-
Recent Posts
- Another award-Thank you all May 27, 2022
- தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய ஆய்வுரை. May 27, 2022
- The Banks of the River Thillai May 27, 2022
- கொரோணா ஹொட்டேல் May 27, 2022
- ‘The new Variant-continuing Covid saga’ May 27, 2022
- ரத்தினம் அப்பா April 11, 2022
- ‘காதலில்ச் சரணடைதல்’ April 3, 2022
- ‘பிரித்தானியாவில் தமிழரின் வரலாறும் வாழ்க்கை மாற்றங்களும்;;’ February 27, 2022
- ‘மாந்தருக்குப் பயன் படும் மருத்துவ மானிடவியல்.’ February 27, 2022
- பாரதியின் ஒரு சிறுகதை:’;ஸ்வர்ணகுமாரி.;விமர்சனம்.5.1.22 February 3, 2022
Monthly Archives: April 2015
‘அட்டைப்பட முகங்கள்’
ஹொலண்ட. அ,ஆ,இ பத்திரிகைப் பிரசுரம். அரவிந்தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டழுதான்.’யாழ்ப்பாணத்தில் இன்னுமொருதரம் குண்டுவீச்சு. தேவாலயம் தரைமட்டம், இருபது முப்பது தமிழ் மக்கள் இறந்திருக்கலாம்’.இலங்கைப் பத்திரிகையை வாசித்ததும் அடக்க முடியாத சோகம் அழுகையாக மாற தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து அவன் அழுகிறான். தேவாலயத்துக்கு அருகிலிருந்த குடும்பத்தை அவனுக்குத் தெரியும். அங்கு குடிவாழ்ந்த ‘தேவசகாயம் மாஸ்டரும் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘பேய்களுக்கு யார் பயம்’?
யாழ்:’அலை’ பிரசுரம்-1881;. வீடு வெறிச்சென்றிருக்கிறது. ‘இன்று வெளியில் நல்ல நல்ல வெயில் அடித்தது,வீட்டுக்காரர் வெளியிற் போயிருப்பார்கள்’ மகாதேவன் தனக்குத் தானே நினைத்துக்; கொள்கிறான். ‘வெள்ளைக்காரர்கள், உல்லாசமாக வெளியிற் செல்ல,எப்போது கொஞ்சம் வெயிலடிக்கிறது என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள்’ அவன் நினைவுகள் நீழ்கின்றன. வேலைக்குப் போய் வந்த களைப்பில்,தன் கட்டிலிற் படுத்தபடி, ‘பெரும்பாலான மக்கள் வார விடுமுறையைச் சந்தோசமாகக் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘சார்த்தானின் மைந்தன்’
இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன்) பேர்ளின் 29.04.1945 (இரவு) தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிகளின் வெடிச்சப்தம் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் வாழும் அந்த நாயை மிகவும் பயப்படுத்திவிட்டது. வெளியில் ஓடியாடித்திரிந்த அந்த அல்ஸேஸியன் நாய் கடந்த சில மாதங்களாக இந்த பங்கரில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இயற்கை வெளிச்சத்தைக் கண்டே எத்தனையோ மாதங்களாகி விட்டன. பங்கரின் குறுகிய பாதைகளில் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
‘கறை படிந்தவர்கள்’
தாயகம்-கனடா, பிரசுரம் 17.12.1993 ‘இளம் வாசகர்களுக்குப் பிடித்தாக,ஆறுமாதம் தொடர்கதையாக வரத்தக்கதாக,அரசியல் கலக்காத ஒரு தொடர்கதை எழுதித்தருவாயா?’ பத்திரிகை ஆசிரியர் முரளி தனது பெரிய பற்கள் பளிச்சிடச் சிரித்தான்.அவனுக்கு முன்னாலுட்கார்ந்திருந்து அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அவனது நண்பன் கேசவன்,சிறிய புன்முறுவலைக் காட்டிக்கொண்டான். இருவரும் ஒருகாலத்தில் ஒன்றாகப்படித்தவர்கள்.அந்த ஒருகாலம் என்பது எத்தனையோ வருடங்களக்கப்பாற்பட்டது.முரளி எப்போது லண்டன்வந்து சேர்ந்தான் என்று … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment
ஜெயகாந்தன்—-யதார்த்த தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.லண்டன் 09.04.15 எங்களைப்போல் பலருக்கு இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிய மிக மிகப் புகழ் படைத்த தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தன் நேற்ற இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தபோது,எனது தொண்டை அடைத்துக்கொண்டது.நீர் பெருகின. நேற்றுக்காலையில், எனது கணனிப் பகுதிக்குப் போட எனது பழைய காலத்துக் கதையொன்றை அச்சடித்துக்கொண்டிருந்தேன். அந்தக்கதையின் கதாநாயகன் ஒரு ஜெயகாந்தன் அபிமானி, ஜெயகாந்தனின் … Continue reading
Posted in Tamil Articles
Leave a comment