-
Recent Posts
- Another award-Thank you all May 27, 2022
- தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய ஆய்வுரை. May 27, 2022
- The Banks of the River Thillai May 27, 2022
- கொரோணா ஹொட்டேல் May 27, 2022
- ‘The new Variant-continuing Covid saga’ May 27, 2022
- ரத்தினம் அப்பா April 11, 2022
- ‘காதலில்ச் சரணடைதல்’ April 3, 2022
- ‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’ February 27, 2022
- ‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’ February 27, 2022
- பாரதியின் ஒரு சிறுகதை:’;ஸ்வர்ணகுமாரி.;விமர்சனம்.5.1.22 February 3, 2022
Monthly Archives: November 2015
‘மாமி’
யாரோ கதவைத் தட்டுகிறார்கள். இந்த நேரம் வருவது ஒன்று பால்க்காரனானவிருக்கும் அல்லது எதையோ விற்கவரும் சேல்ஸ் மனிதர்களாகவிருக்கும்.. கொஞ்ச நேரத்திற்கு முன் தபாற்காரன் தந்து விட்டுப் போன- ஊரிலிருந்து வந்த கடிதம் எனது கையிலிருக்கிறது. பெற்றோர், உற்றார், ஊரிற் தெரிந்தவர்கள், என்ற அடிப்படையில் பழைய நினைவுகளை, புதிய ஏக்கங்களைக் கொண்டுவரும் கடிதங்கள். இப்போது வந்த கடிதம் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘ஈஸ்வரா நீ எங்கே?’
லண்டன் 1995. பார்வதியாம் அவள் பெயர். மெலிந்து,சுருங்கிய தனது கறுத்த உடலை, சிவப்புப் பொட்டுக்கள் நிறைந்த சேலையால் மூடிக்கொண்டிருந்தாள்.அவளுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கலாம். அல்லது அதற்கும் கூடவாகவிருக்கலாம். ‘இந்தப் பெண்தான் நான் சொன்னவள்…அவளுக்கு விளங்கப் படுத்திச் சொல் கோர்ட்டில் என்ன கேட்பார்கள் என்று. பயமில்லாமல் எல்லாவற்றையும் சொல்லச் சொல்.’ எனது சினேகிதி சகிலா அந்தப் பெண்ணிடம் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘அரை குறை அடிமைகள்’
(லண்டன் 1983) கனடா,’தாயகம்’ பிரசுரம்.01.10.1983 தன்னுடன் வேலை செய்யம் டொக்டர் ஸ்டிவனின் முகபாவத்தைப் பார்த்துவிட்டு, இவன் என்ன நினைக்கிறான் என்று டொக்டர் சண்முகலிங்கத்தால் திட்டவட்டமாக எதையும் முடிவுகட்ட முடியவில்லை. ஸடிPவனின் முகத்தில் வரும் உணர்ச்சிகளின் வடிவங்களைக் கண்டு பிடிப்பது மிகவும் அசாதாரணமான காரியங்களில் ஒன்று. இளமையும் அழகுமாய் உருண்டு திரண்டு கொண்டு திரியும் நேர்ஸஸைகை; கண்டாற்தவிர,மற்ற … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
”றோஸா லஷ்சம்பேர்க் வீதி”
(பேர்லின் 1991) குழந்தைக்கு நல்ல நித்திரைபோலும்,சரியாகப் பால்குடிக்காமலே தூங்கிவிட்டாள.; குழந்தையை இன்னொருதரம் எழுப்பிப் பால் கொடுக்கத் தொடங்கினால் வேலைக்குப்போக நேரமாகிவிடும். நேரத்துக்கு வேலைக்குப் போகாவிட்டால் இவளுடைய ஜேர்மன் முதலாளிக்குப் பிடிக்காது. வேலையால் நிறுத்தப்பட்டால்,இவளின் ஊதியத்தில் தங்கியிருக்கும் குடும்பம் தாங்காது. சுமதி,மெல்லமாகக் குழந்தையைத் தனது முலையிலிருந்து விலக்கினாள். குழந்தை,நித்திரைத் தூக்கத்தில், முலையைச் சப்புவதுபோல் சப்பிவிட்டுத்தூங்கிவிட்டது. இன்னும் இரண்டு … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘இப்படியும் கப்பங்கள்’
மூர்த்தி அவசரமாக வேலைக்குப் புறப்படுகிறான். அவனுக்குத் தேவையான மதியச் சாப்பாட்டை அவன் மனைவி லலிதா கட்டிக்கொண்டிருக்கிறாள். அவனுக்குப் பிடித்த சாப்பாடுகளைச் செய்து கொடுப்பதில் அவள் முக்கிய கவனம் எடுக்கிறாள். அவர்களின் குழந்தை அகிலா, தனது தாய் தகப்பனின் ஆரவாரத்தால் குழம்பாமல் அயர்ந்த நித்திரையிலிருக்கிறாள். குழந்தை அகிலாவுக்கு ஐந்து வயதாகிறது. உலகத்தைச் சரியாகப் புரியாத வயது. ‘லலிதா … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment