத் துறையை மீளாய்வுக்குத் தூண்டினார். அது மட்டுமல்லாமல்,’யாழ்நூல்’ எழுதித் தமிழனின் மிக மிகத் தொன்மையான ‘யாழ்’இசைக் கருவியின் சரித்திரத்தை ஆராய்வதன் மூலம் தமிழனின் தொன்மையை, தென்னாசிய நாடுகள், மத்தியதரைக் கடல் நாடுகளில் வணிகத் துறையில் கொடி கட்டிப் பறந்தது மட்டுமல்லாமல், தமிழரி;ன தமிழரின் பன் முகத் திறமைகளை எங்கெங்கெல்லாம் நிலை நிறுத்தியிருக்கிறார்கள் என்ற அற்புத ஆய்வு நூலாக’யாழ்நூலைப் படைத்திருக்கிறார்.

தமிழுக்குத் தொண்டு செய்த மேற்கத்தியர்களை எடுத்துக் கொண்டால் கடந்த சில நூற்றாண்டுகளாக அவர்கள் தமிழக்குச் செய்த சேவையாற்தான் தமிழர்களே பல விடயங்களை அறிந்து கொண்டார்கள்.

உதாரணமாக, ஒரு சிலரை இங்கு குறிப்பிடுகிறேன். பெச்சி கொன்ஸ்டான்டினோ யோசப் என்பவா ;(-1680-1747-,இத்தாலிய நாட்டிலிருந்து தமிழத்திறகுக் கிறஸ்தவ மதத்தைப் பரப்ப வந்தவர்.தமிழ் மொழி கற்றுத் தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டவர். தேம்பாவணி என்ற காப்பியத்தைப் படைத்தவர் அத்துடன் கொடுந்தமிழ் இலக்கணம்,இலக்கணத் திறவுகோல், கிளாவிஸ் ஐந்திணை நூல்,தமிழின் முதல் அகராதியான சதுரகராதி எழுதியவர்.தமிழ் இலத்தின் அகராதி, போர்த்துக்கீசியம-;,தமிழ்-இலத்தின் அகராதியையும் எழுதியவர்.திருக்குறள் (அறத்துப்பால்,பொருட்பால்),தொன்னூல் விளக்கம் இரண்டையும் இலத்தினில் மொழிபெயர்த்தவர்.அத்துடன் ‘பரமார்த்த குரு என்ற எள்ளல் (சார்ட்டாய) உரைநடை இலக்கியம் படைத்தவர்.

செக்கோஸ்லாவேக்கியாவைச் சேர்ந்தவர்.தமிழ் சமஸ்கிருதம்,திராவிட மொழிகள் பற்றி ஆய்வு செய்தவர்.திருக்குறளைச் செக்கோஸ்லாவேக்கிய மொழியில் மொழி பெயர்த்தவர்.சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் திராவிட மொழிகள் பற்றி பேராசியராகக் கொஞ்சகாலம் பணி புரிந்தவர். தனிநாயகம் அடிகளாருடனும் சி.ஐ. சுப்பிரமணியம் அவர்களுடனும்; சேர்ந்து முதலாவது மகாநாட்டைத் தொடக்கி வைத்தவர்.

அடிகளாருக்கு முன் தமிழ்ப் பெருமையை நிலைநாட்டப் பாடுபட்ட அத்தனை தமிழ்த் தமமைகளும் சைவ சமய மேம்பாட்டுடன் இணைந்தவர்கள்.

சைவ சமய வழிமுறையில் கல்வி கற்று, தமிழரின் தொன்மையை மொழி மூலமட்டுமல்லாமல், சமய முறையிலும் படித்துத் தெளிந்த அண்ணல்கள். அவர்களிலிருந்து வித்தியாசமான சூழ்நிலையிலிருந்து வந்தவர் தனிநாயகம் அடிகளார்.கிறிஸ்துவரான.தவத்திரு தனிநாயகம் அடிகளார் தமிழ் மொழியின் தொன்மையை நிலைநாட்ட எடுத்த முயற்சிகள் அளப்பரியன.தனி நாயகம் அடிகளார் அவர்களது தமிழ்த் தொண்டை இலங்கை இந்தியா என்ற நாடுகளில் மட்டும் பரப்பாமல் உலகில் 51 நாடுகளுக்குச் சென்று பரப்ப முனைந்தார் என்று சொல்லப் படுகிறது.

.

அவரது ஆரம்ப ஆங்கிலக் கல்வி,ஆவலுடன் அவர்படித்த தமிழ்க் கல்வி,மட்டுமல்லாமல், அத்துடன் மேற்கு நாடுகளிற் கிடைத்த தமிழ் மொழிப் படைப்புகள் அவரின் தேடலை ஊக்கப் படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

தனிநாய அடிகளார்,கத்தோலிக்கனாகப் பிறந்து, துறவியாகி கிறிஸ்துவ தத்தவங்களைத் தமிழின் மூலம் தமிழ் மக்களிடையே பரப்பாமல்.இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் பரவலாகப் பேசப் பட்ட தமிழ் மொழியின் தொன்மையை,பெரும்பாலும் அன்னிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்டிருந்த உலக அரங்கிற்குக் கொண்டு சென்றிருக்கிறார். 1949-1951ம் ஆண்டுகாலத்தில் அவர்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தில்;; ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மற்றைய நாடுகளுக்கும் மட்டுமல்லாமல் மிகவும் விசேடமாகத் தமிழ் நாட்டுடனும் தமிழ் மக்களுடனும் பல நாடுகள் வைத்திருந்த,பன்முகத்தன்மையானதும் பிரமாண்டமானமானதுமான பல சரித்திரங்களைக் கண்டு மகிழ்ச்சி கண்டிருப்பார்.

கடந்த நூற்றாண்டில் தனிநாயகம் அடிகளார் மாதிரி வேறு எந்தத் தமிழ் அறிஞர்களும் இவ்வளவு பாரிய தேடலைச் செய்யவில்லை என்பது எனது அபிப்பிராயம்.

அடிகளாரின் வாழ்க்கையின் ஆரம்பம்:

ஒரு மனிதனின் திறமை அவனுடைய அடிமனத்தில் ஒரு சிறு விதையாக அவனது ஆரம்ப வயதில் விதைக்கப் படுகிறது.அதன் வளர்சியை, அவனது பெற்றோர் மட்டுமல்லாது,அவனது சூழ்நிலை,அவன் வளர்ந்த கால கட்டத்தில் நடந்த அரசியல்,சமூகமாற்றங்கள் அத்துடன் அனது உள்ளுணர்வின் தேடல் என்பன நீட்சி செய்கிறது..

தமிழ்த் திருமகன் தனிநாயகம் அடிகள் அவர்கள் செய்த பணிகளின் பன்முகத் தன்மையை அறிஞர்களாலும் சாதாரண பொது மக்களாலும் மதிக்கும் அளவிற்கு உயர்ந்த வெற்றியை ஆய்வு செய்யும்போது பல நுணுக்கமான விடயங்களை நாங்கள் புரிந்து கொள்ளலாம். அடுத்த வருடம் அவர் பிறந்த நூற்றிப் பத்தாம் ஆண்டைக் கொண்டாடப் போகிறோம்.இதுவரை, அவரின் தமிழ்த் தொண்டு பற்றி பன்முகத் தன்மையான ஆய்வுக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. தமிழரின் தொன்மை சரித்திரத்தைப் பல அறிஞர்களும் ஆயந்து உலகம் பரந்த விதத்தில் பரப்ப வேண்டும் என்பதற்காக,

– 1945ம் ஆண்டு அவரின் 32 வது வயதில்,அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ‘தமிழ்’ மொழி பற்றிய ஆய்வில்; எம்.ஏ பட்டமும்,அதைத் தொடர்ந்து,’தமிழ் இலக்கியத்தில்’; எம்.லிட்.பட்டமும் லண்டன் பல்கலைக் கழகத்தில (1955-57;,’பழம் தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனை’ என்ற பொருளில் ஆய்வு செய்து. முனைவர் பட்டமும் பெற்றவர்.;

-தமிழ்க்கலாச்சாரம் என்ற பத்திரிகை ஆசிரியராக 1951-1959 வரை பணியாற்றியவர்.

-இன்டநாஷனல் அசோசியேசன் போர் தமிழ் றிசேர்ச்’ என்ற அமைப்பை ஆரம்பித்தவர்.

– முதலாவது, தமிழ் மகாநாட்டை ஆரம்பித்தவர்,

-தமிழை வளர்கக்ப் பிறந்த தூதுவனாகக் கருதப் பட்டுப் போற்றப் பட்டவர்.

குடும்பம்: தனிநாயக அடிகளார், 2.8.1913ம் ஆண்டு,ஊர்காவற்துறையிலுள்ள கரம்பன் என்ற கிராமத்திற் பிறந்தார்.தந்தை வழி நெடுந்தீவாகும். தமிழில் ஆர்வம் வந்ததும் அவரது தந்தைவழிப் பூட்டனார் பெயரான ‘தனிநாயகம்’ என்ற பெயரை,திருநெல்வேலி சென்று பணியாற்றும்போது. அந்தப் பிரதேசத்திலிருந்து வந்த அவரின் மூதாதையர் ஞாபகமாக மாற்றி எடுத்துக் கொண்டது. அது தமிழ்த் தொன்மையின் இறுக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

தாயார் சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை. தகப்பனார் நாகநாதன் கணபதிப்பிள்ளை ஸ்ரானிஸ்லஸ்.தந்தையார் கணபதிப்பிள்ளை சைவராக இருந்து கிறிஸ்தவராக மாறியவர் என்று தகவல்கள் சொல்கின்றன,இவரின் பாரம்பரியம் தமிழ்நாடு திருநெல்வேலியுடனிணைந்து..

அடிகளார் பிறந்து,; 21ம் நாள் திருமுழுக்கு (ஞானஸ்னானம்) செய்யப் பட்டு,’சேவியர்’ என்ற பெயர் சூட்டப் பட்டது.அடிகளாரின் முழுப் பெயர்’சேவியர் நிக்கலஸ் ஸரானிஸ்லஸ்’ என்பதாகும்.

ஆரம்பப் படிப்பு,ஊர்காவற்துறை,செயின்ட் அந்தோனி பாடசாலையில் ஆரம்பமானது.அடுத்த கட்டப் படிப்பு 1920ம்-1922 ஆண்டுகளில்,யாழ்ப்பாணம் செயின்ட பற்றிக்ஸ் கல்லூரியில் தொடர்ந்தது. 1919ம் ஆண்டில் முதலாவது உலக யுத்தம் முடிவுற்றது. உலகம் பல கோணங்களில் மிகத் துரிதமாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கையில் படித்த ஆண்களுக்கு 50 விகிதமும படித்த பெண்களுக்கு 50 விகிதமும் என்ற பிரித்தானிய சட்டம் வந்தது. படிப்பவர்களின் தொகை கூடியது.கல்வியின் வளர்ச்சியால் இலங்கை இந்தியா மட்டுமல்ல அகில உலகமே ஒரு புதிய மாற்றத்தை முகம் கொடுத்தது.

வானொலி. திரைப்பட வளர்ச்சிகளால் மக்கள் விரிவான உலக அறிவைப் பெறத் தொடங்கினார்கள்.

அகில உலகிலும் நடந்த,சமுதாய,பொருளாதார,பிரயாண.கல்வி, சிந்தனை மாற்றங்கள் இலங்கையிலும் அந்த மாற்றத்தின் எதிரொலியாகப் பல மாற்றங்கள் வளர்ந்தன.தாயார் இவரை மத குரவாக வரவேண்டும் என்று விரும்பியதாகவும் அவர் அதை ஏற்கவில்லை என்றும், ஆனால் தாயார் அடிகளாரின் பன்னிரண்டாவது வயதில் இறந்ததும் இவரை ஆதரித்த மத குருவின் உதவியுடன் மதகுருவானதாகவும் அவணங்கள் சொல்கின்றன.

தனிநாயக அடிகளார் செயின்ட் பற்றிக்ஸ் கல்லூரிக்குப் போகமுதல் அங்கு முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் 1919ல் விஞ்ஞான ஆசிரியராக அங்கு அழைக்கப் பட்டுப் படிப்பித்தார். 1920ம் ஆண்டில் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் தலைமையேற்றார். அவர் படிப்பித்த இடங்களில்,விபுலானந்த அடிகளார், அங்கு படிக்கும் மாணவர்கள் பல மொழி;களையும் கற்கவேண்டும்,உலக விடயங்களைப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தினார் என்பதை இங்கு பதிவிடவேண்டு:ம். ஏனென்றால், விபுலான்ற அடிகளார் என்ற தமிழுணர்வாணர், தமிழை மட்டும் படித்திருக்காமல்,

சிங்களம்,ஆங்கிலம்,சமஸ்கிருதம்,இலத்தின்,கிரேக்கம்,வங்காளம்,பாளி, அரபியமொழி போன்ற பல மொழிகளையம் கற்றவர்.தமிழ்த் தொன்மையைத் தேட இந்த மொழிகளில் பல படிப்புக்களை மேற் கொண்டவர் என்பதை அவரின் ‘யாழ்நூல்’ஆய்வுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படியே,தவத்திரு தனிநாயம் அடிகளாரும்,பன் மொழிகளைக் கற்றவர்.

20ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து, பல நாடுகளில் மக்கள் தங்கள் அடையாளங்களுக்கும் சுயமரியாதைக்கும் போராடத் தொடங்கியிருந்தார்கள். ஆங்கிலேயரின் அடிமைநாடாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த தெற்கு அயர்லாந்து மக்கள் பிரித்தானியருக்கு எதிராகப் போராடித் தங்கள் சுதந்திரத்தைப் பெற்றார்கள்.

இந்தியாவில் சுதந்திர உணர்வு பரவத் தொடங்கியது.முக்கியமாகத் தமிழ் நாட்டில்,அரசியல்,கல்வி,;தமிழுணர்வு போன்ற விடயங்களில் பல மாற்றங்கள் நடந்தன. பார்ப்பனர்களாலும் ஆங்கிலேயர்களாலும் ஒதுக்கப் பட்டிருந்த தமிழச் சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக விழித்துக் கொள்ள ஆரம்பித்தது.1924ல் ‘சுயஉரிமைக் கட்சியை; ஈ.வே.ராமசாமி தலைமையில் ஆரம்பிக்கப் பட்டது. தமிழ்த் தொன்மையைத் தேடும் ஆவல் தமிழகத்தில் பரவத் தொடங்கியது.

இந்தியாவில், பார்ப்பனர்களால்,’ந சூத்ர மதிமம் தத்யா’ (சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்காதே’ என்ற அடிப் படையில் இரண்டாயிரம் வருடங்களாகத் தமிழ் மக்களுக்குக் கொடுக்கப் படாமலிருந்த படிப்புரிமைக்காக போராட்டங்கள் ஆரம்பித்தன. தமிழர்களுக்கு ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கையில் இலங்கையையைச் சேர்ந்த விபுலானந்த அடிகளாரும் முன்னின்று குரல் கொடுத்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப் பட்டது.

இலங்கையில் விபுலானந்த அடிகளார் தமிழர்களுக்காக,1925லிருந்து 38 பாடசாலைகளை கிழக்கிலும் வடக்கிலும் ஆரம்பித்தார்.;தமிழரின் இயல் இசை,நாடகத் தொன்மையில் அவருக்கிருந்த ஆழ்ந்த பற்றால், ஆங்கில நாடகாசிரியரான சேக்ஸ்பியரின் 12 நாடகங்களை ஆய்வு செய்து ‘மதங்கசூழாமணி’ நூலை 1927ல் வெளியிட்டார்..

இந்தியாவில்,தமிழ் நாடகத் துறையிலும் விழிப்புணர்ச்சியுண்டாகியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழத் துறைத் தலைவராக விபுலானந்த அடிகளார் 1932ல் பதிவியேற்றார்.

அக்கால கட்டத்தில் தனிநாயகம் அடிகளார்,கொழும்பு புனித செயின்ட் பேர்ணார்ட் செமினறில்.படித்தார் இவரது படிப்பு ஆங்கிலத்திலேயே இருந்தது.1931-1934 வரை படித்து பி.ஏ.பட்டத்தை ‘பிலோசபி- இறையியல் தத்துவப் படிப்பில்’ பெற்றார்.

அத்துடன் தனிநாயக அடிகளாரும்,தமிழ்.ஆங்கிலம்,சிங்களம். இத்தாலி,ப்ரன்ஷ்,இரஷ்ய,இலத்தின். ஜேர்மன்,ஸ்பானிஸ்,போர்த்துக்கீஸ், போன்ற மொழிகளில் தேறினார்.

அதைத் தொடர்ந்து,திருவனந்தபுரம் மாவட்டத்தில் (1934-1939) பணியாற்றும்போது,உரோமாபுரி வத்திக்கன் பல்கலைக்கழகம் சென்;று, ‘கார்தாஜினிய மதகுருமார்;’என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையை எழுதி ‘டாக்டர் ஒவ் டிவினிட்டி (தெய்வீக டாக்டர்)’ என்ற பட்டத்தைப் பெற்றார்.

இக்காலத்தில்.ஐரோப்பாவில் வலதுசாரி அரசியல் மிகவும் பிரமாண்டமாக வளர்ந்து வந்தது. ஜேர்மனியல் ஹிட்லரும்,இத்தாலியல் முசொலினியும் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்த முனைந்து கொண்டிருந்தார்கள்.ஹிட்லர் ஆரிய இனவெறியுடன் யூதமக்களைக் கொன்றொழித்துக்கொண்டிருந்தான்.

தனிநாயகம் அடிகளார் ரோமாபுரியல் படிக்கும்போது வத்திக்கன் புத்தக ஆவணங்களில் தமிழில் எழுதப்பட்டிருந்த கிறிஸ்தவ நூல்களைப் பற்றித் தெரிந்து கொண்டார். போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கை மக்களின் சரித்திரத் தடயங்கள்,வணக்கத் தலங்கள், வழிபாட்டு முறைகள் என்பன அடியோடு அழிக்கப் பட்டதும் துப்பாக்கி முனையில் மக்கள் மிரட்டப் பட்டு சமயம் மாற்றப் பட்டதும் அதுவரை அவருக்குத் தெரியாதிருக்கலாம்.

ரோம் நகரில் அவர் படிக்கும்போது, பல விதமான 80.0000 கையெழுத்துப் பதிவுகளுக்கு மேலான வத்திக்கன நூலகத்தை ஒரு புத்தக பொக்கிஷமான அறையாகத் தரிசிரித்திருப்பார்.சமய நூல்கள் மட்டுமன்றி,பழங்காலத்து. பாபிலோனிய, ரோம, கிரேக்க ஆவணங்கள் போன்று வத்திக்கன் நூலகத்தில் கோடிக்கணக்கான நூல்கள் இருக்கின்றன.,கிட்டத்தட்ட உலகத்திலுள்ள பெரும்பாலான மொழிகளிலுமுள்ளன.வேறு எங்கும் கிடைக்காத பலநாடுகளின் பல தகவல்கள் அங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலான நாடுகளின் சரித்திரத் தொன்மைக் கலைகள் பற்றிய தகவல்கள அங்கு இருக்கின்றன.இங்கிலாந்து மன்னர் எட்டாவது ஹென்றி அவரின் காதலி அன்னா பொலினிக்கு எழுதிய 17.காதல்கடிதங்கள் பாதுகாக்கப் பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஜேர்மனியிலிருந்த உணவு முறைகள் பற்றி தகவல்கள சேகரித்து வைக்கப் பட்டிருக்கிறது.1493ம் ஆண்டு,உலகம் உருண்டையானது என்ற சொன்னதால் கத்தோலிக்க மதத்தால் கடுமையாகத் தண்டிக்கப் பட்ட இத்தாலிய அறிஞர் கலிலிலெயொ அவர்களைப் பற்றிய தகவல்கள் என்று எத்தனையோ விதமான ஆவணங்கள் அங்குள்ளன.

கொலம்பஸ் அமெரிக்காவைத் தேடிச்சென்ற வரலாறு,ஆதிகால உலகப்படம்,என்று எத்தனையோ அரிய புத்தகங்கள் இருக்கின்றன.அங்கிருக்கும் புத்தகங்களை நிரைப்படுத்தினால் 31 மைல் நீளத்திலிருக்குமாம்.

அவற்றில்,பல நூல்களைப் படித்துப் பல அரிய விடயங்களைத் தெரிந்து கொண்டதுபோல,அங்கிருந்த தமிழ் நூல்களிலும் எத்தனையோ அறிவைப் பெற்றிருப்பார். அத்துடன் அவருடன் 43 நாடுகளிலிருந்து அங்கு படிக்க வந்து 250 குருமார்களுடன் பல தரப்பட்ட விடயங்களைக் கலந்து பேசித் தெரிந்து கொண்டிருப்பார்.இப்படி ஒரு அதிர்ஷ்டத்துடன் கிடைத்த அற்புதத் திறமையுடன் இந்தியா திரும்பினார்;.

அதைத் தொடந்து,அவர் இந்தியாவில்,திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் என்ற இடத்திலுள்ள செய்ன்ட் திரோசா கொன்வென்டில் 1940-1945 வரை துணைத்தலையாசிரியராகப் படிப்பிக்கும்போது தமிழ் படிக்கும் அவசியம் வந்ததால் தமிழ் படிக்க ஆரம்பித்தார்.

.

அப்போது,அக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருந்தது.சாதி சார்ந்த நிலையில் மக்களை ஒதுக்கி வைத்திருக்கும் வர்ணாஸ்ரமக் கொள்கைக்கெதிரான போராட்டங்கள் ஆரம்பித்தன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்;’ என்ற கணியன் பூங்குன்றனார் அவர்களின்; வாக்கு திராவிடக்கட்சியினால் ஒலிக்கத் தொடங்கியது. தமிழக்கலைகளான இசை இயல் நாடகங்கள் மூலம் தமிழுணர்வைத் தூண்டும் படைப்புக்கள் வெளிவரத் தொடங்கின.

உலக முது மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பதும் தமிழின் வயது 5000-10.000 என்பதும், அத்துடன் தமிழர் நாகரீகம் பத்தாயிரம் வருட வரலாற்றைக் கொண்டது, என்பதையும் தமிழருக்கான இலக்கண நூல் தொல்காப்பியரால் கி. மு. 8ம் நூற்றாண்டிலேயெ எழுதப்பட்டது (கலாநிதி கைலாசபதி1964.) என்பதை எல்லாம் தெரிந்து கொண்டாரோ இல்லையோ தமிழார்வம் அவரை உற்சாகப் படுத்தியிருக்கிறது என்பதை அவரின் பின்னாளில் குறிப்புகளிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

இன்று,2022ல் உலகம் பரந்த விதத்தில் 8 கோடி தமிழர்கள் பல நாடுகளில் வாழ்கிறார்கள் ஆங்கிலம் பேசும் நாடுகளில் பெரிய பதவிகளையம் வகிக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழியின் தொன்மையை ஆங்கிலத்தில் எடுத்துப் பரப்புவோர் மிகக் குறைவே.தொன்மைக்காலத்; தமிழ் வளர்ச்சி,தொன்மைக்காலத்; தமிழரின் சமத்துவ

சமூக அமைப்பு,அக்காலத்தில் உலகில் நான்கு பக்கங்களு;க்கும் கப்பலோட்டி வணிகம் செய்த பெருமை,கலைகளைப் பரப்பிய திறமை, அரச தூதுவர்களாகக் கடமையாற்றிய ஆற்றல்கள் என்பவற்றை அடிகாளார் படித்துணரத் தொடங்கினார்.

தமிழர்களின் நாகரீகமும் வணிகத் திறமையும் மேற்கத்திய நாடுகளான, கிரேக்கம், எஜிப்து, உரோமாபுரி,பாரசிகம், சிரியா, கிழக்காசிய நாடுகளான சீனா,இந்தோனேசியா, தாய்லாந்து,பிஜி,சிங்கப்பூர்மலேசியா,கம்போடியா போன்ற நாடுகளுடன் வாணிப, கலாச்சாரத் தொடர்பை கி.மு 10ம் நூற்றாண்டுகளிலேயே செய்தவர்கள் தமிழர்கள் என்பதற்குப் பல சரித்திர தடயங்கள் உள்ளன. அங்கு தங்கி வாழ்ந்ததற்கும் தரவுகள் உள்ளன.

கிரேக்க திவுகளில் ஒன்றான கிரட் என்ற தீவில் ‘தமிழ’என்பவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கும் தடயங்கள் உள்ளன. கிழக்காசிய நாடுகளில் தமிழர் கலாச்சாரங்கள் பேணப் படுவதை தனிநாயகம் அடிகளார் தாய்லாந்து சென்றபோது, நேரில் கண்டிருக்கிறார்.அந்த அனுவபங்களின் விபரத்தைத், தனிநாயகம் அடிகளாரைப் பற்றிய பல ஆய்வுகளைச் செய்தவரும் அவரின் நூல்களைப் பதிவிட்டவருமான அடிகளார் அமுதன் அவர்கள் அடிகாளரின் தாய்லாந்து பிரயாணத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

தனிநாயக அடிகளார்,தாய்லாந்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு நடந்து மன்னனின் முடுசூட்டு விழாவில்,அங்கு தாய்லாந்து மொழியில் சொல்லப் பட்ட,மந்திரம்,’ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் ஜோதியே’ என்ற தமிழ்த் திருவெம்பாவை மந்திரமெனத் தெரிந்து கொண்டபோது அவர் மெய்சிலிர்த்திருப்பார் என்பது நினைக்கும்போது நான் பெருமைப் படுகிறேன்.

ஆதிகாலம் காலம் தொட்டே,தமிழர்கள் பல நாடுகளிலும், வணிகம் மட்டுமல்லாமல்,கலைப் படைப்புக்களை வெளிநாட்டில் பரப்பியவர்கள்.அதன் தடயங்களாக,பாரசீக,சீனா,மத்திய தரைக்கடல் நாடுகள்,கிரேக்கம்,உரோமாபுரி, போன்ற வெளிநாட்டு நாணயங்கள் தமிழகத்தில் பல இடங்களிலும் கிடைத்திருக்கின்றன.

-உரோமாபுரி பொம்பே நகரில் தமிழ்த் தெய்வத்தின் (இலக்சுமி?) சிலையிருக்கிறது.அத்துடன் தமிழக காரங்களைச் சேர்த்துச் செய்யும் 300 உணவு வகைகளும் உNரொமாபுரியில் இருந்ததாம்.

-கிரேக்க வரலாற்றாசிரியர் ‘மெகதீனெஸ்’ பாண்டிய மன்னனின தலைநகர் மதுரை என்று குறிப் பிட்டிருக்கிறார்.கிரேக்க வரலாறு உரோம வரலாற்றை விடப் பழமையானது. பாண்டிய மன்னனின் சபையில் தமிழ்ப்; புலவர்கள் தங்கள் படைப்புகளை அர்ப்பணித்த சரித்திரமுண்டு. அப்படியானால் கிரேக்க வரலாற்றாசிரியர் கி.மு.4ம் நூற்றாண்டைச் சொல்கிறார் எனவே பலர் சொல்லும் சங்க காலம் என்று சொல்லப் படுவது கி.மு 4ம் நூற்றாண்டிலிருந்து கிபி.3ம் நூற்றாண்டு வரையான கால கட்டம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

தமிழ் ‘சங்க’ வரலாற்று ரீதியில் முரணான தகவல்கள் உள்ளன. உதாரணமாக, சங்கம் என்ற செல்லே தமிழச் சொல் இல்லை.அதுவடமொழிச் சொல். அப்படியானால் தமிழகத்தில் பார்ப்பனிய ஆதிக்கம் வந்தபின்தான் தமிழரின்’ சங்கத் தமிழ்’ வளர்ந்ததா என்பது கேள்வி. நாங்கள் அடிக்கடி கேட்கும் ‘சங்கத் தமிழ்’ சொல்வதாகப் பதிவிடப் படும் சார்ந்த’தமிழரின் தொன்மை கி.மு 3ம் நூற்றாண்டுக்கும் கிபி 3ம் நூற்றாண்டுக்கமிடைப் பட்ட காலமாக இருக்க முடியாது.

தனிநாயகம் அடிகளாரைப் பற்றியறியும் ஆவலுடன் எனது ஆய்வை ஆரம்பித்தபோது, அவரின் பதிவுகளில்;,’சங்கத் தமிழ்’என்று குறிப்பிட்;ட தகவல்கள்; மிகக் குறைவு.தமிழர் தொன்மையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அடக்க முடியாதது என்பதைச் சூசகமாகச் சொல்லிச் சென்றிருப்பவர் தனிநாயகம் அடிகளார்.

தமிழர்களிடமிருந்த பலநாடுகள் தெரிந்து கொண்ட விடயங்கள். தமிழரின் தொல் கலைகள் எங்கெல்லாம் அடித்தளம் அமைத்திருக்கின்றன என்பதை அடிகளாரின் பிரயாணங்களின் தேடுதலுடன் இணைத்துப் பார்ப்பது நன்று.

அதாவது, பேராசிரியர் கைலாசபதி அவர்களின்,’பண்டைத்தமிழர்களின் வாழ்வும் வழிபாடும’ என்ற நூலில் தொல்காப்பிய காலம் கி.மு 8ம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகிறார்.

ஒரு மொழி பேச்சு வழக்கிலிருந்து அதன் நீட்சி இலக்கணத்துடன் வளர்வதானால் அதன் வயது சில ஆயிரம் வருடங்களையாவது கொண்டிருக்கவேண்டும்.

தமிழத் தொன்மை, வாணிபம்,கலைவளர்ச்சி,மற்றைய நாடுகளுடனான அரசியற் தொடர்புளைப்பார்க்கும்போது தமிழர் தொன்மை குறைந்தது ஐயாயிரம் வருடங்களாவது இருக்கும். மனித நாகரிகத்தில் பயிர் விளைச்சலை முதலில் ஆரம்பித்தவர்கள் திராவிடர்கள். தென்னகம் பல் வளம் நிறைந்தது. பயிர்கள் வளர்ந்தன.ஐந்திணை மக்களும் ஒருத்தொருத்தொருக்கொருத்தர் சமத்துவமாக வாழ்ந்திருக்கிறார்கள்.சமூகக் கட்டுமானங்கள்.நிர்வாகம்,கொடுத்தல் வாங்கலான வாணிபம்,வாழ்வின் மகிழ்வைக் கொண்டாடும் வைபவங்கள், இறந்தோரை, முன்னோரை மதிக்கும் பண்பாடுகள், கலாச்சாரவழுமியங்கள் என்பன ஒரு நாகரீக சமூகத்தாற்தான் வளர்க்க முடியும்.’யாதும் ஊரெ யாவரம் கேளிர்’ என்ற தொல் தமிழன் உயர்பண்பு அவர்களை பரந்த உலகத்தடன் இணைத்திருக்கிறது.அதன் சாட்சியங்கள், தமிழருடன் தொடர்பு வைத்திருந்த அன்னிய நாடுகளில் தாராளமாகக் கிடைக்கின்றன.

உதாரணங்களுக்குச் சில இங்கு பதிவாகின்றன.

-அசோகனின் 273-232 (மூன்றாம் நூற்றாண்டு நடுப்;பகுதி.) கால கட்ட கல் வெட்டில் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் திறமை பொறிக்கப் பட்டிருக்கிறுது.

-பாண்டிய மன்னரின் வாசல் காவலர்களாக கிரேக்க நாட்டவர்கள் வேலை செய்த தகவல்களுமுள்ளன.

– முருக வழிபாட்டின் ஆயிரம் வருட தடயங்கள் ஆதிச்ச நல்லூரில் கிடைத்திருக்கிறது.

-தென் கொரியாவில் தமிழ் மொழியின் அடையாளங்களம்,கலாச்சார வழிமுறைகளும் இரண்டாயிரம் வருட நீட்சியாக இன்றும் பரவலாக இருக்கிறது. செப்பவளம் (கிஓ கு வாங் ஓக்) என்ற பாண்டிய இளவரசி தென் கொரிய அரசனான சூரோ என்பவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும்,இன்றும் அங்கு,அந்தத் தம்பதியர்களின் மரபணு சார்ந்த (தமிழ் மரபணு) 6 கோடி (10 விகிதமான மக்கள் தொகை) தென் கொரிய மக்கள் அங்கு இருப்பதாகவம் சொல்லப் படுகிறது. அவர்களின் மொழியில் 500 தமிழ் வார்த்தைகள் ( அப்பா, ஒம்மா) போன்றவை பாவனையிலிருக்கிறது.இறந்தோருக்குப் படைக்கும் தமிழ் மரபு தென் கொரியாவில் தொடர்கிறது. தமிழர்கள் மாதிரியே சூரிய பகவானுக்கு அறுவடை (பொங்கல்) விழா செய்கிறார்கள்.தமிழரின் வெள்ளையணி மாதிரி அவர்களும் வெள்ளையணி பாவிக்கிறார்கள்.வெளியில் காலணியை வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைகிறார்கள்.பண்டைய கால கட்ட குடிசை வீடுகளும் அங்குள்ளன. சாப்பாட்டில் பருப்புவகையுண்டு.

தனிநாயகம் அடிகளார் தொடக்கிய முதலாவது உலகத் தமிழ் மகாநாட்டில்,’தமிழ் நாட்டுடன் தொடர்பு கொண்ட தென்கிழக்காசிய நாடுகள்’ பற்றி ஆய்வுக் கட்டுரை வாசிக்கப் பட்டிருக்கிறது.இதிலிருந்து அவர் தொல் தமிழர்களுக்கும் தென்னாசிய நாடுகளுக்குமுள்ள வரலாற்றைப் பதிவிட்டிருப்பது தெரிகிறது.

அடிகளார்,தேடிய தொன்மைகளில் சிலவற்றைக் குறிப்பிடலாம்.

வாணிபத் தொடர்பால் தமிழர்கள் பல நாடுகளில் குடியேறி வாழ்ந்திருக்கிறார்கள். சீனாவுடன் அவர்களுக்கிருந்த உறவின் அடையாளமாக,அங்கு குடியேறிய தமிழர்கள் கட்டிய சிவன் கோயில்’குவான்ஷோ’ என்ற இடத்திலிருக்கிறது.

கி.மு.20ம் ஆண்டு உரோம சக்கரவர்த்தி ஆகஸ்டஸ் அவர்களை தமிழ் மன்னன் பாண்டியனின் தூதர்கள் வணிபம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளுக்குச் சந்தித்தை நிக்கலஸ் என்பரின் பதிவு லெபனான் லப்பரரியிலிருக்கிறதாம்.

தென்னகத் தமிழருடன்,எஜிப்த்தியர்,உரோமருக்கும், கிரேக்கர்களுக்கும்,யூதர்களுக்கும் இருந்து உறவு பல நூறு வருடங்களாகத் தொடர்கிறது. யூதர்களுடனான உறவு கி.மு.10ம் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது,என்று சொல்லப் படுகிறது. அதாவது யூத மன்னன் சொலமன் அரசனின் மாளிகையை அழகு செய்ய,தங்கம் முத்து, பட்டாடடைகள், சந்தனம் மயிலிறகு என்பன தமிழகத்திலிருந்து சென்றதான தகவலுண்டு. அத்துடன் தமிழர்கள் வாணிபர்களாக மட்டுமல்லாது. கலைஞர்கள், அறிஞர்கள்,அரச தூதுவர்கள்,அரசபடை வீரர்கள் என்ற பல விதத்தில் கிரேக்க, உரோம நாடுகளிலிருந்திருக்கிறார்கள் இத்துடன் அது மட்டுமல்லாமல் உரோம அடிமைகளாகவம் ஏழைத் தமிழர்கள் விற்கப் பட்டிருக்கிறார்கள்.அடிமை வியாபாரம் உலகம் பரந்த விதத்தில் கி மு 5000 வருடங்களுக்கு முன்னரே,பயிர் விளையும் இடத்தில் வேலை செய்யக் கொத்தடிமைகளாக்கப் பட்டதிலிருந்து தொடர்கிறது.

உரோமருடன் நடந்த வணிக காலத்தில்,120 கப்பல்களில் உரோமாபுரியிலிருந்து காவிரிப் பட்டினம் போன்ற துறைமுகங்களுக்குப் பல தரப்பட்ட பொருட்களுடன் வந்தன.

இன்று உலகமெல்லாம் உள்ள 50 கோடி அடிமைத் தொழிலாளர்களில் 80 விகிதமானவர்கள் பெண்கள் என்று சொல்லப் படுகிறது. இன்றைய (18.11.22) செய்தியின்படி பல இளம் பெண்களுக்கு ஓமான நாட்டில் வேலை எடுத்துத் தருவதாகச்சொல்லிக் கடத்தப்பட்டு சந்தைகளில் கொடிக்கணக்பான விலைகளில் விற்கப் பட்டிருக்கிறார்கள். விபச்சாரத்திற்காக விற்கப்படும் இவர்களின் விலை பல கோடிகள்.இதில் இப்போது 43 பெண்கள் அனாதரவற்ற நிலையில் அங்கு நிற்பதாக இலங்கைத் தூதுவரகம் சொல்லியிருக்கிறது.

அக்காலத்திலும்,தென்னகத்தில், கிரேக்க, உரோம அடிமைகளாக,பல இன அழகிய பெண்கள் விற்கப் பட்டிருக்கிறார்கள். இந்த அழகிய பெண்கள் தமிழத்தில் பெரிய தனவந்தர்களுக்கு ஆடல், பாடல் மூலம் சந்தோசப் படுத்த மட்டுமல்லாமல் தனவந்தர்கள், அரசர்கர்களின் பாதுகாவலர்களாகவும் பணி புரிந்தார்களாம்.

சாக்ரட்டிஸ் (கி.மு.470-399) காலத்தில் அவருடன் விவாதம் செய்யும் தகமையுடன் தமிழர்கள் அதன்ஸ் நாகரில் வாழ்ந்தார்களாம். உரோம சாம்ராச்சியத்தின் அறிவின் தலைநகராக இருநதது அலெக்ஸாண்டரியாவில் இந்தியக் (இன்றைய பீகார் அன்றைய மகதம்) கலப்புடைய’அம்மோனியஸ்;’என்ற ஒரு அறிஞர்(கி.மு.நான்காம் நூற்றாண்டு) கல்வி புகட்டினாராம் அவரது சீடன் அவரின் கல்வித்திறனில் மதிப்பு வைத்து ‘ஐ லவ் இந்தியா’ என்று கூவினானம்.’அம்மோனியஸ்’ என்ற இந்தியரின் தத்துவ போதனை முறைதான கிறிஸ்தவ சிந்தனைக்கு வழியாக வந்தது என்ற குறிப்பும் இருக்கிறது.

அலெக்ஸாண்டர் இந்தியாவின் வடபகுதிக்கு (கி.மு 327-325) வந்த கால கட்டத்தைதில் குஜராத் பிரதேசத்தில் கிரேக்கர்கர்கள் வாழ்த்திருக்கிறார்கள். அவர்கள் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறார்கள்.

அசோகன் கால கட்டத்தில்’தர்மர்சக்திதா’ என்ற கிரேக்க பௌத்த குருவை,அசோகன் வெளிநாடுகளுக்கு அனுப்பினானம்.

இந்திய கலைகளுடன் கிரேக்க கலைகள் பின்னிப் பிணைந்தன. கிரேக்க தேவதை ‘டெவிஸ்’இந்திய கங்காதேவி சிலை ஆனாள்.

குள்ளமான கிNரெக்க ‘அட்லஸ்’அவதாரம் சிலை ‘அகத்தியரானதா’? அவர்தான் தொல்காப்பியரின் குருவென மருவு பெற்றதா?

தொல்காப்பியம் எழுதப் பட்ட காலத்தில் வாழ்ந்த ஹோமரின் (கி.மு 8ம் நூற்றாண்டு) இலக்கியங்கள் வட இந்தியாவில் பெருமதிப்பைப் பெற்றன. பேராசிரியர் கைலாசபதி அவர்கள் குறிப்பிடும்போது,ஹோமரின் ‘இலியாட்’ என்ற கதைதான் இராமாயணம் ஆனது என்கிறார். கிரேக்க வனக் கடவுள் டையனிஸிஸ் குறிஞ்சிக் கடவுள் முருகனுடன் இணைக்கப் பட்ட சரித்திரமும் உள்ளது.

யுதர்கள்,இஸ்ரேலில் பிரச்சினை வந்த காலத்தில் கி;மு.6ம்.7ம் நூற்றாண்டுகளில் தென்னகம் வந்திருக்கிறார்கள்.

இயேசுவின் சீடர்களில் ஒருத்தரான செயின்ட் தோமஸ் அவர்கள் கி.பி. 52;ல் தமிழகம் வந்தார் மக்களைக் கிறிஸ்தவர்களாக்கினார். அவரின் செய்ன்ட் தோமஸ் சேர்ச் சென்னையிலிருக்கிறது.

தமிழ் எழுத்துகளுடனான தடயங்கள் தாய்லாந்து,எஜிப்து போன்ற இடங்களிலுள்ள. கி;பி 4ம் நூற்றாண்டில்,தாய்லாந்,இந்தோனேசியா,வியட்நாம் போன்ற நாடுகள் தமிழ் மன்னர் ஆட்சியல் இருந்திருக்கின்றன. இன்றும் தாய்லாந்தின் பல சடங்குகள் தமிழர் பாரம்பரியத்தை ஒட்டியிருக்கிறது.

தமிழர்கள் சூரியக் கடவுளை மிகவும் முக்கியமாக வணங்குபவர்கள்.

கி;பி.12ம் அங்கோவார்ட் கோயில்,’சூரியவர்மன்’ என்ற மன்னரால் நாற்பது ஏக்கர் பரப்பளவான இடத்தில் தமிழகத்தின் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ‘பரமவிஷ்ணு லோக’ என்ற பெயரில் இருந்துது. 213 அடி உயரமானது.இந்தக் கோயிலின் மிகவும் உயர்ந்த கோபுரத்தில,ஒருவருடத்தில் ஒருநாள்; சூரிய வெளிச்சம் உதயமாவதைப் பார்க்க மக்கள் பக்தியுடன் செல்வார்களாம்.

ஆரம்பத்தில்,தமிழர்கள் வணங்கிய, ஒன்பது கிரகங்களையும் பிரதிபலிக்கும் ஒன்பது கோபுரங்கள் இருந்தன. ஆனால் ‘சூரியவர்மனின் மகன் ‘நந்திவர்மன’; புத்த சமயத்தைத் தழுவியபோது பல மாற்றங்கள் நடந்து புத்தக சிலைகள் செதுக்கப் பட்டனவாம்.அங்கோவார்ட் சென்ற தனிநாயகம் அடிகளார் அந்தக் கோயில் பற்றிக் கட்டுரை எழுதப் பட்டதாகச் சொல்லப் படுகிறது.

கம்போடியா மட்டுமல்லாது தென்னாசிய நாடுகளில்,சோழ சாம்ராச்சியம் 9-13ம் நூற்றூண்டு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது.அக்காலத்திறு;கமுதலே கம்போடியா தமிழகத்துடன் தொடர்பிலிருந்தது. வளரும் ஒரு சிறு நாடான கம்போடியாவின் முதல் மன்னனே அங்கு வணிகம் செய்யச் சென்ற ஒரு தமிழன்; என்றும் சொல்லப்படுகிறது.

சோழ சக்கரவர்த்தி,கால கட்டத்தில் தென்னாசிய நாடுகளில் பல விருத்திகள் செய்யப் பட்டன.நெல் பயிர் வளர்ச்சி தொடக்கி வைக்கப் பட்டது.சோழமன்னின் வீரமும் நிர்வாகத் திறமையும் கடல் பரந்து பேசப் பட்டது.மிகவும் வலிமை வாயந்த அரசனான சோழன் 60.000 போர்யானைகளை வைத்திருந்தான்.

சோழனின் பாரம்பரியம் இலங்கையையும் ஆண்டது.திருகோணமலையை ஆண்ட குளக்கோட்டன் மகாராஜா சோழபாரம்பரியம் என்று சொல்லப் படுகிறது.

இலங்கைக்கு விஜயன் வந்த காலத்திலிருந்து கிழக்கிலங்கை தென்னத்துடன் இணைந்து வளர்ந்தது. இன்றும் அழியாத சங்கத் தமிழ்ப் பேச்சு வழக்கு அங்குண்டு.தமிழர் தொன்மையில் நாட்டமுள்ள தனிநாயகம் அடிகளார் அவர்களுக்கு,மட்டக்களப்பு தொன்மை பிடித்திருந்தது என்று’ மட்டக்களப்புத் தமிழகம்’ (ஈழகேசரி பொன்னையா வெளியீட்டு மன்றம் 1964) என்ற நூலிற் குறிப்பிடுகிறார்.

பெரும்பான்மையான கிழக்குத் தமிழ் மக்கள் ,அசோகன் கலிங்க நாட்டை வெற்றி

(கி.மு.260) கொண்டபின்,அக்காலத்து,போர்தர்மப்படி, தோற்றுவிட்ட நாட்டுப், பெண்கள், முதியோர்,குழந்தைகளைக் கொல்லத் தயங்கியதால்,அல்லது அந்த மக்கள் பௌத்தத்தை; தழுவ மறுத்ததால் 150.000 கலிங்க மக்கள் கலிங்கத்திருந்து வெளியேற்றப் பட்டார்கள். இலங்கையில் அப்போது சிவ வழிபாடு செய்யும் மன்னன் மூத்தசிவன் ஆட்சி செய்தான். அக்காலத்தில் கிழக்கில் குடியேறிய மக்கள் சங்கத் தமிழ் கலாச்சாரத்துடன் வந்தவர்கள்.இயற்கையை வணங்கியவர்கள். இயற்கை சார்ந்த பெயர்களை, அதாவது, தாமரைக்கேணி, அக்கரைப் பற்று,கல்லடி,பனங்காடு, ஆலையடி வேம்பு,கல்முனை, வாழைச்சேனை என்றெல்லாம் வைத்தவர்கள். பழங்காலக் கலாச்சாரமான வாழ்வு முறை இன்றும் நடைமுறையிலிருக்கிறது. அவர்களின் கலைகள்,பேச்சு வழக்கு தொன்மையானது.உதாரணமாக, அவ்வையார் தனிப்பாடல் திரட்டில் பாடிய ‘வரகு அரிசிச் சோறும்,வழுதுனங்காய் வாட்டும்,மொர மொரவென புளித்த மோரும்’ இன்றும் பேசப்படும் பழம் கலாச்சாரம் கிழக்கில் உள்ளது.

தனிநாயகம் அடிகளார்,1964ம் ஆண்டில் வித்துவான் வி.சீ. கந்தையா அவர்களால் வெளியிடப் பட்ட,மேற் சொல்லப் பட்ட,’மட்டக்களப்புத் தாயகம்’ என்ற ஆய்வு நூலுக்கு அணிந்துரை எழுதும்போது,’ மட்டக்களப்புக்குச் செல்லும் வெளிநாட்டார்க்கு வியப்பூட்டும் வகையில்அங்கு வழங்குவதும் பழங்காலத் தொடர்புடையதுமான மொழிச்செல்வம் என்னைப் பெரிதும் கவர்ந்துள்ள ஒன்று.அத்துறை,இந்நூலில் விரிவாக ஆராயப்பெற்று,நாட்டு வழக்கிலுள்ள பல சொற்களின் பொருள் வளமும் நன்கு காட்டப் பட்டுள்ளது. தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலே வழக்கின்றொழிந்தனவாய் இங்கே வழங்கி வரும் சொற்கள் சிலவற்றின் பயிற்சிச் சிறப்பைப் பண்டைய இலக்கியத்திலிருந்து எடுத்துக் காட்டி ஆசிரியர் அதற்கு தன் விளக்கம் தந்துள்ளார்’ என்று குறிப்பிடுகிறார்.உதாரணத்திற்குச் சங்கத் தமிழ்ப் புறநானுறு 172ல் உள்ள,

‘ஏற்றுக உலையை ஆக்குக சோறே’ என்ற அடிகள் மட்டக்களப்பில் ஒவ்வொரு நாளும் இன்றும் பாவிக்கப் படும் சொற்களாகும்.

சங்க இலக்கியத்தில் அவர் கண்ட இன்பம்,பல்லாண்டுகளுக்குப் பின் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் பற்றி அவர் குறிப்பிட்ட வார்த்தைகளில் எதிரொலிக்கிறது.அதாவது,’நாட்டுப் பாடற் துறையில்,வளம் நிறைந்தது ஈழத்து மட்டக்களப்பு நாடு என்பதை யாவரும் அறிவர்.எனினும்,அப்பாடல்களின் இன்பத்தினையும்,இலக்கியச் சுவையினையும் பெரும்பாலோர் கருதுவதில்லை.சங்கச் செய்யுள்களை ஒத்து,நலம் கனிந்த அவற்றினை,எடுத்து,அகம் புறம் என்று ஆசிரியர் இருகூறாகப் பிரித்துக் காட்டியிருப்பது,மிக சுவை அளிப்பதாகும்.நாட்டுக் கூத்துக்களைப் பற்றிய பகுதியானது,வேதவியல்,பொதுவியல்,என்ற சங்கச் சான்றோரின் பிரிப்புக்கும், மங்கல முடிவின,அமங்கல முடிவின என்ற மேல்புல அறிஞரின் பிரிப்புக்கும் அமைய நடக்கின்ற தென்மோடி,வடமோடி நாடகங்களை இலக்கணத் துறையோடு சுவைபெறக் காட்டுவதாயுள்ளது.’ என்கிறார்.

இக்குறிப்பை அவர் எழுதம்போது உலகத் தமிழ் மகாநாட்டை நடத்தவில்லை. அவர் அப்போது,தூத்துக்குடி தமிழ் இலக்கிய மன்றத் தலைவரும், ‘தமிழர் பண்பாடு’ என்ற ஆங்கில மாத வெளியீட்டின்ஆசிரியரும்,இலங்கைப் பல்கலைகழகத்த முன்னைநாட் கல்விப்பகுதி விரிவுரையாளரும்,மலாயா தேசத்துப் பல்கலைக் கழகத்துக் கீழைத்தேய மொழித்துறைகளின் தலைவரும்,தமிழப் பேராசிரியருமாகிய வணக்கத்துக்குரிய சேவியர் தளிநாயக அடிகள்’என்றுதான் அறிமுகம் செய்யப் பட்டிருக்கிறார்.அவர் எழுதிய அணிந்துரையில் ஒரே ஒரு வடக்குத் தமிழ் வார்த்தை மட்டும்’ சங்கச் செய்யுள்’ என்பதிலி பதிந்திருக்கிறது.

கடாரம் கண்ட மன்னன் என்று ஒரு தமிழ் மன்னன் புகழப் பட்டபோது அந்தக் கடாரம் என்பது, அவர் 1961-1969 வரை படிப்பித்த மலேசியாசிலிருக்கும் துறைமுகம்தான் என்று புழங்காகிதம் கொண்டிருப்பார்.

தமிழத் தொன்மை பற்றிய அவரின் தேடலுக்கு,1940களில் தமிழ்நாடடில் பரவிய தமிழுணர்ச்சி அவரையும் தூண்டியது என்பதற்கு உதாரணமாக அவர் 1945ல்,அடிகளாரின்,32வது வயதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்க ஆரம்பித்தார். பன்மொழிப் புலவர் என்று அழைக்கப் பட்ட பேராசிரியர்,தெ.பொ. மீpனாட்சிசுந்தரம்,துணைவேந்தர் இரத்தினசாமி இருவரும் தனிநாயகம் அடிகளாரை முதுமாமணிப் பட்டப் படிப்பில் இணைத்தார்கள் என்று தகவல்கள் பகிர்கின்றன.

அக்காலத்தில்,விபுலாந்த அடிகளார் தனது,’ யாழ்நூல்’ பற்றிய ஆய்வுகளையும், தமிழத் தொன்மை பற்றிய பல சொற்பொழிவுகளையும் தமிழகம் எங்கும் செய்துகொண்டிருந்தார்.

விபுலானந்த அடிகளார்,1947ல் உலகும் புகழும் வரலாற்றுத் தொன்மைபற்றிய,

‘யாழ்நூலை’ வெளியிட்டார்.

தனிநாயகம், அடிகளார்,அவ்வருடத்திலிருந்து,1947-1949 வரை அங்கு ‘தமிழ் இலக்கியச் செய்யுளில் இயற்கை’ என்னும் தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்து தனது எம்.லிட்; (மாஸ்டர் ஒவ் லிட்டரேச்சர்) என்ற பட்டத்தை எடுத்தார்.

1949-1951ம் ஆண்டுகளில் தனிநாயகம் அடிகளார்,ஜப்பான்,அமெரிக்கா,சிலி,பிரேஸில்,பெரு,மெக்சிக்கோ,ஈக்குவடோர்,ஆர்ஜன்டினா,உருக்குவெய்,மேற்கிந்தியத் தீவுகளான, ட்னிடாட்,ஜமேய்க்கா,மார்ட்டினி,மத்திய ஆபிரிக்கா,வட ஆபிரிக்கா,இத்தாலி, பாலஸ்தான்,எஜிப்த்,போன்ற பல நாடுகளுக்குச் சென்று,தமிழ்மொழி, தமிழ்த் தொன்மை பற்றிப் பல சொற் பொழிவுகளைச் செய்திருக்கிறார்.தென் அமெரிக்காவிலுள்ள பிரேசில் நாடு போன்று பல ஐரோப்பிய காலனித்துவ நாடுகள் பலவற்றிற்குச் சென்றார்.அவர் உரோமாபரியில் படிக்கும்போது,மேற்சொன்ன நாடுகளிலிருந்து வந்திருந்த குருத்துவ மாணவர்கள் மூலம் அந்நாடுகளின் வரலாற்றுச் சரித்திரம்,சமுதாய அமைப்பு,வாழக்கை முறைகள் என்பவற்றைத் தெரிந்து வைத்திருந்ததும் அவரின் பிரயாணங்களுக்கு ஒரு காரணமாகவிருக்கலாம்.

அத்துடன் அக்கால கட்டத்தில்,அந்த நாடுகளில், கிட்டத் தட்ட இருநூறு சொற்பொழிவுகள்,தமிழ் பற்றிச் செய்திருக்கிறார் என்று சொல்லப் படுகிறது. அந்தப் பிரயாணத்தில் தமிழ் மொழி, தமிழக் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ள பலரைச் சந்தித்தார்.

