அவளைப் பற்றிய அவனின் நினைவுகளைப் புதைத்துக்கொள்ள அவனின் உலகத்தில் எந்த இடமுமில்லை.
அவன் அவளைச் சந்தித்த நாளிலிருந்து அவள் சரியான நேரத்துக்கு இந்த பஸ் ஸ்டாப்புக்கு வருவது அவனுக்குத் தெரியும்..
இருவரும் ஒருத்தொருக்கொருத்தர் அறிமுகமாகிப் பேசத் தொடங்கி சில மாதங்கள்தானாகின்றன.
‘இவர்கள் யாராவது என்னைப்போல் யாரோ ஒருத்திக்காக எங்கேயோ காத்திருப்பார்களா?’
சிவசங்கர் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான்.
அப்படி நினைத்ததும் கிற்றார் ராகத்தில் ஏதோ அபஸ்வரம் விழுந்ததுபோல் அவன் மனம் குழம்புகிறது.
அதை அவன் தனது நண்பன் மனோகரனுக்குச் சொன்னபோது அவன் சங்கரை ஏறிட்டுப்பார்த்தான். மனோகரனுக்கு,’இந்திய அமைதிப்படை’ இலங்கைக்கு வந்து செய்த அக்கிரமங்களுக்குப் பின் ‘இந்தியாவைப்’ பிடிக்காது.
சிந்தியாவின் பெயர்,’இந்தியா’மாதிரி ஒலித்ததால் அவளை ஒரு நாளும் நேரிற் பார்க்காமலேயே அவளைத் தனக்குப் பிடிக்காது என்பதைக் காட்டிக்கொண்டான்.
குடும்பப்பொறுப்பும் ஏஜென்சிக்காரனுக்குக்கொடுக்கவேண்டிய கடனும் கொடுக்க அவன் மாடாக உழைத்தான்.சீக்கிய முதலாளி ஒருநாளைக்கு அவன் செய்யம் பன்னிரண்டு மணித்தியால வேலைக்கு பதினைந்து பவுண்ஸ்கள் தருவதாகச் சொன்னபோது, ஆறுநாள் வேலைக்குத் தொண்ணூறு பவுண்ஸ்கள் கிடைத்தால், அதில் வாடகைக்கும் சாப்பாட்டுக்கும் நாற்பது பவுண்ஸ்கள் போனாலும் ஐம்பது பவுண்ஸ்கள் மிச்சம் பிடித்து எப்படியும் கடன்களை கொஞசம் கொஞசமாக அடைக்கவேண்டுமென்று கஷ்டப்பட்டான்;.
வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டப்பட்டு உயிர் தப்பிவரும் இலங்கைத் தமிழ் இளைஞர்களைச் சுரணடும் இந்திய முதலாளியை மனோகரன் வழக்கம்போல் திட்டித் தீர்த்தான்.
சீக்கிய முதலாளியின்; கடை, உல்லாசப் பிரயாணிகளுக்கக் கவர்ச்சியான பொருட்களை விற்கும் கடை. ஓரே பிசியாகவிருக்கம். சங்கரின்வேல. பெட்டிகளில் வரும் சாமான்களை எடுத்து அடுக்கி வைப்பதாகும். பெரிய பெட்டிகளைத் தூக்குவதும் அடுக்குவதுமான கஷ்டமான வேலை செய்து விட்டு முதுகு வலியுடன் வீட்டுக்கு வரும்போது, எப்படி எனது கடனை அடைக்கப்போகிறேன் என்று அவன் பெருமூச்சு விடுவான்.
அவன் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில்,படித்து ஆளாகி, குடும்பத்தைக் கரையேற்றியபின் தான் ஒரு (அழகிய) பெண்ணைத் திருமணம் செய்து சந்தோசமாக வாழவேண்டுமென்ற பெரும்பாலான இளைஞர்களைப் போலப் பல கற்பனைகள் செய்தான்.அவையெல்லாம் லண்டன் வந்து ஒரு கடையில் வேலைசெய்யும்போது தகர்ந்து விட்டதாக உணர்ந்தான்.
