
கூட்டமொன்று போடுங்கள் காட்டமாகப பேசுங்கள்.
நாட்டமற்ற கருத்துக்களை வெட்கமின்றிக் கொட்டுங்கள்
வீட்டிலெந்த உணவுமின்றி விழி நிறைந்த கண்களுடன்.
வாட்டிவிடும் வறுமையினால் வாடும் தமிழில் வாழுங்கள்.
ஈழம் என்ற பெயரினிலே கோடி சேர்ச்கும் மிருகங்களே
ஏழை கண்ணீர் வாளொக்கும் என்ற மொழி தெரியாதா
காலம் தொடர் வஞ்சகரே நாளைவரும் உங்களுக்கும்
நாலும் இழந்திடுவீர் நன்மை மனம் அருகிவிட்டால்