அவை பற்றி விரிவான விளக்கத்தை 1952ம் ஆண்டு ‘தமிழ் கல்ச்சர்’ என்ற பத்திரிகையைத் தொடங்கிப் பதிவிட்டார்.

ஐரோப்பிய,அமெரிக்கப் பிரயாணங்களின்போது, 16ம் நூற்றாண்டுகளிலிருந்து எழுதப்பட்ட பதிவுகள் வெளி நாடுகளில் இருப்பதைப் பற்றித் தெரிந்து கொண்டார்.

-1554ல் ஆங்கிலம், இலத்தின், போர்த்துக்கீச மொழிகள் தெரிந்த இந்தியர்களால், எழுதப்பட்டு லிஸ்பன் நகர் லைப்பரி ஒன்றில் இருக்கும் ‘கார்ட்லிஹா’என்ற பதிவு.

-1578ல் கேரளாவில் உள்ள கொல்லம் என்ற இடத்தில் எழுதப் பட்ட’தம்பிரான் வணக்கம்’

-1579ல் கேரளாவில் எழுதப்பட்ட ‘கிருத்தியானி வணக்கம்’

-1586ல் எழுதப்பட்ட ;அடியார் வரலாறு’

-1679ல் எழுதப் பட்ட தமிழ்ப் போர்த்துக்கேயர் அகராதி

தமிழரின் தொன்மைச் சரித்திரத்தைத் தேடியதுமட்டமல்லாமல் அதைத் தமிழ்ப் பற்றுள்ள பலருடன் பகிர்ந்திருக்கிறார்.

பல நாடுகளுக்கும் சென்றதால் தமிழின் தொன்மையின்; பெருமைக்கு மெருகூட்டியிருக்கிறார்.

The Carthaginian Clergy

  • Nature in the ancient poetry
  • Aspects of Tamil Humanism
  • Indian thought and Roman Stoicism
  • Educational thoughts in ancient Tamil literature

தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும்.

தமிழ்த்தூது

ஒரே உலகம்

திருவள்ளுவர்

உலக ஒழுக்கவியலில் திருக்குறள்.

  • Reference guide to Tamil studies
  • Tamil Studies Abroad
  • Tamil Culture and Civilization

தமிழ்க் கல்ச்சர் பத்திரிகையில் வந்த கட்டுரைகள்,அத்துடன்,அன்ரம் டி பெறோனிக்கா என்பரால் தொகுக்கப் பட்ட தமிழ்-போர்த்துக்கீச அகராதியை மறுபதிப்பு செய்தார்.அவரின் பிரயாணம் பற்றிய ‘தமிழ்த்தூது 1952ல் வெளியிட்டார். உலக அனுபவங்களை,’ ஒரே உலகம்’ என்ற பெயரில் 1963ல் வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சொற்பொழிவுகள்,’திருவள்ளுவர்’ என்ற மகுடமிடப்பட்டு 1967ல் வெளியானது.அவரின். 30 ஆய்வுக் கட்டுரைகள்.’தமிழக்கலாச்சாரம்’ சஞ்சிகையில் வந்த

70 கட்டுரைகளும் பல்வேறு இதழ்களிலும் கருத்தரங்க இதழ்களிலும் வந்தன். அத்தனையும் தமிழக் கலாச்சாரத்தின்ஈ தொன்மை, அறம், திறமை பற்றியதாகத்தான் இருக்கும் என்ற நம்புகிறேன். ஒட்டுமொத்தமாக 137 பதிவுகளை எழுதியிருக்கிறார்.

இவர் ஒரு தமிழுணர்வாளர் என்பது உலகறிந்த விடயம்.தென்னிந்தியாவில்,இவர் இருந்த கால கட்டமான 1937ல் கொண்டு வரப்பட்ட,இந்தி’மொழித் திட்டம்,அதைத் தொடர்ந்த திராவிடக் கட்சியினர்,மறைமலையடிகள்,சோமசுந்தர பாரதியார்.கே.அப்பாதுரை, முடியரசன், இலக்கியவாணர்,போன்றோரின் போராட்டங்கள், தமிழின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்று உத்வேகத்தை இவருக்குக் கொடுத்ததா என்பதும் எனது கேள்விகளில் ஒன்று.

1938ம் ஆண்டு,1198 தமிழர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகத்தில் கைது செய்யப் பட்டார்கள். தமிழறிஞர் அண்ணாதுரை கைது செய்யப் படுகிறார்.1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் ஆரம்பிக்கிறது.

பல கோடி மக்களின் அழிவுக்குப் பின் இரண்டாம் உலக யுத்தம் 1945ல் முடிவுக்கு வருகிறது.முதலாம் உலக யுத்தம் முடிந்த 1919ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட ஐக்கியநாடுகள் சபை,இரண்டாம் உலக யுத்தம் முடிந்தபின்,1945ல் பெரிதாகச் செயல்பட ஆரம்பிக்கிறது. காலனித்துவ நாடுகள் முன்னெடுக்கும் சுதந்திரப் போராட்டங்களுக்குக் கம்யுனிஸ நாடான சோவியத் இரஷ்யா தலையிட்டு அணுகுண்டுப் போர் வருவதைத் தடுக்கவும் இரண்டாம் போரில் தாங்கள் பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக் முடியாமலும் ஐரோப்பிய நாடுகள் தவிப்பதால் ஆசிய, ஆபிரிக்கஈ தென்அமெரிக்காவிலுள்ள பல நாடுகளுக்குச் சுதந்திரம் கிடைக்கிறது.

1947ல் இந்தியா சுதந்திரம் பெறுகிறது. ஆனால் இந்தி எதிர்பு தமிகத்தில் தொடர்கிறது.1950ம் ஆண்டு’ திராவிட’நாடு கொள்கை முன்வைக்கப் படுகிறது.

அடிகளார். 1949-1951 வரை உலக நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவுகள் செய்கிறார்.பல சரித்திரங்களையும் சுதந்திரப் போராட்ட வரலாறுகள்,காலனித்துவவாதிகளால் அழிக்கப் பட்ட அவர்கள் தொன்மை என்பவற்றை அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

1951-1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வித்துறைப் பணியை அடிகளார் செய்கிறார்கள்.தமிழாராய்ச்சியில் மிகவும் கவனமெடுக்கிறார்.

இலங்கையில், தமிழர்களுக் கெதிராக ஆரம்பித்த,திரு. ஏஸ் டபிளியு. ஆர். பண்டாரநாயக்காவால் 1952ல் ஆரம்பித்த இலங்கை சுதந்திரக் கட்சியினின் சிங்கள இனவாதம் இவரின் சிந்தனையைத் தட்டியதா? அதன் நீட்சியாக,தமிழர் தொன்மையை உலகறிச் செய்த தமிழரின் தனித்துவத்திற்கு அங்கிகாரம் தேட அவர் தனது பணியைத் தொடர்ந்தாரா என்பதையும் நாங்கள் ஒரு கேள்வியாக வைத்துக் கொள்ளலாம். அதாவது, இலங்கை சுதந்திரம் அடைந்த அடுத்த வருடமே, இந்திய வம்சாவழியினர்,இலங்கையில் நாடற்றவர்களாக ஆக்கப் படுகிறார்கள்.இந்தியாவிலும்;,இலங்கையிலும் தமிழர் தங்கள் அடையாளத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.

1953ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்

2 திராவிடக் கட்சி தொண்டர்கள் மரணமடைந்தார்கள். 1955ம் ஆண்டு, தமிழ் மொழியை அழிக்கும் திட்டமான ‘இந்தி’ மொழியைத் தமிழகத்தில் கொண்ட’இந்தி மொழிச் சட்டத்தால்;’ உத்வேகமடைகிறது. அடிகளார்,1955-57ம் ஆண்டுகளில் லண்டன் பல்கலைக் கழகத்தில்,’பழம் தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள்’ என்ற விடயத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

1956ம் ஆண்டு,சிங்களம் மட்டும் சட்டத்திற்கெதிராகத் தமிழ்த் தலைவர்கள், இலங்கையில் நடந்த காலி முகக்கடற்கரையில் தாக்கப் பட்டார்கள்.1958ம் ஆண்டு, தமிழர்களுக்கெதிரான பயங்கர கலவரத்தில் தமிழர்கள் நூற்றுக் கணக்காகக் கொல்லப் பட்டார்கள் உடமைகளை இழந்தார்கள்.ஊரற்று,வேரற்றுத் தவிக்க ஆரம்பித்தார்கள்.1961ம் ஆண்டு. தமிழர்கள் தங்களது அஹிம்சா போராட்டத்தை,’சத்தியாக்’ கிரகமாகத் தமிழப் பகுதிகளில் தொடங்கினார்கள்.இந்தச் சத்தியாக் கிரகத்தில் அடிகளார் கலந்து கொண்டால் அவரின் அரச பணிக்குப் பிரச்சினை வந்தது என்று அருட் தந்தை றெஜினால்ட்.அ.மதி அவர்கள் கனது காணொலியில் பதிவு செய்திருக்கிறார்.

இவையெல்லாம் தமிழுக்குத்;தலைவணங்கும் தனிநாயகம் அடிகளாரை எப்படி வருத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இக்காரணங்கள்தான் அவரை மலேய்சியா செல்லத் தூண்டியது என்பது தெரிகிறது..

1961ல் மலேய்சியா பல்கலைக்கழக இந்திய இயல்வியல் துறைப் பணிக்குச் செல்கிறார்.தமிழை மேம்படுத்துகிறார்.அவரது ஆள்மையும், அறிவும் பலரை மெச்ச வைக்கிறது.

தமிழைப் பரப்பும் வேலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.அதன் முயற்சியாக,

1963ல் தமிழகத்தில் திரு பக்தவத்சலம் அவர்கள் பிரதமராக இருந்தபோது,அடிகளார் அவர்கள்,தமிழகத்தில் ஒரு தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை நடத்த அன்றிருந்தவர்கள் உதவவில்லை என்பது நம்பமுடியாத விடயம்.தனது வாழ்நாளையே தமிழுக்காகச் செலவிடும் ஒரு தகமையை அவர்கள் அறிந்து கொள்ளாதது வேதனையே.

அவரின் தமிழாராய்சி மகாநாடு நடத்தவேண்டும் என்ற அவாவின் முதற்கட்டமாக, அடுத்த வருடம்,தகமைகளான. திரு கமில் சுவலபிலு,வ.ஐ .சுப்பிரமணியம்,மற்றும் 26 அறிஞர் குழுவான,’கீழ்த்தசை அறிஞர்கள்’மகாநாடு டில்லியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, முதலாவது, உலகத் தமிழ்; ஆராய்ச்சி மகாநாடு, 1966 ஆண்டு சித்திரை 17-23ம் திகதிகளில் கோலாலமபூரில் பிரமாண்டமாக நடந்து. அதைத் தொடர்ந்து,

-இரண்டாவது மகாநாடு 1968ல்,திராவிடத் தமிழ் முதலைமைச்சர் அறிஞர் அண்ணா காலத்தில் சென்னையில் நடந்தது.

1969ல் அவரின், 56 வயதில் மலெய்சியாவில்; ஓய்வு பெற்று பிரான்ஸ் வருகிறார்.

பிரான்சில் விசிட்டிங் பேராசிரியராக ஆறுமாதம் வேலை செய்யும்போது

-அங்கு,3வது தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை,1970ல் நடத்துகிறார்.

-அவரின் உதவியுடன்,4வது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு,இலங்கை யாழ்ப்பாணத்தில் 1974ல் நடைபெற்றது.

அடிகளாரின்,அறுபத்தி ஏழாவது வயதில்,1980ம் ஆண்டு அவரின் மறைவு தமிழ் உலகைத் துயரில் ஆழ்த்தியது.

அவர் உயிரோடிருக்கும்போது,தமிழ்த் தொன்மையைப் பதிவாகக் கொண்ட 96.000 அற்புதத் தமிழ் நூல்கள் யாழ்ப்பாணம் நூலகத்தில்,சிங்கள இனவாதிகளால்1981ல் எரிக்கப்பட்டபோது,அந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கியிருப்பார் என்பது கற்பனை செய்யமுடியாதது.

அவரின் மறைவு 1980க்குப் பின்,இதுவரை ஏழு மகாநாடுகள் நடந்திருக்கின்றன.

-5வது மகாநாடு,1981ம் ஆண்டு தமிழக முதல்வராக திரு.எம்ஜி.ஆர் அவர்களிருந்த காலத்தில் நடந்தது.

– 6வது மகாநாடு, மலேய்சியா தலைநகர் கோலாலம்பூரில் 1987ல் நடந்தது.

-7வது மகாநாடு,தமிழர்கள் செறித்துவாழும் மொரிஸியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் நகரில் 1989ல் நடந்தது.

-8வது மகாநாடு,செல்வி ஜெயலலிதா தமிழக முதலவராக இருந்த காலத்தில் 1995ல் தமிழகத்தில் தஞ்சாவூர் நகரில் நடந்தது.

-9வது மகாநாடு, தமிழ்க்கலைஞர் திரு கருணாநிதி அவர்கள் தமிழக முதல்வராக இருந்த 2010ம் ஆண்டு தமிழகம் கோயம்புத்தூரில் நடந்தேறியது.

-10வது மகாநாடு, மூன்றாம் தடவையாக,மலேய்சியாவில் கோலாலம்பூர் நகரில் நடந்தேறியது.

-கடைசியான 11வது மகாநாடு,அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரில் 2019ல் நடந்தேறியது.அந்த மகாநாட்டில் தமிழரின் சமத்துவ உணர்வை வெளிப்படுத்த இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சங்கப் புலவர்,கணியன் பூங்குன்றனார் அவர்களால்;; எழுதப் பட்ட ‘யாதும் ஊரெ யாவரும் கேளீர்’ பாடல் ஒலித்தது.

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றகத் தமிழ் செய்யுமாறே’ என்ற திருமூலர் வாக்குப்படி,தன்னையே தமிழக்காக அர்ப்பணித்த தமிழ்தகமை, தவத்திரு தனிநாயக அடிகளாரை நாங்கள் பின் பற்றி எங்களால் முடிந்த தமிழ்ப் பணிகள்; செய்து தமிழுக்கு தொண்டு செய்ய முனைவோம்.

நன்றி.

Posted in Tamil Articles | Leave a comment

‘புலம் பெயர் தமிழ்ப் பெண்களும் மன அழுத்தமும்’;.இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.-(29.10.22ல் பாரிஸ் நகரில் நடந்த 35வது பெண்கள் சந்திப்பில் வாசித்த கட்டுரை)

‘ஒரு மனிதனின் சுகாதாரமான வாழ்வுக்கு,அவனின்,உடல், உள, சமுதாயத் தொடர்புகளின் நல்நிலைகள் மிக முக்கியமானது’ இந்தக் கருத்து, உலகத்தின் இரண்டாவது கொடிய போருக்குப் பின் அகில உலக சுகாதார சபையால் 1946ம் ஆண்டு வெளியிடப் பட்டதாகும். அந்தப் போர் 1939ம் ஆண்டிலிருந்து 1945ம் ஆண்டுவரை நடந்து பல துன்ப துயர்,அழிவுகை ஏற்படுத்தியது. பல நாடுகளில் மக்களுக்கு ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளை மனதிற் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை சுகாதாரப் பகுதியை ஆரம்பித்துப் பன்முகமான விதத்தில் உலக மக்களின் சுகாதார மேம்பாட்டைக் கவனிக்கிறது.

எங்களின் உடல் நலமென்பது,சத்தான உணவுகள், சுகாதாரமான சூழ்நிi போன்ற விடயங்களில் தங்கியுள்ளது. மன நலம் என்பது முக்கியமான சில காரணிகளால் ஏற்படுகின்றன. உலகத்திலுள்ள அத்தனை மக்களும் ஆண் பெண் என்ற வித்தியாசமின்றி ஏதோ ஒரு கால கட்டத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் இதற்குக் காரணிகளாக:

-எங்கள் மூளையின்; இரசாயன ஏற்றத்தாழ்வு ( கெமிகல் இம்பலன்ஸ்).
மூளையில் பல அல்லது மிகக்குறைவான நரம்பிற்கடத்திகள்,(நியூட்ரோ ட்ரான்ஸ்மிட்டர்ஸ்)இருக்கும்போது,இந்த நரம்பியற் கடத்திகள்,நரம்பு கலங்கள் (நேர்வ் செல்ஸ்) ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள உதவும் இயற்கை இரசாயனங்கள். இந்த இரசாயனங்களின் எடுத்துக்காட்டுகளில் டோபமைன்,செரிடோனின் மற்றும் நோர்பைன்ப்ரைன் ஆகியவை அடங்கும்.
-எங்கள் மருத்துவ நிலைமைகள்.(மெடிகல் காரணிகள்)
-அதிர்ச்சிகரமான வாழ்க்கை நிகழ்வுகள்.(ட்;ராமட்டிக் லைவ் இவண்ட்ஸ். அன்புள்ளவர்களின் இழப்பு,போர்ச்சூழல்,இடம்மாற்றம்,இயற்கை அனர்த்தங்கள்)
-பாரம்பரிய காரணிகள்.
மனநலம் பற்றிய மேற்கத்திய வைத்தியக் குறிப்புகள இவையாகும்.

இவைகளை விட முக்கியமான விடயம், நாங்கள் பின்பற்றவேண்டும் என்று சொல்லப் படும்,எங்களின் பகுத்தறிவற்ற,பெண்மையை வதைக்கும்,பெரும்பான்மையான மக்களை அரைகுறை அடிமைகளாக நடத்தும் சமய, கலாச்சாரப் பண்பாடுகளாகும். ஒரு மனிதனின் அடையாங்கள் பலவாக இருந்தாலும் அவனை அவனின் மொழிதான் மற்றவர்களுக்கு முதற்கண்ணாக அறிமுகப் படுத்துகிறது.