மனோகரன் இப்படிப் பேசும்போது தனது கோபத்தை மிகக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் சிவசங்கர்.எப்படியும் உழைத்துத் தன் பொறுப்புக்களைத் தீர்த்துவிட்டுச் சுதந்திரமாக வாழ தன்னால் முடியுமட்டும் கடினமாக உழைத்தான் சிவசங்கர்.அவன் ஒருநாள் வேலையால் களைத்துப்போய், வீட்டுக்கு வருவதற்கு பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கம்போது,’ஹலோ பிரதர்’என்று சொல்லிக்கொண்டு மூன்று கறுப்பு இளைஞர்கள் அவனை வளைத்தார்கள்.அவனுக்குப் பயத்தில் வயிற்றில் புழு நெழியத் தொடங்கி விட்டது.
ஆசிய நாட்டு மக்கள் தங்க நகை அணந்துகொண்டு திரிபவர்கள் என்று கறுப்பு,வெள்ளையினக் குண்டர்கள் அவர்களைக் கொள்ளையடிப்பது லண்டனில் அடிக்கடி நடக்கும் விடயமாகும்.
வந்திருந்த மூவரில் ஒருத்தன், ஏதோ தான் வாங்கிக்கொடுத்த செயினைத் தடவுவதுபோல் சங்கரின் கழுத்தைத் தடவி அவன் போட்டிருந்த தங்கச் சங்கிலியை இழுத்தான். அது அவனின் அம்மா பிள்ளையார் பதக்கத்துடன் மகனுக்குப் போட்ட சங்கிலி. கறுப்புக் கொள்ளைக்காரன் கையில் பிள்ளையாhரின் பதக்கம் பதித்த சங்கிலி பளபத்தது.
அவன் கையில் அவனது மாமி போட்ட மோதிரத்தைக் கழட்ட அவர்கள் சிரமப்பட்டார்கள்.அவன் விரலில் இறுக்கமாக மோதிரம் போட்ட குற்றத்திற்காக அவன் முகத்தில் ஒரு குத்து விழுந்தது.
இத்தனை நிகழ்ச்சியும் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டது. அப்போது சட்டென்ற இரு போலிஸ் கார்கள் இருபக்கத்தாலும் வந்து அந்தக் கறுப்புக் கொள்ளைக்காரர்கள் தப்பி ஓடாதவாறு வளைத்தது. புடபடவென சில போலிசார் இறங்கினார்கள். கறுப்பு இளைஞர்கள் இந்த அதிரடிப் போலிசாரின் வருகைiயால் கலங்கிவிட்டார்கள். போலிசார் ‘உனக்கு என்ன நடந்தது?’ என்ற சங்கரைக் கேட்டார்கள்.அவன்,அவர்கள் அவனிடமிருந்து பறித்தெடுத்த அம்மா போட்ட பிள்ளையார் பதக்கமுள்ள தங்கச் செயின், மாமா தந்த கைக்கடிகாரம், பர்சிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாரச்சம்பளம், அதில் சரியாக எவ்வளவு இருக்கிறது என்பது பற்றிய எல்லாவற்றிற்கும் விளக்கம் சொன்னான்.
போலிசார் வழிப்பறியாளர்களைச் சோதனை போட்டபோது அவன் குறிப்பிட்ட அத்தனையையும் எடுத்தார்கள். அத்தனையையும்,அவர்களின் விசாரணை முடிந்ததும் போலிஸ் ஸ்ரேசனினுக்கு வந்து எடுக்கலாம் என்ற சொல்லிவிட்டுப் போலிசார் வழிப்பறிசெய்தவர்களைக் காரில் ஏற்றிக் கொண்டுபோனார்கள்.
அவன் இரவு பத்து மணிவரைக்கும் வேலை செய்து விட்டு வரும்போது அவளும் வருவாள்.
அவள் எங்கே வேலை செய்கிறாள் என்ற அவனுக்குத் தெரியாது.
அவன் லண்டனுக்கு வந்து சொற்ப மாதங்களே. அதனால் பல விடயங்களை இப்போதுதான் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறான்.
அவள் அழகான பெண் என்று அவனுக்குத் தெரியும். அடக்கமாக உடுத்திருப்பாள் பெரும்பாலான ஆங்கில இளம்பெண்கள்போலல்லாது மிகவும் அமைதியான பெண்ணாகத் தெரிந்தாள்.அவள் தன்னுடன் வலிய வந்தபேசியது அவனுககு ஆச்சரியமாகவிருந்தது.
அவன் தன் பெயரைச் சொன்னான்.
‘இரவில் இந்தப் பக்கத்தில் கவனமாகத் திரியவேணும்.. நல்லகாலம் நேற்று போலிசார் பக்கத்தில் ரோந்து போனதால் நீங்களும் உங்களது உடமைகளும் தப்பியது’ அவள் அவனுடன் பலகாலம் பழகிய மாதிரிப் புத்தி சொன்னாள்.’நேற்ற நடந்தது இவளுக்கு என்னவென்ற தெரியும்?’ அவன் தனக்குள் யோசித்தான்.அவனது ஆச்சரியம் அவளுக்குப் புரிந்தது.
‘நான் வரும்போது அவர்கள் உங்களை வழிப்பறிசெய்வதைக் கண்டு அந்த டெலிபோன் பூத்திலிருந்து போலிசுக்குப் போன் பண்ணினேன்’ என்றாள்.
‘ இந்த இடம் சோஹொ என்ற மிகவும் பிரசித்தமான இடம். டுரிஸ்டுகளும், நாடகக்கொட்டகைகளும், சினிமாத் தியேட்டர்களும், விபச்சார விடுதிகளும் நிறைந்த இடம். பிக் பாக்கட்டுகளும் வழிப்பறிக் கொள்ளையர்களையும் பிடிக்க இந்தப் பக்கப் போலிசார் மிகவும் திறமையான போலிஸ் படை வைத்திருக்கிறார்கள்’ அவள் சொல்லிக் கொண்டே போனாள்.
அப்படியான இடத்தில் இரவு பத்து மணிவரைக்கும் இவள் என்ன செய்கிறாள்?
‘என்ன செய்வது பரவாயில்லாத சம்பளத்தில் வேலை கிடைத்தபடியால் இந்த ஏரியாவில் செய்கிறேன்’ அவன் கேட்காமலே அவள் பெருமூச்சுடன் சொன்னாள்.
அதன்பின் அவர்கள் சந்திக்கும்போது ‘ஹலோ’வுக்கு அப்பால் பேசத் தொடங்கிக் கிட்டத்தட்ட தங்கள் வாழ்க்கை சுய சரிதத்தையே ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக் கொண்டார்கள்.
அவள்.அந்த இடத்துக்கு அண்மையிலிருக்கும் ஒரு கலைக் கல்லூரி மாணவி என்றும் ஒரு சோஹோ நைட்கிளப்பில் றிசப்ஸனிஸ்டாக மாலை ஏழமணியிலிருந்து பத்து மணிவரைக்கும் பார்ட் ரைம் வேலை செய்வதாகவும், தான் இருக்கும் இடத்திறகுக அருகில் இதைவிட நல்லவேலை கிடைத்தால தான் இந்த வேலையை விடுவதாகவும் சொன்னாள்.
அவன் தானொரு பல்கலைக்கழக மாணவனாக இருந்து அரசியற் பிரச்சினைகளால் படிப்பை நடுவில் முறித்துக்கொண்டு, லண்டனுக்கு வந்து வாழ்க்கைப் பிரச்சினையால்; ஒரு கடையில் ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணித்திலயாங்கள் வேலை செய்வதாகத் தன் துயர் சொல்லி ஒப்பாரி வைத்துக்கொண்டான்..
சிவசங்கரனை வழிப்பறி செய்ய வந்தவர்களையும் அவர்களிடமிருந்து காப்பாற்ற சிந்தியா செய்த உதவியையம் மனோகரனுக்குச் சொன்னபோது மனோகரன் சிவசங்கரை ஏற இறங்கப் பார்த்தான். ‘ சோஹோ என்ற இடத்தில அவள் நடுச்சாமத்தில் ஏன் வந்தாள்?’என்ற ஒருவிதமாகப் பார்த்துக்கொண்டு கேட்டான்.
அத்துடன் அவள் ஒருமாணவி, லண்டனில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மாதிரி அவளும் பார்ட் ரைம் வேலை செய்து உழைக்கிறாள். அவள் நைட் கிளப்பில் வேலை செய்தால் என்ன ஒரு நாடகத் தியேட்டரில் வேலை செய்தால் என்ன?.உழைத்தப் பணம் சேர்த்துத் தன் படிப்பைத் தொடரும் ஒரு மாணவியை இப்படித் தரக்குறைவாக எடைபோடவேண்டுமா?