தமிழர் கலாச்சாரம் என்பது முற்று முழுதாகப் பார்ப்பன வக்கிரத்தின் அடிப்படையில்; தொடர்வதாகும்.பார்ப்பனக் கலாச்சாரத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.கி.மு.இரண்டாம் நூற்றாண்டு காலத்தில்,’சுமதி பார்க்கா’ என்பரால் மனுதர்ம சாஸ்திரம் எழுதப்பட்டதாக அம்பேத்கார் தனது ஆய்வில் குறிபிட்டிருக்கிறார். அந்த நூல் பார்ப்பனர்களின் சட்ட நூல் அதைப் பல மன்னர்கள் பின்பற்றினார்கள். அதில் பெண்கள் ஆண்களின் தேவைகளுக்காகப் படைக்கப் பட்டவள்.அவளுக்கு எட்டு வயதுக்கு முதல் திருமணம் செய்து வைக்கப் படவேண்டும், என்று பல விடயங்கள் பெண்களை ஒரு மிருகமாகப் படைத்தருருக்கிறது.எட்டு வயதில் ஒரு பெண்ணுடம்பு குடும்ப வாழ்க்கைகள்ந் செல்லும் முதிர்ச்சியை அடையாது என்பதை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை.

வால்மீகி எழுதிய கம்பராமாயணத்தில,இராம சீதை திருமணம் நடக்கும்போது சீதைக்கு எட்டு வயது,இராமனுக்குப் பன்னிரண்டு வயது. கம்பராமாயணத்தில் கம்பர்,சீதா ராமனை; ‘அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’என்று அவர்களின் காதலைப் புகழ்ந்து தள்ளுகிறார்.இந்த வயதில்,உலகம் பரந்த வித்தில் பச்சிளம் மனத்துடன் எட்டு வயது இளம் பெண்கள் வெளியில்,விளையாடுவதுபோல் கோளாவில் கிராமத்துப் பெண்களான நாங்களும் மாங்கொட்டை அடித்து விளையாடிக் கொண்டிருந்தோம்.

தமிழர்களால் புகழப்படும் இதிசாகங்கமான இராமாயண இதிகாசத்தில்,சூர்ப்பன நகை இராம லஷ்மணனுக்குக் காமவலை விதித்தாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவளின் மூக்கும் முலைகளும் வெட்டப்படுகின்றன.சீதை அவளின் கற்பின் புனித நிலையை உலகத்துக் காட்ட தீPயில் இறக்கப் படுகிறாள். ஐந்தாவது வேதம் எனப்படும் மகாபாரதத்தில் ஐவரைத் திருமணம் செய்த திரவுபதி அன்னியர் முன்னால் துகிலிரிய அவளைப் புணர்ந்த ஐந்து ஆண்மைகளும் ஆவென்று பார்த்துக்கொண்டிருக்கின்றன.

புராணக் கதைகளில்,கடவுள் வந்து மனைவியைப் புணரக் கேட்டால் அவள் கணவன் அவளைத் தானம் செய்கிறான். தேவர்களுக்கெல்லாம் தேவனான தேவலோகத்துத் தலைவனான இந்திரன் எத்தனையோ பெண்களைப் படாத பாடு படுத்தி வைத்திருக்கிறான். புராணக் கதை ஒன்றில் பெண்ணொருத்தி கணவனைத் தலையிற் சுமக்கிறாள்

இக்கதைகளின் எதிரொலி இன்றும் எங்கள் சமுதயத்தில் தொடர்ந்து நடக்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில், பலபேர் சேர்ந்து வித்தியா என்ற பெண்ணைக் கூட்டு வன்முறை செய்தது எங்கள் நாட்டிற்தான் நடந்தது. யோகேஸ்வரி என்ற இளம் பெண்ணை ஒரு பெயர் பெற்ற விரிவுரையாளர் பாலியற் கொடுமை செய்து விட்டு அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல்,யாழ் பல்கலைக்கழகத்தில் பெரிய பதவியைத் தொடர எங்கள் சமூகம் ஆமோதிக்கிறது.அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நடந்து போய்க் கொண்டிருக்கிறது.

எங்கள் இலங்கைப் பெண்கள் சாதி மத இன,வர்க்க,வயது பேதமின்றிப் பல கொடுமைகளைப் பல விதங்களில் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று வறுமை காரணமாக மத்திய தரைக்கடல் நாடுகளுக்குச் செல்லும் இலங்கை இளம் பெண்கள்,விபச்சாரத்திற்காகப் பகிரங்கமாக ஏலம் போட்டு விற்பதாகப் பத்திரிகைச் செய்திகள் வருகின்றன.

இன்று எடுத்துக் கொண்டிருக்கும் ‘புலம் பெயர் பெண்களின் மன அழுத்தங்கள்’ என்ற விடயத்தில் நாங்கள் பேசப்போவது, கிட்டத்தட்ட 27 வருடங்கள் இலங்கைத் தமிழர்கள் முகம் கொண்ட இலங்கை அரசின் இன ஒழிப்புக் கொடுமைக்குத் தப்பி உலகம் பரந்தோடி வந்த இலங்கைத் தமிப் பெண்களைப் பற்றியதாகும்.அவர்களின் மன அழுத்தப்பிரச்சினைகளுக்கு,மேற்சொன்ன காரணிகளில் அவர்கள் முகம் கொடுத்த ‘அதிர்ச்சியான நிகழ்வுகள்’; என்பன முக்கியமானவை.

இலங்கையிற் தொடர்ந்த போரால் எண்ணிக்கையற்ற மக்கள் வயது வித்தியாசமின்றிப் பல மனநோய்களுக்கு ஆளானார்கள். ஆனால் அவர்களின் மனநலத்தை முன்னெடுத்து வேலைசெய்யம் திட்டங்கள் மிகக்குறைவே.
முக்கியமாக, அன்னிய நாடுகளில் பல்வேறு விதமான பிரச்சினைகளால் மன அழுத்தம் வந்து அல்லல் படும் தமிழ் மக்களுக்கு,சுகாதார நலத்தை மேம்படுத்தும் தமிழ் அமைப்பும் ஒன்றிரண்டே. மனநலம் சார்ந்து செயற்படும் பல அரச நிறுவனங்களுக்குத் தமிழர்களின் கலாச்சாரத்தில் பெண்களின் நிலை,இலங்கை அரசின் மனிதமற்ற கொடுமைகள்,குழுக்களுக்கிடையே நடந்த பயங்கரக் கொலைகள், என்பனபற்றிய தெளிவான விளக்கங்கள் அரிது. ஒரு தமிழத் தாய்க்கு முன்னால் ஒரு மகனை இன்னொரு மகன் கொலை செய்ய வேண்டும் என்ற உத்தரவைக் கொடுத்த தமிழ் இயக்கம் தமிழரைக் காப்பாற்ற வந்த புனித அமைப்பாகத் தமிழாரல்க் கொண்டாடப்படுகிறது.

இன்று உலகில் கிட்டத்தட்ட 80 கோடி மக்கள் புலம் பெயர்ந்து அகதிகளாகப் பல நாடுகளில் வாழும் நிலையிருக்கிறார்கள். ஐரோப்பாவில் மட்டும் 6.6 கோடி மக்கள் அகதிகளாக வாழ்கிறார்கள்.
2012ம் ஆண்டுக்கணக்கின்படி, 46 நாடுகளில் பெரிய.சிறு தொகைகளில்.830.000 தமிழர்கள் அகதிகளாகப் பரந்த விதத்தில் வாழ்வதாகச் சொல்லப் படுகிறது.

2012ம் ஆண்டுக்கணக்கின்படி:
கனடா——– 300.000
இங்கிலாந்து 120 000.
இந்தியா 100.000.
ஜேர்மனி 60.000
பிரான்ஸ் 50.000
சுவிட்சர்லாந்து 35..000
சிங்கபூர் 30..000
அவுஸ்திரேலியா 30.000
அமெரிக்கா 25.000
.இத்தாலி 25 000
மலேசியா 24.000
நெதர்லாண்ட் 20.000
நோர்வேய் 10.000
டென்மார்க் 9.000.

இந்த எண்ணிக்கையில் இன்று மிகவும் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கலாம்.அகதிகளாக வந்தவர்களுக்குகு; குழந்தைகள் பிறந்ததால் சனத்தொகை கூடியிருக்கலாம்.அல்லது வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கலாம். உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இங்கிலாந்து இருந்தபோது கணிசமான தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு வந்தார்கள்.

அதே மாதிரி கணிசமான தமிழர்கள் ஆங்கிலம் பேசும் கனடா, அவஸ்திரேலியா,நியுசிலண்ட், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் குடிபெயாந்து கொண்டிருக்கிறார்கள்.இந்தியாவிலிருந்த தமிழ் அகதிகள் இலங்கைக்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் மேற்குறிப்பிட்ட இந்தக் கணக்கில் இல்லாத எண்ணிக்கையில் தமிழர்கள், கம்போடியா,வியட்நாம்,ஆபிரிக்க நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

பிரித்தானியரிடமிருந்து இலங்கை 1948ல் சுதந்திரம் பெற்றுப் பத்து வருடங்களில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள் வெடிக்கத் தொடங்கின.1958 அக்கால கட்டத்திலும் ஆங்கிலம் படித்த தமிழர்கள் கணிசமான தொகையில் பிரித்தானியாவுக்கு வந்தார்கள். அதைத் தொடர்ந்து, கனடா,அமெரிக்காவுக்கும் சென்றார்கள்.இவர்கள் பெரும்பாலும் ஆங்கிலக் கல்வி, தகுதி காரணமாக அழைக்கப் பட்டு வந்தவர்கள். அல்லது அறிவு தேடி வந்து புலம் பெயர் குடிமக்களானவர்களாகும்.

எப்படி வந்தாலும் புலம் பெயர்ந்த வாழ்வது என்பது வாழ்க்கையின் மிகப் பிரமாண்டமான திருப்பு முனையாகும். குடும்பத்தில் ஒருத்தர் இறந்த இழப்பின் துன்பத்திற்கு அடுத்த நிலைத்துன்பம் தான் வாழ்ந்த இடத்தை விட்டு இன்னொரு இடம் செல்வது என்று சொல்லப் படுகிறது. ஓரு மனிதன் வாழ்ந்த அவனின் உணர்வுடனும் உளத்துடனும் இணைந்த இடத்தை விட்டுப் பிரிவது,ஒரு பிறவியிலிருந்து இன்னொரு பிறவியெடுத்த நிலை எடுத்ததற்குச் சமம் என்று சொல்லப் படுகிறது. அதிலும் ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான சூழலில் வாழ்ந்த தமிழ்ப் பெண்கள்,முன்பின் தெரியாத அன்னிய நாட்டில் அகதியாக வந்து, வாழ்க்கையை ஆரம்பிக்கும் போராட்டம் மிகவும் கடினமானது.

முக்கியமாகப் போர்ச் சூழல் காரணமாக இலங்கையை விட்டுப் பிரிந்த பெண்கள் அவர்களின் பல விதமான அடையாளங்களை இழப்பதே பெரிய துன்பம். ஒரு அன்பான குடும்பத்தில் தனது வாழ்வை உற்றார் உறவினருடன் வாழ்ந்து பழகிய ஒரு இளம் பெண் சந்தர்ப்பம் காரணமாகச் சட்டென்று முறிக்கப் பட்ட கிளையாக இன்னொரு நாட்டில் வந்து விழும் துன்பத்தின் கொடுமை சொல்லில் எழுதி விபரிக்கமுடியாதது.அன்னிய நாட்டில் அவள் யாரோ ஒருத்தரின் மகளில்லை, சகோதரர்களின் சகோதரியில்லை.தாத்தா பாட்டியின் பேத்தியில்லை, அண்ணா தம்பி குழந்தைகளின் மாமியில்லை.

அவர்கள் வாழ்ந்த வெளிச்சமான சூழ்நிலை,மலர்களின் மணங்கள்,தெரிந்த மக்களின் கலகலப்பான உரையாடல்கள்,பயமின்றிச் செல்லும் பழகிய பாதைகள்,உணவையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட உறவினர்களோ சினேகிதர்களோ இல்லை. அறிவைத் தேட சுயமொழித்தடயங்கள் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த சமுதாயக் கட்டுமானங்கள் கிடையாது. புலம் பெயர்ந்த பெரும்பாலான தமிழ்ப் பெண்கள்,புதிய உலகம், புதிய வாழ்க்கை, எதிர்பாராத பொறுப்புக்கள் என்பனவற்றை ஒரு குறுகிய காலகட்டத்தில் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானவர்கள்

அகதியாய் வந்த அன்னிய நாட்டில் பெண்கள் முகம் கொடுக்கும் பன்முகச் சாவால்கள் பற்றி எத்தனையோ கதைகள் எழதியிருக்கிறேன் முக்கியமான கதை,1991ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து ஜேர்மனியிலுள்ள பேர்ளின் வந்த ஒரு அகதித் தமிழ்ப் பெண்ணின் கதை. ‘ லோரா லக்ஷம்போர் ஸ்ரா’ என்ற கதையாகும். அவளைக் காப்பாற்ற வேண்டிய கணவனையே காப்பாற்றும் வீட்டுத் தலைவியாக,நடுஇரவில்,கொடிய குளிரில்,முன்பின் தெரியாத சூழ்நிலையில்,பல படிகள் ஏறி இறங்கி வீடுகளுக்குப் போய்ப் பேப்பர் போடும் வேலை செய்கிறாள். வீட்டில் குடிகாரக் கணவன். குற்றம் சொல்லும் மாமியார். போகுமிடத்தில் பாலியல் சேட்டைப் பேச்சுக்கள்,இப்படிப் பல துன்பங்களுக்க முகம் கொடுத்தவர்கள்,கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் இலங்கைத் தமிழ்ப் பெண்கள்.அவள் எப்படியாக மன அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்திருப்பாள் என்று விபரிக்க முடியாது.

‘பெண்களும் மன அழுத்தங்களும் பற்றிய இந்திய ஆய்வு ஒன்றில் பெண்களின் மன அழுத்தம் அவள் திருமணம் செய்தவுடன் பெரிதாக ஆரம்பிக்கிறது என்று சொல்லப் படுகிறது.அதிகம் பழகித் தெரிந்து கொள்ளாத கணவன், திருமணப் பேச்சு வார்த்தைகளிலும் சடங்குகளிலும் கண்டு பேசிய அவனின் குடும்ப அங்கத்தவர்கள், பிறந்த இடத்தை விட்டு வந்த புதிய நகர், அல்லது கிராமம் என்பன போன்ற பல விடயங்கள் திருமணமான மணப் பெண்ணின் உள்ளத்தில் பல அழுத்தங்களையுண்டாக்குகின்றன என்று சொல்லப் படுகிறது.
இதை என்னுடைய கதை ஒன்றில்,’மத்தளங்கள் கொட்டுங்கள்,மேடையொன்று போடுங்கள்,பெட்டை மாட்டைக் கூட்டிவந்து தாலி ஒன்று கட்டுங்கள்’ என்று எழுதியிருக்கிறேன்.

கணவனின் பாலியல் வக்கிரத்தை வெளியில் சொல்ல முடியாது எதிர்கொள்ளும் ஒரு மனைவியின் மனநிலையை விளக்க,’டார்ளிங்’ என்றொரு கதை எழுதியிருக்கிறேன்.
பிடிக்காத கணவனைப் பிரிந்து சென்ற ஒரு தமிழ்ப் பெண்ணை,தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் ஒரு மேற்கத்திய அன்னிய நாட்டுச் சந்தியில் வைத்து எப்படி அவமானம் செய்கிறார்கள் என்பதைப் பற்றி,’நாடகங்கள் தொடரும்’ என்ற கதையில் விபரித்திருக்கிறேன். சொந்த பந்தம் இல்லாத அன்னிய நாட்டில் தனியாக வந்து முதற் பிரசவ வேதனையின் காரணமாக மனநலம் பாதித்த பெண்ணைப் பற்றி, ‘அந்தப் பச்சை வீடு’ என் கதையில் விபரித்திருக்கிறேன்.

1980ம் ஆண்டுக்குப் பின் இலங்கையை விட்டு இடம் பெயர்ந்த தமிழ்ப் பெண்கள் அவர்கள் அகதிகளாயிருக்கலாம் அல்லது வெளி நாட்டில் வாழும் தமிழனைத்; திருமணம் செய்து கொண்டு கொழும்பு, யாழ்ப்பாணத்திலிருந்து அல்லது மட்டக்கழப்பு,திருகோணமலை,வவுனியா வந்தவராக இருக்கலாம்,அதனால் கணிசமானவர்கள் புதிய சூழ்நிலையில் மன அழுத்தத்திறகு ஆளாவது தவிர்க்க முடியாது.
லண்டனில் தமிழ் அகதிகள் அமைப்புத் தலைவியாகவிருந்தபோது நூற்றுக் கணக்கான தமிழ்ப் பெண்களின் பரிதாபமான கதைகளைக் கேட்டிருக்கிறேன். சொந்த குடும்பங்களுக்குள் பெண்கள் படும் வேதனைகள், வேலையிடத்தில் அனுபவிக்கும் பல்முகச் சவால்கள்,நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கும் பொய்ச் சினேகிதங்கள், நிறபேத இனவாத வக்கிரங்கள் என்பன பற்றிப் பல விடயங்களை ஆய்வு செய்திருக்கிறேன்.

இந்தக்கட்டுரை பல பரிமாணங்களில் புலம் பெயர் பெண்களின் மன அழுத்தங்களக்கான காரணங்களையும் அதனால் வரும் பிரச்சினைகளையும்.அதிலிருந்த விடுபட அவர்களுக்கு உதவியாக இருக்கும் சில வழிகளையும் ஆய்வு செய்திருக்கிறேன்.

பெண்களின் மன அழுத்தங்கள் பற்றி இந்தியா தொடக்கம் உலகத்தில் பல நாடுகளில் பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
‘ஆண்களும்தான் பல பிரச்சனைகளைத் தாண்டி புலம் பெயர்ந்திருக்கிறார்கள் அவர்களுக்கு மன அழுத்தம் இல்லையா?’ என்றும் கேட்கலாம். அவர்களின மன அழுத்தம் பற்றிய ஆய்வையும் பல ஆண்டுகளுக்கு முன் செய்திருக்கிறேன்.
நாங்கள் ஏன் பெண்களின் மன அழுத்தம் பற்றிக் கூடிய கவனம் எடுக்கிறோம் என்றால்,

  • அவர்களின்,உடல் உள உறுப்புக்களின் மாற்றங்களினால் வரும் இரசாயன மாற்றங்கள் வித்தியாசமானது.
    -குடும்பப் பணி மிகவும் பன்முகத் தன்மையானது.மனைவி,தாய்,வேலைக்குச் செலு;லும் உழைப்பாளி.முதியோரைப் பார்க்கும் பொறுப்பு,குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றும் பணி, தமிழச் சமூகத்தடன் தங்கள் மதிப்பைத் தக்க வைக்கும் முயற்சி,இலங்கையிலுள்ள உறவினருக்கு உதவுவது என்பன போன்ற பல சுமைகள் ஒரு தமிழ் அகதிப் பெண்ணின் தலையில் சுமக்கப் பட்டிருக்கிறது.
    -சமுதாயத்தில் அவர்களின் நிலை இரண்டாம் நிலையானது. எதையும் சகித்துப் பொறுமையாக வாழ்வது கலாச்சாரக் கட்டுமானமாக எதிர்பார்க்கப் படுகிறது.
    -பொருளாதாரத்தில் ஆண்களுடன் போட்டி போடமுடியாது.பெரும்பாலான அகதிப் பெண்கள்,குடும்பப் பொறுப்பு காரணமாகப் பகுதி நேரவேலையைச் செய்ய வேண்டியிருப்பதால் அவள் கணவனை விடக் குறையச் சம்பளம் எடுக்கிறாள். இதனால் ஆண்களின் பொருளாதாரத்தில் தங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தால் அவளின் நிலை,அவளின் குடும்பத்திலும் சமூகத்திலும் இரண்டாம் நிலையாகக் கணிக்கப் படுகிறது.
  • புலம் பெயர்ந்து வந்து வாழும் அன்னிய நாட்டுச் சவால்கள், அன்னிய நாட்டில் வாழும் பல தரப் பட்ட மக்களின் கலாச்சாரக் கட்டுமானங்கள் அவர்களால் உடனடியாகச் சமாளிக்க முடியாதவை.மொழிப்பிரச்சினை,அன்னிய கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளக் காலம் எடுத்தல்.வெளிநாட்டாருடன் எந்தத் தொடர்புமின்றி வாழ்தல் என்பன இதில் அடங்கும்.
  • தாய்தகப்பனுக்கும் வளரும் குழந்தைகளுக்குமான பிரச்சினைகள்( இன்ட ஜேனரேஷனல் கொன்பிலிக்ட்),முதியோரைக் கவனிக்கும் பொறுப்பு என்று பல காரணிகளால் புலம் பெயர் தமிழ்ப் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

மனநலம் பற்றிப் பேசும்போது. பின்வரும் ஒரு சில விடயங்களை,ஆண்,பெண்; என்ற வித்தியாசங்களுக்கப்பால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

-‘டிப்ரஷன’;- மனச்சோர்வு,மன அழுத்தம்,
-‘டென்ஷன’;-(அன்சயட்டி)தவிப்பு,அங்கலாய்ப்பு,(இவை சாதாரணமாக எல்லோரின்; வாழ்க்கையில் பல தடவைகளில் நடக்கும்ஆனால் அந்த உணர்வு அளவுக்கு மீறிப் போனால் அவர்களின் மன நலம் பாதிக்கப்படும்).
-‘மனிக் டிப்ரஷன்’-இந்தப் பிரச்சினையால் பாதிக்கப் படுபவர்கள், ஒரு நேரம் மிகவும் அளவுக்கு மீறி சிரித்துப் பேசுவார்கள்,இன்னொரு தடவை,அளவுக்கு மீறிய மன ஆழத்தத்தால் சோர்ந்து போயிருப்பார்கள்)
-பெண்களின் மாதவிடாய்க்குச்சில நாட்களுக்கு முன்வரும் ‘மனப்பாங்கு (மூட்)’; மாற்றம்.இது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பெண்களின் சுரப்பிகளின் ஏற்படும் மாற்றங்களால் நடைபெறும்.
-‘ஸ்கிஸோப்ரனியா’இந்தப் பிரச்சினையுள்ளவர்கள்,யதார்தத் உலகத்தை மறந்து விட்டலைவார்கள்
-‘பனிக் அட்டாக்’-ஒரு விடயத்தை எதிர்கொள்ளும்போது பீதியால் அவதிப்படுதல்
-‘ஒப்ஷஸன்’-பிரச்சினையுள் ஆழ்ந்துபோய் அதையே ஒரேயடியாக நினைத்து அழுந்துவது.
-‘ஈட்டிங் டிஸோடர்ஸ்’-சாப்பிடுவதை மனநலப் பிரச்சினையாக்குவது,சொந்தப் பிரச்சினைக்குச் சாப்பாட்டை ஒரு ஆயுதமாகப் பாவிப்பது. உதாரணமாக,கணவனுடன் கோபம் கொண்ட மனைவி சாப்பிடாமலிருப்பது.அதைப்போல் வாழ்க்கைப் பிரச்சனையை எதிர் கொள்ளத் தெரியாமல் அதிகமாகச் சாப்பிடுவது,அல்லது பட்டினி கிடந்து தன்னையும் வருத்தி மற்றவர்களையும் துக்கத்தில் ஆழ்த்துவது.
-போஸ்ட்நேட்டல் டிப்ரஷன்’-குழந்தை பிறந்தபின் பெண்கள் அனுபவிக்கும் மனநலப்பிரச்சினை.இது,500 பெண்களில் ஒருத்தரைத்தாக்கும் மனநலப் பிரச்சினை. இதற்குப் பலகாரணிகளுள்ளன. பிரசவ வேளை அனுபவங்கள்,குழந்தை வளர்ப்பு பற்றிய பயம்,சட்டென்று மாறிய வாழ்க்கையமைப்பு,புலம் பெயர் நாடுகளில் அல்லது,பிரசவவேளையில் உதவுவதற்கு உற்றார் உறவினர் இல்லாத வாழ்க்கை நிலை.
இப்படி எண்ணற்ற பிரச்சினைகளை வரிசைப் படுத்தலாம். (இவற்றை ஆழமாக அறிய விரும்புவர்கள்,என்னுடைய புத்தகமான,’ உங்கள் உடல் உள பாலியல் நலம் பற்றி’ என்ற நூலை வாசிக்கலாம் நூலகம்.கொம் என்று தேடலாம்).

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தபோது அவர்களின் மனதில் சொல்ல முடியாத துன்ப துயர் வலிகளைத் தாங்கிக் கொண்டு வந்தவர்கள். வெளியிற சொல்ல முடியாத பல விடயங்களை மனதின் ஆழத்தில் அழுத்தி வைத்ததால் மன அழுத்தங்களுக்கு ஆளானவர்கள்.
இதன் எதிnhரலி அவர்களின் சொந்த உடல் நலம், குழந்தைகளின் நலம், ஒட்டு மொத்தக் குடும்பத்தினரின் மனநலத்தையே பாதிக்கும்.

உடல் ரீதியாகப் பார்த்தால்,ஆண் பெண் இருபாலாரின் உடல் ளர்ச்சி மூளை வளர்ச்சி ஒரே மாதிரித்தானிருக்கிறது.
அவர்களின் மூளை அவர்களின் எடையில் 2 விகிதம்தான்.ஒரேயளவான மூளைக் கலங்கள்,ஒரே மாதிரியான இரத்தோட்டம், போன்ற இயற்கைக் கொடைகள் அவர்களை வாழ வைக்கிறது.

ஆனால் சில மாற்றங்கள் பருவமடையும் வயதிலிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு பெண்ணின் பருவமாற்றம் 8-14 வயதுகளில் நடைபெறுகிறது.அப்போது அவளின் சுரப்பிகளின் மாற்றம் உடல் உள வலிகளைத் தருபவை. கர்ப்பப்பை பெண் ஹோர்மோனைச் சுரக்க ஆரம்பிக்கும்போதே அவளின் இடுப்பில், அடிவயிற்றில் சாடையான வலியுடன்தான் ஆரம்பிக்கிறது. அவளின் வாழ்நாளில் 350; தடவைகளில் மாதவிடாய்க்கு முகம் கொடுக்கிறாள். பிரசவ காலங்களில்,உறவினர் உதவியின்றி தனியாக மாரடிக்கிறாள். இக்கால கட்டங்களில் அவளது நித்திரை, உணவு முறைகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் உடற் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளன.

மாதவிடாய் நிற்கும் காலத்தில் மன அழுத்தம் வருவது சிலவேளை நடக்கும்.பெண்களின் ஈஸ்ட்ரஜன் சுரப்பி அவர்களின் இனவிருத்தி,பாலுறவு மகிழ்ச்சி,மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும் மிகவும் உதவுகிறது.

ஒரு மனிதனுக்குச் சராசரியாக 7-8 மணித்தியால நித்திரை தேவை. இதில் பிரச்சினை வந்தால் மன அழுத்தம் வர வழியுண்டு. மனித உடல் நாள் முழுக்க வேலை செய்யும்போத வரும் வலி,நோ என்பன நல்லதொரு நித்திரையில் கணமாகிறது.

இது இயற்கையின் நியதி.. விழிப்பும் உறக்கமும். மகிழ்ச்சியும் கவலையும் உடம்பின் இரசாயன வேலைகளின் துணையுடன் தொடர்பவை.தூக்கத்திக்கு மெலட்டோன் சுரம்பியின் உதவி, மகிழ்ச்சிக்கு செரட்டோனின் தடைபட்டால் சாதாரணவாழ்க்கை அசாதாரணமாகிவிடும்.மூளை, உடலின் அத்தனை பாகத்திலுமுள்ள பல (கெமிகல்) வேதியலுக்குரிய-இயைபியலுக்குரியதும் மின்சார (எலக்ட்ரிக்கல்) சைகளை(சிக்னல்ஸ்) தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டும் பெற்றுக்கொண்டுமிருக்கிறது.அவற்றிலிருந்து உடலின் சுக நிலையை அறிகிறது.உதாரணமாக எங்களின் களைப்பு நிலை,மனக்கலக்க நிலை போன்றவை.

உலகத்திலுள்ள அத்தனை மக்களும் ஏதோ ஒரு கால கட்டத்தில் மன அழுத்தத்திற்கு ஆழாகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் அதைப் புரிந்து கொண்டு அதைக்குறைக்கும் அல்லது தவிர்க்கும் வேலையைச் செய்கிறார்கள்.

புலம் பெயர் பெரும்பாலான மக்கள் இந்தப் பிரச்சினைகளால் துன்பப்; படுபவர்கள்.முக்கியமாப் பெண்கள், தாய்நாட்டில் குடும்பத்தாரின்;,அறிவுரைகளுடன், உதவியுடன் பல மாற்றங்களை முகம் கொடுத்தவர்கள் வெளிநாடுகளின் தனிமையான வாழ்க்கையில் தங்கள் பிரச்சினைகளை மனதில் அமர்த்தி மறைத்து மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கு ஊரில் இருந்த அடையாளம், மதிப்பு, என்பன புலம் பெயர்ந்ததும் மறைந்து விடுகிறது. அவர்களின் அடையாளம் வெளி நாட்டு அகதிகள், அல்லது தமிழ் அகதிகள் என்று பொறிக்கப் படுகிறது. மனத்தை வருத்துகிறது. மன அழுத்தம் வர வழியமைக்கிறது.

அதை உணர்ந்து கொண்டாலும் உதவி தேட. புதிய நாட்டின் கட்டுமானங்களை, வைத்திய உதவிகளைப் பற்றிய அறிவும் தெளிவும் ஆரம்பத்திலிருக்காது.

மன அழுத்தம் என்பது 45-49 வயது கால கட்டத்தில் இனபேதமின்றி ஆண் பெண் இருபாலாருக்கும் அதிகமாகவிருக்கிறது என்று இங்கிலாந்து அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.இக்கால கட்டம் அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வரும் கால கட்டமாகும்.

பிள்ளைகளை வளர்க்கும் தாய்களின் பிரச்சினைகள், குழந்தைகளின் இரட்டைக் கலாச்சார அணுகுமுறையால் குழம்பித் தவிக்கிறது. புதிய விஞ்ஞான வளர்ச்சியால் இந்தத் தலைமுறை எங்கள் கால வாழ்க்கையை விட அதிக அறிவு பெற்ற வாழ்க்கையைத் தழுவுகிறார்கள். மேற்கத்திய படிப்பு முறை அவர்களின் ‘தனித்துவத்தைப்’பலப் படுத்துகிறது.

இலங்கையில் தாய் பேச்சுக் கேட்டு வளர்ந்த பாரம்பரியத்தின் அடுத்த தலைமுறை மேற்கத்திய சுதந்திர தனித்துவத்தை முன்னெடுக்கும்போது இறுக்கமான வெளிநாட்டுக் கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்த பெற்றோருக்கு அதிர்;ச்சி வருகிறது. அதைத் தொடர்ந்து மன அழுத்தம் வருகிறது.’நீ சரியாகப் பிள்ளை வளர்க்கவில்லை’தகப்பன் தாயைச் குற்றம் சாட்டுவது எங்கள் கலாச்சாரத்தில் சாதாரணம்.

சமுதாய ரீதியாகப் பார்த்தால் பெண்கள்,அவர்கள் வாழும் கலாச்சாரத்தின்; பிரசார,
‘பிம்பங்களாக வாழ வேண்டும’; என்று அவர்களின் முதியோர்களும் அவர்களை வழிநடத்தும் ஆணாதிக்கக் கட்டுமானங்களும் எதிர் பார்க்கின்றன. ‘தனித்துவ’ அறிவு. சிந்தனை என்பதைப் பெண்கள் வெளிப் படுத்தமுடியாத நிலை பல பெண்களுக்கு ஏற்படுகிறது. எதையும் பொறுத்துக் கொண்டு நல்ல தாயாக நல்ல மனைவியாக வாழ எதிர்பார்க்கிறது. பொறுமை என்பது நல்ல பெண்ணின் அடையாளமாகக் காலம் காலமாகச் சொல்லப் பட்டு வருகிறது.

அதனால் தங்கள் உடல் நல உள நலத்திற் பிரச்சினை ஏற்பட்டாலும் அவர்கள் பெரும்பாலும் வாய் விட்டுச் சொல்வதில்லை. அதுவும் புலம் பெயர் நாட்டில் பல்விதத் துன்பங்களை எதிர்நோக்கும் பல குடும்பங்கள் தங்கள் சுகநலத்தில் பெரிதாகக் கவனம் எடுக்க நேரமில்லை.அத்துடன் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்லி உதவி கேட்பதும் அரிது. மனநலப் பிரச்சினையை கவுரவப் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள்.இதை இரகசிய மன அழுத்தம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
‘ நான் மிகவும் ஆளுமையான தாய், மனைவி, குடும்பத் தலைவி’ என்ற பாத்திரத்தைக் காப்பாற்றப் பல போலி முக மூடிகளுடன் பவனி வருவோருமுள்ளனர். இவர்களின் மனஅழுத்தம் இரகசியமாகவிருக்கும் வெளியில் சிரிப்பார்கள் தனிமையில் பெருமூச்சு விட்டழுவார்கள்.

சில மனைவிமார் தங்கள் கணவருக்குச் சொல்லத் தயங்குவதுமுண்டு. தற்போதைய கால கட்டத்தில்,பொருளாதார நெருக்கடியால்,சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் வௌ;;வேறு நேரத்தில் வேலைக்குப் போவதால் ஒருத்தருடன் ஒருத்தர் மனம் விட்டுப் பேசவும் நேரமிருக்காது.

சாதாரண மன அழுத்தம், அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி வந்து போவது,அதாவது சட்டென்று கோபப்படுதல்,யோசிக்காமல் திட்டித் தொலைத்தல். அதை விடக் கூடிய அழுத்தம் ‘மூட்’ மாற்றம் நடக்கும். உடல் சார்ந்த வருத்தங்கள் வரும். நித்திரையில்லாவிட்டால் தலைவலி, சரியாகச் சாப்பிடாவிட்டால் வயிற்றுப் பிரச்சினைகள், நோய் எதிர்ப்புத் தன்மை குறையும்.

சரியான உணவுப் பழக்க முறைகள், அத்துடன் மனஅழுத்தங்களின் பாதிப்பால் மாறுபடுவதால், காலப் போக்கில் இருதய வருத்தங்கள் நீரழிவு நோய்கள் வருவதற்கு பாதையமைக்கிறார்கள். சிலகாலங்களுக்கு முன் இங்கிலாந்தில் சிறுபான்மை மக்களின் சுகாதார ஆய்வில்,இங்கிலாந்தில் 36 விகித ஆண்களும் 46 விகிதப் பெண்களும் ஏதோ ஒரு இருதய வருத்தத்தால் பாதிக்கப் படுகிறார்கள என்று சொல்லப் பட்டது.

அத்துடன் ஆழ்ந்த மன அழுத்தத்தால் ‘தனித்த’ வாழ்க்கை நிலைகளும் உருவாகும். யாரையும் பார்க்கப் பிடிக்காமல் வீட்;டில் அடைபட்டுக் கிடப்பதும்,வெளியுலகத்தைக் கடந்த ஒரு இருட்டுப் பாதைக்குள் வாழ்வதுபோல் தோன்றும்.இந்த நிலை நீடித்தால், அவர்களின் புத்தி தடுமாறித் தற்கொலை செய்து கொள்வதும் அத்துடன் தங்களின் குழந்தைகளுடன் தற்கொலைகள் செய்வதும் நடந்திருக்கின்றன.

மன அழுத்தங்கள் புலம் பெயர்நாட்டுக்கு வந்து,புதிய சூழ்நிலை, மொழி,படிப்பு வேலை, வீடு. புதிய மனிதர்களுடன் பழக வேண்டியபோன்ற பல பிரச்சனைகள் மட்டுமல்லாது புலம் பெயர் பெண்கள் அவர்களது வீட்டில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

கனடாவுக்கு ஒரு வருடத்திறகுப் பலநாடுகளிலுமிருந்து 2500.00 மக்கள் அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள பெரும்பாலானவர்கள் மத்திய தரைக் கடல் நாடுகள், ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். முன்பின் தெரியாத நாட்டில் அவர்களின் கணவர் அல்லது உறவினரில் தயவில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் வரும்போது அவர்கள் பல இன்னலகளை அனுபவித்து மனநல அழுத்தத்திறகு ஆளாகிறார்கள்.
அங்கு அகதியாக வந்த 60 பெண்களின் மனத் துயர் பற்றி ஆய்வு செயயப் பட்ட கட்டுரையில் அவர்களின் மனத்துயர் பின்வருமாற பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இவர்கள் இலங்கைத் தமிழ், அத்துடன் ஈரானியப் பெண்களுமாகும்.