அவன் ஏன் அப்படியெல்லாம் கற்பனை செய்கிறான் என்று சிவசங்கருக்குப் புரியவில்லை;.அவளோ அல்லது அவனோ ‘ஏதோ’விளையாட்டகளில் ஈடுபடவில்லை. அப்படியான உறவு வளர்வதாகச் சிவசங்கருக்குப் புரியவுமில்லை.
சிவசங்கரும் சிந்தியாவம், சந்தித்துக் கொள்ளும்போது பெரும்பாலும் தங்கள் வேலை விடயங்களைப் பற்றிப் பேசி தாங்கள் கஷ்டப்பட்டுவெலை செய்யும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.
‘அண்ணா நீங்கள் அழகான ஆண்பிள்ளை’ என்ற அவனின் சின்னத் தங்கை பெருமைப்பட்டதை அவன் மறக்கவில்லை.
சுpந்தியா இளமை பொங்கும் கவர்ச்சியான கலைக் கல்லூரி மாணவி. நண்பனின் போக்கில் கண்ட மாறுதல்களை அவதானித்த மனோகரன்,’நைட் கிளப்பில் றிசப்ஸனிஸிட்டாக வேலை செய்பவள் எப்படிக் கற்புடையவளாக இருப்பாள்?’ என்ற ஒரு பெரிய கேள்வியைக் கேட்டான்.
சிவசங்கருக்குக் கோபம் வந்தது. ‘நான் சீக்கிய கடையில் விஸ்கி போத்தல்களுடன் வேலை செய்கிறேன் நான் குடிகாரனில்லை’ என்ற பொருமினான். மனோகரன் சிந்தியாவைப் பற்றி அருவருப்பாகப் பேசியது அவனுக்கு மிகவும் கோபத்தைத் தந்தது.
‘ ஏனடா மச்சான் எகிறிக் குதிக்கிறாய் அவளுக்கு உன்னோட இன்பம் அனுபவிக்க விருப்பமென்பதை அவள்; சாடையாகச் சொன்னால் நீயேன் தயங்க வேணும். அனுபவித்து விட்டு மறந்து விடு’. மனோகரன் மிகச் சாதாரணமாக இருமனித உறவை இப்படி அசிங்கப் படுத்திப் பேசியது சிவசங்கருக்கு ஆத்திரத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் உண்டாக்கியது.
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்தானே?
இரவு பத்து மணிககு வேலை முடிய தனியாக வீட்டுக்கப்போகும் தைரியமுள்ளவள். தனது அழகை, தான் வேலை செய்யம் நைட் கிளப்புககு வருபவர்கள் வாயுறப் பார்ப்பதைத் தெரிந்தும் தெரியாதமாதிரி எடுத்தெறிந்து விட்டுத் தன் வேலையைச் செய்து விட்டுத் தன் வேலையிற் கவனமாக இருப்பவள்.இங்கிலாந்தில் தனிமனித சுதந்திரத்துள்ள சட்டபாதுகாப்பகளைச் சரியாக உணர்ந்து கொண்டவள். அளவுக்கு மீறிப்போனால் அடுத்த கணம் சட்டத்தைத் துணையாக அழைக்கத் தயங்காதவள். அதைத்தான் சிவசங்கரரின் பாதுகாப்பக்கும் செய்தாள் அவனை வழிபறிக் கொள்ளைக்காரக் கும்பல் வதைத்தபோது வழிப் போக்கர்கள்போல் ஏனோதானோ என்ற தன்பாட்டுக்குப் போகாமல்,போலிசுக்குப் போன்பண்ணி அவனைபப் பாதுகாத்தவள். அதையொட்டி நடக்கவிருக்கும் வழக்கில் சாட்சியாக வந்து சிவசங்கருக்கு உதவப்போகிறவள். மனோகரன், கற்பனைசெய்யும் ‘இனிய அனுபங்களை;மிகச் சுலபமாக அவளுடன் நடைமுறைப் படுத்தலாம் என்பது முடியாத காரியம்.
சந்தர்ப்ப சூழ்நிலையால்,’செக்ஸ்’ வியாபாரத்தின் முன்னிடமான ‘சோஹோ’ என்ற தர்மசங்கடமான இடத்தில் பெட்டிகள் தூக்கியடுக்கும் வேலைசெய்யும் பழைய பல்கலைக்கழக் மாணவன். அவனுககுச் சிந்தியாவைப் பிடிக்கும் என்பது ஏனோதானோ என்ற வித்தில் சொல்வது அவன் மனதில் அவள் எடுத்தக்கொண்ட இடத்தை அவமானம் செய்வதாக அவன் நினைக்கிறான்.
இருவருக்கும் விடுமுறையான ஞாயிற்றக் கிழமைகளில், பக்கத்திலுள்ள றீஜன்ட் பார்க்கில் ஒன்றாகப் போய் மார்கழிமாதக்குளிரில்,நீண்ட நேரம் நடந்து திரிந்து தங்கள் வாழ்க்கையில் நடந்த சில விடயங்களை, ஆரம்ப உறவு நிலையிலுள்ள பெரும்பாலான சோடிகள்போல் பகிர்ந்திருக்கிறார்கள்.
அவளை லண்டனின் மத்தியில் மிகப் பிரபலமான,’ ரவி சங்கர்’ உணவகத்தற்குக் கூட்டிக்கொண்டுபோனான். சாப்பாடு முடிய அவள் தனக்குரிய பங்கைக் கொடுத்தபோது அவன் திடுக்கிட்டான்.
; நான்தானே உன்னைச் சாப்பிடக் கூப்பிட்டேன். பில் கொடுப்பது என் பொறுப்பு ‘அவன் தர்மசங்கடத்துடன் முணுமுணுத்தான்’
.
‘ நான் உழைக்கும்பெண். நான் சாப்பிட்டதற்குப் பணம் கொடுக்க வசதியுண்டு’ தனது அழகிய விழிகளையுயர்த்தி அவனுக்குச் சிரித்தபடி பதில் சொன்னாள்.
உன்னுடன் இணைந்துகொள்ளவோ அல்லது நீ என் சுதந்திரத்தைத் தவறுதலாக எடுத்துக் கொள்வதை நான் விரும்பவில்லை’ என்று மறைமுகமாகச் சொல்கிறாளா?
அவனுக்குப் புரியவில்லை.
அவளைத் தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுபோய்ச் சமைத்துக் கொடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டான்.
அவள் தயங்கியபோது,’என்னில் நம்பிக்கையில்லையா?’ சிவசங்கர் வாய்விட்டுக் கேட்டுவிட்டான்.
கொஞ்ச தயக்கத்தின் பின் இவனின் வீட்டுக்குச் சாப்பாட்டுக்குவரச் சம்மதித்தாள்;.அவளுக்காகச் சிவசங்கர் காத்திருக்கிறான். மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் மனதில் பொங்கும் பல உணர்வுகளுடன் அவளுக்காகக் காத்திருக்கிறான்.
‘இறுக்கமாகவும் நெருக்கமாகவும் பழகச் சந்தர்ப்பம் வந்தால் விடாதே,ஆனால் பிடி கொடுக்காமல் நடந்து கொள்’ மனோகரன் தானொரு பாலியல் பேராசிரியர் மாதிரிச் சிவசங்கரின் காதல் எப்படி நடைமுறைப் படுத்தப்படவேண்டும் என்று புத்தி சொன்னான்.
மனோகரன் தன்னிடமுள்ள உண்மையான சினேகிதத்திற் சொல்கிறானா அல்லது மனோகரனுக்கு ஒரு பெண் சினேகிதிகளுமில்லாத ஆதங்கத்தில் சிவசங்கரைக் குழப்புகிறானா என்று அவனாற் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவனுக்குத் தான் சிந்தியாவைச் சாப்பாட்டுக்க அழைத்ததசை; சிவசங்கர் சொன்னான். சிவசங்கர் ஏன் புதிய சாப்பாட்டுத் தட்டுகளை வாங்கினான் என்ற மனோகரன் கேள்விக் குறியுடன் பார்த்தபோது, வேறு வழியில்லாமல் சிவசங்கர் உண்மையைச் சொல்லவேண்டி வந்தது.அதைக்கேட்டதும் மனோகரனின் முகத்தில் பரவிய உணர்வு அவனது பொறாமையா அல்லது கிண்டலா என்று சிவசங்கருக்குப் புரியவில்லை.
ஆனால் அவளில் அவனுக்குண்டான நுண்ணியமான இணைவான நெருக்கத்தை அவன் மறுக்கத் தயாராகவில்லை.
அவள் இன்னும் வரவில்லை. மழை சோ எனப் பெய்து கொண்டிருக்கிறது. வரமாட்டாளா? அவன் மனம் சிறகடித்தது.என்னில் அவளுக்கு நம்பிக்கையில்லையா?