இவர்கள் தங்கள் வீடுகளில் தங்களுக்குச் செய்யப்படும் துஷ்பிரயோகங்களால் எவ்வளவு மன உளைவுக்கு ஆளாகிறார்கள் என்பதைச் சொன்னார்கள்.

  • அவமானப் படுத்துவது,அச்சுறுத்துவது,அடித்தல்,அறைதல்,மற்றும் தள்ளி விழுத்துதல்,பாலியல் கொடுமைகள்,கட்டாய பாலியல் உறவு,பாலியல் இழிவு படுத்தல். பெண்குழந்iயென்றால் கருக்கலைப்புச் செய்யச் சொல்லி வற்புறத்தல். குடும்ப அங்கத்தவர்களால் வன்புணர்வு, தெரிந்தவர்களாற் பாலியல் தொல்லை. வயதுபோன பெண்களின் பரிதாபமான ஒதுக்கிவைத்தல்.

முஸ்லீம் பெண்களின் துன்பத்தைப் பார்த்தால், பெண்உறுப்புச் சிதைவு போன்ற கொடுமைகள் புலம் பெயர் நாடுகளிலும் தொடர்கின்றன.

(இந்தப் பகுதி நேர்ஸிங் றிசேர்ச் அன்ட் பரக்டிஸ் ஜேர்னலிருந்து(2012) எடுத்த குறிப்புhகளாகும் 2012.)

வெளிநாடு வாழும் தமிழ் மக்களுக்கு அவர்களின் மனப் பாரத்தை நீக்கும் பொது பொழுது போக்கு விடயங்கள் மிகக் குறைவு. இந்திய சினிமாப் படங்கள், நாடகங்கள் என்பன பெண்களை உற்சாகப்படுத்தும் கருத்துடையவகைகளாக இருப்பது குறைவு. தமிழ்க் கலாச்சாரப் படைப்புக்கள் பெரும்பாலும் ஆண்சிந்தனையின் பிரதிபலிப்பாக வருபவை. குடும்பத்தில், சமுதாயத்தில் பெண்களை இரண்டாம் தரத்தில் வைத்திருப்பதை மாற்றியமைக்க முயலாதவை. இலங்கையில் வாழ்ந்த சமுதாய அமைப்பு பெரும்பாலும் இன்னும் தொடர்கிறது.

மன நலம், பொது நலம்,அறிவு விருத்திக்கு மற்றவர்களுடன் சேர்ந்தணைந்து வேலை செய்வது விரிவாக்கப் படவேண்டும்.அதாவது, புலம் பெயர் நாட்டில் ஒருபகுதியில் அத்தனை தமிழ் மக்களையும் இணைக்காமல்,தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் மட்டும் சேர்ந்து ஏதோ ஒரு அமைப்பையுண்டாக்கி அதைச் சுற்றி வருவது தொடர்கிறது. ஒன்று படாத சமுதாயம் உருக்குலைந்து போகும் என்ற பழமொழியைப் புரியாத புலம் பெயர் தமிழர் ஏராளமாக இருக்கிறார்கள். சில பெண்கள் குழுக்களும் அப்படியே தொடர்கின்றன். மன நலத்தை மேம்படுத்தும்,பெண்கள் சுகாதாரம், கல்வி நிலை பற்றிய கருத்தாடல்கள் மிகக் குறைவாகும். அது மட்டுமல்லாமல் அவர்கள் வாழும் நாட்டு அரசியல், பெண்கள் அமைப்புக்கள், பொது அமைப்புக்ளான, சுற்றாடல் சூழ்நிலை,பன்னாட்டுப் பெண்கள் கலை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பெண்கள் ஈடுபடுவது குறைவாக இருக்கிறது;.

ஆனாலும் கடந்த நாற்பது வருடங்களில் புலம் பெயர்ந்த பெண்களின் சுயசிந்தனையின் தெளிவாலும்,பிறநாடுகளில் வாழும் சுதந்திரத்திலாலும் பல நல்ல மாற்றங்களும் நடக்கின்றன.

தமிழ் அகதிகள் தலைவியாக 1980ம் ஆண்டு நடுப் பகுதியிலிருந்து மேற்கு ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறென். ஆரம்பத்தில் புலம் பெயர் பெண்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுதுக் கஷ்டப் பட்டிருந்தர்லும் காலக்கிரமத்தில்,சிறிய அளவில் என்றாலும் பல திறமைகள் வெளிப் படத் தொடங்கின.

1983ம் ஆண்டு தொடக்கம் அகதிகளாகவும் திருமணத்தின் பின் வெளிநாடு வந்தவர்களாகவும் பல்லாயிரம் தமிழ்ப் பெண்கள் மேற்குலகம் எங்கும் பரந்திருந்திருக்கிறார்கள். ஒரு சிலர் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டாலும் பெண்களின் இயற்கைக் குணமான எதையும் சகித்து ஆக்க பூர்வமான எதிர்காலத்தைக் காண்பது என்ற கோட்பாடு புலம் பெயர்ந்த தமிழ்ப் பெண்களிடைய மிகவும் நல்ல மாற்றங்களையும் உண்டாக்கியிருக்கிறது;.

உதாரணம் இன்று இப்போது நடந்து கொண்டிருக்கும்.’ பெண்கள் சந்திப்பாகும்’ 1988ல் ஆண்களின் நிகழ்ச்;சி நிரலுக்குள் தங்களின் குரலை அடக்கி வாசிக்க மறுத்து, பெண்கள் பிரச்சினையைப் பெண்களே பேச வேண்டும் என்று உத்வேகம் வந்தது. அதன் நீட்சியாகப் பெண்கள் சந்திப்பு நிகழ்வு தொடக்கப் பட்டது. புலம் பெயர் தமிழ்ப் பெண்களின் தனித்துவத் திறமையின் வெளிப்பாடு இந்து அமைப்பாகும். அத்துடன் பல பெண்கள் அவர்கள் வந்திறங்கிய நாட்டின் மொழி படித்து ஒரளவு நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

வெளிநாட்டு வாழ்க்கை தனிமையுடன், குழப்பத்துடன், பெரிய புரிதலில்லாமல் ஆரம்பித்தாலும், கிட்டத்தட்ட நாற்பது வருடங்களின் பின் பல புலம் பெயர்ந்த பெண்கள்,புதிய மொழி, புதிய கலாச்சாரம், தங்களின் பொருளாதார சுதந்திரம்,சுயமனித்துவத்தின் மகிமை போன்றவற்றை உணர்ந்து தலை நிமிர்ந்து வாழ்ந்து எதிர்கால இளம் தமிழ்ப் பெண்களுக்கு வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் பல நாடுகளில் நேரடியாகப் பார்க்கிறோம். நன்றி.

Posted in Tamil Articles | Leave a comment

Fear of the winter of 2022:

By Rajes Bala- 24.10.2022.

I fear for the forth coming winter of unbearable cold and dark,

as we may not have enough heat to warm us to be healthy,

I fear the old once at a vulnerable stage in their life with less immunity to fight the illness,

I fear for the babies who may not have enough food to grow appropriately.

I fear for the majority which may face poverty and hunger in the cold winter.

I fear the hospital staff who may work very hard to face up to the coming illnesses

I can visualise the queues very long in the food banks around the country,

I could hear the cough of the homeless with chest infections in the street corners

I may see the dead body of a poor man. stiff as a wood in the corner of the lane.

I may pass by the young person who has no where to go as he can not afford the rent in London,

I am already seeing the masses with sad eyes due to the worries of the winter ahead,

I talk to pensioners who have to decide whether to heat the place or eat to survive.

Winter is coming with dark clouds of pain and fear of survival.

Winter is always the time for hardship, isolation and illness,

Winter is the time one feels the fear of not enough to get by as one pay for the heat,

Winter is the time when the humanity feels it vulnerability as nature takes over.

What we can do to help others. as that’s the nature of our history until now.

Save energy as much as possible to get through the winter.

See the way to helping the vulnerable by keeping in touch and doing the best for them.

Hope for the situation to change to keep humanity from unwanted deaths and disasters .

Hope is the right mechanism to keep our mind in positive thoughts,

Hope has the mighty power to connect the humanity regardless the divisions,

Hope the situation may change and not many have to face bleak winter,

Hope and kindness is the mighty value of Britishness,

please remember that mantra in the winter. God bless you all.

Posted in Tamil Articles | Leave a comment

மன அமைதியும் நித்திரையும்.

ஓரு மனிதன் தனது வாழ்க்கையின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை நித்திரையில் செலவிடுகிறான்.நித்திரை என்பது இயற்கைச் செயல்பாடு.உழைத்த உடம்மைச் சீர் செய்ய நடக்கும் இயற்கையின் தொடர்ச்சி.மனித வாழ்க்கையில், மூச்சு.நீர்.உணவு என்பன எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு நேரத்தில் நித்திரை செய்வது எங்கள் மன அமைதிக்கும்,நோயற்ற வாழ்க்கைக்கும் இன்றியமையாததாகும்.

அழ்ந்த தூக்கம் என்பது உளத்தை ஒருமுகப்படுத்திய நிலையாகும்.அந்த அற்புதத்தை இயற்கை தொடர்கிறது.அதன் ஆரம்பம் மனித வளர்ச்சியின் மிக மிக முக்கியமான பகுதியாகும்.

வளரும் குழந்தை தாயின் மடியில் உலகத்தை மறக்கிறது. ஆழ்ந்து உறங்குகிறது.எதிர்காலத்திற்கான அத்தனை பரிமாணங்களையும் மூளை உற்பத்திசெய்ய அந்த நிலை மனிதனால் விளக்க முடியாத மாற்றங்களைந் செய்கிறது.

நிம்மதியான ஆழ்ந்த நித்திரையின் அற்புத பலன்களாக எங்களது,எண்ணங்களின் தெளிவு,சிறந்த சிந்தனையின் உந்துததலால் காத்திரமான செயற்பாடுகள்,எங்களைப் பற்றி ஆயந்தறியும் பக்குவம்,எங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துதல் அதாவது தியான நிலைக்குச் சமமான தூய உயர்நிலை என்பவற்றைக் காலக் கிரமத்தில் அடையலாம்.

நிம்மதியான நித்திரையின்மையால்,ஞாபக மறதி,மன அழுத்தம்,இருதய வருத்தங்கள்,டையாபெட்டிஸ்.எடைகூடுதல்,கான்சர்.இனவிருத்திச் செயற்பாடுகளிற் குறைகள் போன்ற வருத்தங்கள் வரவழியுண்டு. கிரகிக்கும் தன்மையும். விடயங்களைச் சீர்படுத்திப் பார்க்கும் ஆற்றலும் வலிவிழக்கும்.(அனலிட்டல் அப்றோச்).உணர்ச்சி வசப்படுவது கூடும்.

நித்திரை செய்யும் நேரத்திலும் எங்கள் மூளை இடைவிடாது வேலை செய்து உடம்பின் அத்தனை கலங்களுடனும் தொடர்பாகவிருக்கும். ஆழ்ந்த நித்திரையின்போது மூளையிலிருக்கும் கலங்கள் தொடக்கம் உடலின் மிக முக்கிய பகுதி;களான இருதயம்.நுரையீரல்கள்.எதிர்ப்புச்சக்தியைக் கவனிக்கும் எதிர்ப்பு சக்திகள் (இம்முயின் ஸிஸ்ஸ்டம்).உணவு செமிபாட்டு வலையம்,மன உணர்வுகளை(மூட்) போன்ற பல விடயங்களைப் பழுது பார்க்கின்றன.

எங்கள் நித்திரையின்போது மூளைக்கலங்களின் வேலையில் மூளையில் தேங்கி நிற்கும் வேண்டப்படாதவை சுத்தம் செய்யப் படுகின்றன.உதாரணமாக ஆத்திரத்துடன் எரிந்து விழுந்து கொண்டிருந்தவர் நல்ல நித்தரையின்பின் அமைதியாகச் செயற்படுவதை அவதானிக்கலாம்.

மிகவும் அதிக பணம் வாங்கி ஒரு மனிதனின் மனப் பிரச்சினைகளக்கு வழி சொல்லும் வைத்தியரை விட ஆழ்ந்த நித்திரை ஒரு மனிதனின் கோபதாபங்களை மட்டுப் படுத்தும். அதைத்தான் ஆங்கிலத்தில் ‘ஸ்லிப் ஒன் இற்’அல்லது ‘ஸ்லிப் இற் ஓவ்’என்று சொல்வதாகும்.

அளவான,அமைதியான நித்திரை மூளைக்கு மிகவும் அவசியம்.எங்கள் நாளாந்த வாழ்க்கையில் எங்கள் மூளை, சிந்தனை, நினைவாற்றல்,உணர்ச்சி, தொடுதல்,இயக்கத் திறன்கள்,பார்வை, சுவாசம்,வெப்பநிலை,பசி,மற்றும் நமது உடலை ஒழுங்கு படுத்தும் ஒவ்வொரு செயல் முறையையும் கட்டுப் படுத்துகிறது.

எங்கள் மூளையின் முக்கிய சுரப்பியான் ஹைப்போதலமஸில் உள்ள கலங்கள் (ஓரு கச்சான் விதையளவானது) எங்களிள் நித்திரைக்கு முக்கியமான (கொன்ட்ரோலரான) வேலையைச் செய்கிறது.
மூளையின் அடிப்பாகத்திலிருக்கும் ப்ரயின் ஸ்ரெம் நித்திரையையும் விழிப்பையும் செயற்படுத்துகிறது.
மூளையின் இருக்கும்; பினியல் சுரப்பிகள் மெலரோனின் என்ற இயக்கு நீரால் நித்திரைக்கு உதவுகிறது. பிPனியல் சுரப்பியை மூன்றாம் கண் என்று சொல்வதுண்டு. உறங்காமல் வேலை செய்யும் அற்புதம்.இது ஒரு நெல் அளவானது. நித்திரைக்குத் தேவையான மெலடோனின் என்ற ஹோர்மனைச் சுரந்து உதவுகிறது.

(நாஸனல் ஸ்லீப் பவுண்டேசன்).
-பிறந்த குழந்தை-0-3மாதம -;14-17 மணித்தியாலங்கள்
-குழந்தை 4-12 மாதம். 12-16 மணித்தியாலங்கள்;.(ஒரேயடியான நித்திரையல்ல.பாலுக்கு எழும்பி அழுவார்கள்.
-1-2 வயது. 11.12.மணித்தியாலங்கள்ம்.
-குழந்தை.3-4.வயது- 10.13 மணித்தியாலங்கள்
-பாடசாலைப் பருவம்,6-12வயது- 9-12 மணித்தியாலங்கள்
-வளரும் பருவம்,13-18 வயது -8.10 மணித்தியாலங்கள்
-வளந்தவர்கள்.18-60 வயது. 7 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட நேரம்.
-61-64 வயதுடைNhர். 7-.9 மணித்தியாலங்கள்;.
-65 வயதுக்கு மேற்பட்டோர். 7-8 மணித்தியாலங்கள்.

எங்களின் மூளை 60 விகிதம் கொழுப்பாலும்,மிகுதி 40 விகிதம் நீர்;,புரதம் என்பவைகளால் நிறைந்த 3 இறத்தல் எடையுள்ள ஒரு அற்புதக் கருவியாகும்.இதில் இரத்தக் குழாய்கள்,நியுரோன்ஸ்,கிளியல் கலங்கள் உள்ளிட்ட நரம்புகள் உள்ளன.

ஓவ்வொரு பகுதியும் தங்களின் குறிப்பிட்ட வேலையைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கின்றன. (க்ரேய்.வைட் மற்றர்ஸ்)

மூளை, உடலின் அத்தனை பாகத்திலுமுள்ள பல (கெமிகல்) வேதியலுக்குரிய-இயைபியலுக்குரியதும் மினசார (எலக்ட்ரிக்கல்) சைகளை(சிக்னல்ஸ்) தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டும் பெற்றுக்கொண்டுமிருக்கிறது.அவற்றிலிருந்து உடலின் சுக நிலையை அறிகிறது.உதாரணமாக எங்களின் களைப்பு நிலை,மனக்கலக்க நிலை போன்றவை.

சாதாரண மனிதனின்; எடையின் 2 விகித எடையைக்கொண்ட மூளை,ஒவ்வொரு இதயத் துடிப்பின்போதும் பாய்ந்துகொண்டிருக்கும் 20 விகிதமான குருதியை மூளைக்கு அனுப்புகிறது.; இதில் கணிசமான அளவு பீனியல் கிலாண்டசுக்குப் போகிறது.பீனியல சுரப்பி, சேக்கேடியன் றிதம் என்ற வித்தில் உங்கள் விழிப்பு தூக்க நிலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்.

மூளையின் முன்பக்கம்: ஒரு மனிதனின் (பேர்சனாலிட்டி) அடையாளத்தை உருவகப் படுத்துகிறது. சட்டதிட்டங்கள்.பேச்சு போன்ற பல விடயங்களுடன் இணைந்தது.;

பெரிய பகுதியான செரிப்ரம் எனப்படும் மூளையின் முன்பகுதி (க்ரேய் மட்டர் செரிப்ரல் கோர்ட்டெக்ஸ்),அதன்மத்தியிலுள்ள வைட் மட்டர் என்பதும் சேர்ந்து சூடு.பேச்சு,மனச்சாட்சியான ஜட்ஜ்மென்ட்,சிந்தனை,காரணங்கள்,பிரச்சினை தீர்ப்பது,மன உணர்வுகள் -இமோஷன்ஸ், அத்துடன் கல்வியறிவு போன்றவற்றைக் கவனிக்கிறது.அத்துடன் பார்வை,கேள்வி ஙானம்,தொடுதல்.போன்றவையும் அடங்கும்.

மூளையின் செரிப்ரத்தை மூடியிருக்கும் செரிப்ரல் கோர்ட்டெக்ஸ்.,இடது பக்கம் உடலின் வலது பக்கத்தையும் வலது பக்கம் உடலின் இடது பக்கத்தையும் கொன்ட்ரோல் பண்ணுகின்றன.

பிட்யுட்டரி சுரப்பி: மாஸ்டர் சுரப்பி என்றழைக்கப்படும். இது எங்கள் உடல் இயக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும்.இனவிருத்திக்குமானஇதைரோயிட்ஸ்,அட்ரனல்ஸ்,பெண்ணின் கருப்பை, ஆணின் விதைகள் போன்ன பல ஹோர்மோன்ஸ்களுக்குப் பொறுப்பாகவீpருக்கிறது.

ஹைப்போதலமஸ்சுரப்பி: இது பிட்டயுட்டரி சுரப்பிக்கு மேலிருக்கிறது.கெமிகல் செய்திகளுக்குப் பொறுப்பானது. உடல் சூட்டை றெகுலெட் பண்ணுகிறது. முக்கியமாக நித்திரைக்கு ஒத்திசைக்கிறது.(வெளியில் இருக்கும் அதிக சூட்டால்; நித்திரை வராது).பசி,தாகம். போன்றவற்குப் பொறப்பாகவிருக்கிறது. ஏதொ ஒரு வித்தில் உணர்வுகள்,ஞாபகங்களுடன் இணைந்திரக்கிறது.

பினியல் சுரப்பி:மெலனினைச் சுரக்கிறது.இரவு பகல் போன்ற உணர்வுகளுக்குக் காரணியாக இருக்கிறது.’சேக்கார்டியன் றிதம்’; என்ற ‘நித்திரையும் விழிப்புக்குமான’இயற்கையின் தாள லயத்திற்குப் பொறுப்பாகவிருக்கிறது.

பெரிய பகுதியான செரிப்ரம் எனப்படும் மூளையின் முன்பகுதி (க்ரேய் மட்டர் செரிப்ரல் கோர்ட்டெக்ஸ்),அதன்மத்தியிலுள்ள வைட் மட்டர் என்பதும் சேர்ந்து சூடு.பேச்சு,மனச்சாட்சியான ஜட்ஜ்மென்ட்,சிந்தனை,காரணங்கள்,பிரச்சினை தீர்ப்பது,மன உணர்வுகள் -இமோஷன்ஸ், அத்துடன் கல்வியறிவு போன்றவற்றைக் கவனிக்கிறது.அத்துடன் பார்வை,கேள்வி ஞானம்,தொடுதல்.போன்றவையும் அடங்கும்.

எங்களின் உடலுக்குத் தேவையான இரத்தோட்டத்தில் 15-20 (அல்லது 20-25விகிதம்) விகிதமான இரத்தோட்டத்தில் கோடிக்கணக்கான மூளைக் கலங்களை இயக்கி எங்களின் உடல் உள நலத்தைப் பாதுகாக்கிறது.எங்களின் மூச்சிலுள்ள பிராணவாய்வில் 20 விகிதம் மூளைக்கலங்களுக்குப் பாவிக்கப் படுகிறது. அதிக சிந்தனையிலிருக்கும்போது 50 விகித பிராணவாயுவையும் உடல் சக்தியையம் மூளை பாவித்து முடிப்பதாகச் சொல்லப் படுகிறது.
மூளைக்குப் பிராணவாய்வு போகாவிட்டால் 4-6 நிமிடங்களில் மரணமேற்படும்.
எனவே சுத்தமான,அளவான,மூச்செடுப்பதன் அவசியம் அமைதியான நித்திரைக்கும் எங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்பது தெரியும்.

மிருகங்களும் மனிதர்களைப்போலவே தங்களுக்குத் தேவையான அளவு நித்திரை செய்யும் தங்கள் வாழ்க்கையை நீருடன் இணைத்துக் கொண்ட மீனும் தூங்கும்.நீந்திக்கொண்டும் அல்லது,ஒரு.பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கிக் கொண்டும தூங்கும்.;.
உலகத்தில்; நிறையப்பேர்கள்; இரவு வேலை செய்கிறான்.இவர்கள் வைத்திய செவை, பாதுகாப்பு சேவை,வாகனப் போக்குவரத்து. தொழில்சார் உற்பத்தி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.இவர்களின் வாழ்க்கை சாதாரணமானவர்களை வி வித்தியாசமான முறைகளைக் கொண்டிருப்பதால் அதுசார்ந்த பிரச்சினைகள முகம் கொடுத்து பெரும்பாலோனோர் வாழ எத்தனிக்கிறார்கள்.

தூங்கமுடியாத காரணங்கள்: இன்று உலகில் வாழும் பெரும்பாலான மக்களின் நித்திரையின் விகிதம் பழைய காலத்தை விட வித்தியாசமானது. நவீன காலத்தின் வாழ்க்கை முறை மனித குலத்தின் பல பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக்கொண்டு வருகின்றன.கிட்டத்தட்ட 70 கோடி அமெரிக்கர்கள் சரியான நித்திரையின்றித் தவிக்கிறார்களாம்.

நித்திரையின்மைக்கு எத்தனையோ உடல்,உளம்,வாழ்க்கை நிலைசார்ந்த காரணங்கள் உள்ளன.
கவலைகள் பல தரப்பட்டவை.
குழப்பமான சிந்தனைகள்.வசதியற்ற சூழ்நிலை.படுக்கை.சத்தங்கள்.குளிர்,சூடு,வாழ்க்கை முறை அடிக்கடி பிரயாணம்.இரவு வேலை,நீண்டநேர வேலை,மதுபானம் அருந்துதல்.காப்பி போன்ற உற்சாக பானங்களை அருந்துதல்.அடிக்கடி எழுப்புதல்;(உதாரணம் இளம் தாய்கள்,வயது போன முதியவர்கள்).குறட்டை விடுதல்,நோய் நொடிகள்,மனநிலை சீரற்ற நிலை,ஏதோ ஒரு காரணத்தால் வந்த காயங்கள்.
நித்திரைக்கு உதவி செய்யும் சுரப்பிகளின் குறைந்த வேலைப்பாடு.

-சரியான நித்திரையில்லாவிட்டால்:தனி மனிதனுக்கு மட்டுமல்லால்,அவனின் குடும்பத்திற்கும் ஒட்டுமொத்த மனித இனமே துயர்படும். உதாரணமாக.ஒரு தகப்பனுக்குச் சரியான நித்திரையில்லாவிட்டால் அவனின் வேலை பாதிக்கும்.அவன் செய்யும் வேலையில் கவனம் செலுத்த விட்டால்,உதாரணமாக ஒரு பஸ் ட்ரைவர் சரியான கவனக்; கட்டுப்பாட்டுடன் தனது வேலையைச் செய்யாவிட்டால் விபத்து வரலாம்.ஒரு சத்திர சிகிச்சை வைத்தியர் கவனக் குறைவால் தனது நோயாளிக்குச் சரியான சிகிச்சை கொடுக்க முடியாமற் போகும்.மாணவர்களின் படிப்பு சரிவராமல் எதிர்காலம் பாதிக்கப் படும்.

-எடை கூடும்
-உற்சாக உள நலத்தின் முழு வெளிப்பாடும் குறையத் தொடங்கும
-எங்கள் சுரப்பிகளின் உற்பத்தியில் பிரச்சினை வரும்.( உதாரணம் சுரப்பிகளின் அதி தலைமைத்துவமான பிட்டியுட்டரி கிலாண்ட்ஸ் பிரச்சினை இனவிருத்திச் சுரப்பிகளிற் தாக்கம்);.
-எதிர்ப்புச் சக்தி பிரச்சினையாகும்.
-கிரகிக்கும் தன்மையில் தளர்ச்சி காணுப்படும்.

நல்ல அமைதியான,ஆழமான தூக்கநிலை பல நன்மைகளை எங்கள் உள உடல் நலம்சார்ந்த நிலைக்கு உதவுகின்றது.

  • வளரும் குழந்தைகளின் கிரகிக்கும் தன்மைகூடி; படிப்பில் திறமைகாட்டுவார்கள்.
    -பிரச்சினைகளின் தாக்கம் குறையும் ( ஸ்லிப் இற் ஓவ்)
    -சமுக உறவாடல்களில் திறமையும் வெற்றியும் கிடைக்கும் (சோசியல் இன்றக்ஸன்)
    -நோய் எதிர்ப்பு சக்தி கூடும்

நித்திரை செய்ய ஆரம்பிக்கம்போது, முதலாவது கட்டமாக:ஆழ்ந்த நித்தரைக்குச்; செல்லாத கட்டம்..எங்கள்,இருதயத் துடிப்பு.மூச்சு,கண்இமைகளின் அசைவு என்பன குறையத் தொடங்கும்.மூளைக் கலங்களும் பகல் நேரத்திலிருந்து இரவு வேலையை ஆரம்பிக்கும்.

இரண்டாவது கட்டமாக; இருதயத் துடிப்பு ,மூச்சு என்பனவற்றுடன் தசைகளும் தளரத் தொடங்கும்(றிலாக்ஸ).உடம்பின் சூடு தணியத் தொடங்கும்.இமைகள் மூடிவிடும்.மூளையலைகள் அமைதியாகத் தொடங்கும்.
மூன்றாம் கட்டமாக: ஆழந்த நித்திரைக்குள் சென்று விடுவோம்.நித்திரை ஆரம்பித்த முதற்கட்ட இரவுப் பகுதி நிண்ட நித்திரையில் ஆழ்த்தும். எழும்பமுடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.
4ம்; கட்டம் ஆர்.இ.,எம்.(றப்பிட் ஐ மூவ்மென்ட்) நித்திரை மிகவம் ஆழமானது. கனவுகள் வரும் கட்டம்.இவை, ஒரு மனிதனின்,கற்பனைகள்,எதிர்பார்ப்புகள்,ஆசைகள்,இலக்குகள். இழப்புகள், ஏக்கங்கள் என்பனவற்றைப் பிரதிபலிப்பதாகவிருக்கலாம். மறைத்து வைத்திருக்கும் துயர.சம்பவங்களின் எதிnhரலியாகவிருக்கலாம்.அல்லது தவிர்க்கமுடியாத சிக்கலுக்குள் அகப் பட்டுக் கொண்ட ஒரு தர்மசங்கட நிலையைப் பிரதிபலிப்பதாகவிருக்கலாம்.

மனிதர்களை மிகவும் துன்பப் படுத்திய அல்லது புரிந்து கொள்ள முடியாத, அல்லது புரிந்து கொள்ளத் தயங்கிய சில விடயங்கள் மனிதனின் அடிமட்ட உணர்வில் புதைந்து கிடந்து கனவாகச் சிலவேளை வருவதாகச் சிலர் சொல்வார்கள்.

கனவுகள்எங்கள் கலாச்சார சிந்தனையமைப்பில் மிகவும் முக்கியமானதாகக் கணிக்கப் படுகிறது. மனிதன் தன்னை மறந்து உறங்கும்போது அவனின் கனவுகள் ‘ஏதோ ஒரு கடவுள் அல்லது முன்னோரின் மறைமுகக் குறிப்பாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.( உதாரணமாக,கடவுள் கனவில் வந்து கோயில் கட்டச் சொன்னார்)

இப்படி எத்தனையோ பல உதாரணங்களைச் சொல்லாம்.ஆனால் கனவுகள் மதுவெறியில் அயர்ந்து தூங்குபவர்களக்கு வராது. இயற்கையான ஆழ்தூக்கத்தில் மனிதனின் அடிமனம் பல விடயங்களை. எடுத்தச் சொல்லிச் சென்று நகர்கிறது. பெரும்பாலான கனவுகள் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது ஞாபகமிருக்காது.ஒரு மனிதன் நல்ல ஆர்.இ. எம் நிலையிலிருக்கும்போது நான்கு கனவுகளைக் காணலாம் ஆனால் ஞாபகத்தில் இருப்பது ஒன்றிரண்டே.

எண்பது வயது வரை வாழும் மனிதன் தனது மூன்றில் ஒரு பங்கு வருடங்களை அதாவது- 26.6 வருடங்களை நித்திரையில் செலவிடுகிறான். இதில் எத்தனையோ மணித்தியாலங்கள் கனவாக முடிகிறது. ஆகக்குறைந்தது ஆறு வருடங்களென்றாலும் ஒரு மனிதன் கனவில் தோய்ந்தெழுகிறான் என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் கனவுகள் மனிதனின் அடிமனத்தில் ஆழ்ந்து கிடக்கும் பல தரப்பட்ட அடுக்ககளின் பிரதி பலிப்பாகும்.இங்கு பல ‘தரப்பட்ட அடுக்குகள்’ என்று குறிப்பிடுவது,ஒரு மனிதனின் சிந்தனையின் மிகவும் நுண்ணியமான பரிமாணங்களையே குறிப்பிடுகிறது.

அடிமனத்தின் அபிலாசைகள், சார்பாக சித்தர்கள் தொடங்கி,சித்த வைத்தியர்கள், மேற்கத்திய மனநல மேதாவிகள் பலர் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல கருத்துக்களைச் சொல்கிறார்கள்.அவற்றை விஞ்ஞான,சமய,சமூக நிலைக் கண்ணோட்டங்களில் ஆய்வு செய்து விவாதிப்பதும், விளக்கம் தருவதும் தொடர்ந்து நடக்கும் விடயமாகும்.

ஆனால் நான் இங்கு மன நல வைத்தியத் துறையில் மேன்மையிலிருந்த சிக்மண்ட் ப்ரோயிட் அவர்களின் மிகவும் பிரபலமான குறிப்பைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இட்,ஈகோ,சுப்பர் ஈகோ என்று மனித வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் மனித உணர்வுகளை வகைப் படுத்துகிறார்.

இட் (வெளி மனம்) என்று அவர் சொல்லும்போது ஒவ்வொரு பிறவியின் அடிப்படைத் தேடல்களைக் குறிபிடுகிறார்,அதாவது அன்பு. உணவு,பாதுகாப்பு போன்ற மிகவும் அடிப்படையான விடயங்கள். ஆன் கொண்டிசனல் ஆசைகள்.( உதாரணம் தாயன்பு) .இவை,ஒரு மனிதனின் வாழ்வின் ஆரம்பத்தில் சரியாகக் கிடைக்காவிட்டால் அவன் வளர்ச்சியில் பல பிரச்சினைகள் உண்டாகும் என்று சொல்லப் படுகிறது.

ஈகோ என்பது,அவன் வாழும் சூழ்நிலையின் நிமித்தம் அவனின் எதிர்பார்ப்பு (உள்மன தேடல்கள்),தன்னை பலப்படுத்திக் கொள்ள,ஆழ்ந்த சிந்தனையுள்ளவனாக்க தியானத்தைத் தேடுவதும் இதில் அடங்கும்.

அடுத்தது சுப்பர் ஈகோ:அடிமனச் செயற்பாடுகள். ஒருகாலத்தில் அடிமனத்தில் தெரிந்தொ தெரியாமலோ அடைந்து கிடந்தவற்றின் வெளிப் பாட்டால் அதிமிகச் செயற்பாட்டில் இறங்குவது. மனித இனத்தின் பாரம்பரியங்களால் சேகரிக்கப் பட்ட பல நினைவுகளின்,அதாவது. சமய,கலாச்சார, அறம்சார்ந்த நம்பிக்கைகளின் திறைசேரி என்று சொல்லலாம்.

ஈகோவும் சப்பர் ஈகோவும் ஒரு மனிதனின் செயற்பாடுகளை சரி பிழைபார்க்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இன்றைய சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலை பற்பல விதங்களில் ஒவ்வொர வினாடியும் ஒவ்வொரு வித்தியாசமான நிலையை முகம் கொடுத்து முடிவெடுக்கும் நிலையையுண்டாக்ககிறது.

இப்படியான பல பிரச்சினைகளை அடிமனத்தில் புதைத்து வைத்திருப்பவர்களுக்கு அமைதியான நித்திரை வராது. ஆதனால் அதற்கு நிவர்த்தி தேடிப் பல வித வழிகளை நாடுவார்கள். யோகாசனம், நீண்ட நடைப் பயணம் அல்லது தியான முறைகளை நாடுவார்கள்.

நிம்மதியும் அமைதியையம் தரும் அடுத்த நாள் விடிவும் விழிப்பும், சீரான சிந்தனைகளும் எங்களின் ‘நல்ல நித்திரை’யில் தங்கியிருக்கிறது.இந்த நித்திரைச் செயற்பாட்டை ‘சேக்கடியன் றிதம்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
இதை மனதில் வைத்துக் கொண்டு எங்களின் நித்திரையின் ஆழத்தை நிர்ணயிக்கலாம்.-
-எங்கள் வாழ்க்கையில் இன்று வெளியிலிருந்து கொட்டப்படும் தேவையற்ற விடயங்களைத் தவிர்த்துக் கொண்டால் எத்தனையோ மாற்றங்கள் வரும்.

கலாச்சாரங்களும் நித்திரையும்
-ஸ்பானிஸ்சியாஸ்ரா,.ஸ்பெயின் நாட்டில் மதியநேரம் அதிக சூடு காரணமாக வெளியிற் செல்லாமல்,நித்திரைக்குச் சென்று பின்னேரம் வேலைக்கப் போவார்கள்.
-பிராமண சுபமுகூர்தம்,அதிகாலை 3-6க்கும் இடைப் பட்ட காலத்தைப் புனித நேரமாகக் கருதுவார்கள்.
-கிராமப் பெண்கள் சூரியன் விழிக்கமுதல் வழித்துக் கொள்ள வேண்டும். ஆதிகாலத்தில் விவசாயம் மன்னிலையில் இருந்ததால் வயலுக்குச் செல்லும் கணவனுக்குச சாப்பாடு செய்து கொடுக்க எழும்பியிருக்க வேண்டும்.
-சமயக் கோட்பாடுகள் தொழுகை, கிறிஸ்தவம், சைவம்.(சிவராத்திரி- பழம் தமிழர்கள் உலகமெல்லாம் பரப்பிய மாமிசமுண்ணாமை, மது உண்ணாமை,ஒரு நாள் அமைதி) போன்ற சமய வணக்க, பிரார்த்தனை வேலைகளில் நித்திரை தட்டுப் படத்தப்படும்
-சித்தர்கள்.மனக் கட்டுப் பாட்டன் குறைய நேரம் நித்திரை செய்வார்கள்.
-விளையாட்டு வீரர்கள். கூட நேரம் வேலை செய்து உடல் பலத்தையும் சிந்தனை வளத்தையும் மேம் படுத்துவார்கள்
-நடிகர்கள்.கண்டபடி படப்படிப்பு என்று கஷ்டப்பட்டுப் பணம் எழைப்பார்கள்.

எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரியான அளவான நித்திரை தேவை என்பதை மனதில் கொள்ளவும்

Posted in Tamil Articles | Leave a comment