நான் கண்ணியமற்றவன் என்ற அவள் நினைக்குமளவுக்கு நான் பழகவில்லையே? அவன் பல கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொண்டான்.
அவன் தனது கேள்விகளுக்கு மறுமொழி தேடமுதல் அவள் மழையில் குடையைப் பிடித்துக்கொண்டு வருவது தெரிந்தது.
‘ ஐ ஆம் வெரி சாரி’ உண்மையான மன்னிப்புக் கேட்கும் அவள் குரலில் அழகிய வீணையொலித்தது.
அவன் மறுமொழி சொல்லாமல் அவள் கன்னத்தில் உருளும் மழைத்துளிகளைப் பொறாமையாகப் பார்த்தான்.
அவள் தர்ம சங்கடத்துடன்,’ எதாவது குடிக்கப் போவோமா?’ அவள் பார்வை பக்கத்திலிருந்த ‘பப்பில்’ பதிந்தது.அங்கு போனதும் அவன் தனக்கு பியரும் அவள் ஆரன்ஞ் சாறும் ஓர்டர் பண்ணிக் கொண்டார்கள்.
கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் சிலவேளைகளில் இப்படி அவர்கள் ஒன்றாகப் ‘பப்புக்குப்’ போயிருக்கிறார்கள்.
அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
;நான் உன்னுடன் உனது வீட்டுக்குச் சாப்பிட வராவிட்டால் கோபித்துக் கொள்ள மாட்டாயே?’
அவன் தனது அதிருப்தியை மறைத்துக் கொள்ளத் தர்மசங்கடத்துடன் ஒரு புன்முறுவலைத் தன் முகத்திற் தவழவிட்டான்.
‘நான் உன்னைக் கட்டாயப் படுத்தவில்லையே’ அவன் எதிர்பார்ப்புக்குக் கிடைத்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சொன்னான்.
‘நான் நீண்டநேரம் யோசித்தேன்’ அவள் அவனை நேரே பார்த்துக்கொண்டு சொன்னாள். அவள் கண்கள் அழகானவை. பளிங்குபோன்ற அவள் முகத்தில் பதித்து வைத்த வைரம்மாதிரி அவனைப்பார்த்தன.
‘எங்களைப்பற்றி’ அவள பார்வை அவனில் இறுக்கமாகப் பதிந்து கிடந்தது.
‘எங்களைப்பற்றியா?’ அவன் குரலில் அவள் அவனையிணைத்து ‘ எங்களைப் பற்றியது’ என்ற சொன்னது அவனை நெகிழப் பண்ணியது.
‘ஆமாம் எங்கள் உறவைப் பற்றி’ அவள் அழுத்தமாகச் சொன்னாள்.
‘ நான் உன்னைச் சாப்பிடத்தான் என் வீட்டுக்கு அழைத்தேன்’ அவனுக்கு அவளின் பேச்ச தர்மசங்கடத்தையுண்டாக்கியது. மடமடவென்ற பியரைக் குடித்தான்.
‘ ஏன் என்ற தெரிந்து கொள்லாமா?’ அவனது ஏமாற்றத்தை, அவமான உணர்வை மறைத்துக்கொண்டு அவன் கேட்டான்.
‘ நாங்கள் இப்போது நல்ல சினேகித்களாகப் பழகுகிறோம்..அப்படியே கொஞ்சக் காலம் இருக்கமுடியாதா?’
அவள் குரலில் ஏதோ ஒரு கெஞ்சல். வாழ்க்கை முழுதும் நல்ல சினேகிதர்களாக இருக்க முடியாதா என்று அவள் கேட்கவில்லை. கொஞ்ச காலம் இப்படியே இருக்க முடியாதா என்று கேட்கிறாள்.
அப்படிச் சொல்வதற்கான விதை விதைத்த மனோகரனிலும், அதைத் தன் மனதிலிருந்து அகற்றாமலிருந்த தன்னிலும்; அவனுக்குக் கோபம் வந்தது.
அவன் அப்படிச் சொன்னதும் அவள் ஒருதுளியும் பதற்றப் படாமல் அவனை அன்புடன் பார்த்தாள்.
அவனுக்கு அங்கிருப்பதே தர்மசங்கடமாகவிருந்தது.